மழை நனைய
மழை நனைய வைத்தது ஒரு நாள்…
அதில் மயங்கினேன்…
அலை கரையை தீண்டிய திருநாள்…
மனம் கிரங்கினேன்…
என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…
காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கூ கூ என ஒரு குயில் தேடிட…
வா வா என மறு குயில் கூவிட…
காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
இன்றே மாறிவிடுமா…
போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை நீ நீங்காதே…
நல்லதோர் வீணை செய்த பின்பு…
கொல்லையில் வீசி செல்லும் முன்பு…
உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…