கண்ணாளனே எனது கண்ணை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலையதேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கரநிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்…
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்…
எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்…
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்…

பெண் : ரத்தம் கொதிகொதிக்கும்…
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல…
சித்தம் துடிதுடிக்கும்…
புயல் எதிர்த்திடும் ஓா் இலை போல…
பனித்துளிதான் என்ன செய்யுமோ…
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது…
மூங்கில் காடென்று ஆயினள் மாதல்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலைய தேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்…
உன்னோடு நான் கண்டுகொண்டேன்…
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்…
என்னோடு நான் கண்டுகொண்டேன்…

பெண் : என்னை மறந்துவிட்டேன்…
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை…
உன்னை இழந்துவிட்டால்…
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை…
இது கனவா… இல்லை நினைவா…
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்…
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டு…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
கண்ணாளனே…


Notes : Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. கண்ணாளனே எனது கண்ணை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top