பிரியாதே
விழியாலே சொன்னாயடா…
நான் ரெண்டும் கேட்டேனடா…
இதழ் முத்தமிட்ட பின்னே…
அதன் ஈரம் காயும் முன்னே…
விழியாலே சொன்னாயடா…
நான் ரெண்டும் கேட்டேனடா…
இதழ் முத்தமிட்ட பின்னே…
அதன் ஈரம் காயும் முன்னே…
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…
ஹே சீதா… உயிர் நுழைய வாசல் தா…
ஹே சீதா… உன்னில் வசிக்க வாய்ப்பை தா…
ஹே ராமா… எனை பிரிய வேண்டாமா…
ஹே ராமா… நிழல் அறிய வேண்டாமா…
குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய்…
சுருங்கிடும் வானை காட்டினாய்…
வெறும் குமிழியில் புது நிறங்களை ஏன் ஊற்றினாய்…
இருண்டிடும் உலகை தீட்டினாய்…
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்…
காதலை ஏந்தி காத்திருப்பேன்…
கனவுகளாய் காத்திருப்பேன்…
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே…
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
மழைகொண்டு கவிதை தீட்டினார்…
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
சிரித்திடும் சிலையை காட்டினார்…