பூவனத்தில் மரமுண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுவர்ணலதாவித்யாசாகர்தம்பி (2006)

Poovanathil Maram Undu Song Lyrics in Tamil


பெண் : பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே பெண்ணே வா…

BGM

பெண் : அன்னை மடித்தாலாட்டிலே…
திண்ணைக்கதை நாம் கேட்டதும்…
தந்தை மேலே ஏறிக்கொண்டு…
அம்பாரிகள் நாம் போனதும்…

பெண் : வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி…
தங்கக்கம்மல் என்று சொல்லி…
தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மொட்டைமாடி வெண்ணிலவில்…
வட்டமாக நாம் அமர்ந்து…
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும்…
எங்கள் வீடுபோல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா…

BGM

பெண் : காற்றில் மரம் ஆடக்கண்டு…
வீட்டில் சென்று ஒளிந்தோமன்று…
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று…
தந்தை சொல்ல பயமேதின்று…

பெண் : பள்ளிவிட்டுப் பசியுடன்…
துள்ளித்துள்ளி வீடுவந்து…
ஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும்…

பெண் : காய்ச்சல் வந்து படுக்கையில்…
சொந்தம் எல்லாம் துடிக்கையில்…
அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்…
எங்கள் வீடு போல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா…

பெண் : பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே கண்ணே வா…

BGM


Notes : Poovanathil Maram Undu Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பூவனத்தில் மரமுண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading