| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பார் மகளே பார் |
Madhura Nagaril Song Lyrics in Tamil
—BGM—
ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
ஆண் & பெண் : கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…
—BGM—
ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்…
பொன் மேனிகள் ஜானகி தங்கம்…
—BGM—
ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்…
பொன் மேனிகள் ஜானகி தங்கம்…
மணி மாடத்திலே வந்து தோன்றும்…
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்…
பெண் : ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே…
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே…
ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே…
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே…
—BGM—
ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…
—BGM—
பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்…
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்…
—BGM—
பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்…
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்…
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்…
பெரும் காதலிலே களியாட்டம்…
ஆண் : எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்…
உயர் காதலிலே அவன் மன்னன்…
எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்…
உயர் காதலிலே அவன் மன்னன்…
ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…
—BGM—
ஆண் & பெண் : அந்தக் காட்சிகள் மாறியதேனோ…
நம் காதலை நாம் பெறத்தானோ…
ஆண் : அந்த தேவ மகள் இவள் தானோ…
பெண் : மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ…
ஆண் & பெண் : நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்…
நல் இன்னிசை பாடிடும் குயில்கள்…
—BGM—
ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…
—BGM—
Notes : Madhura Nagaril Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. மதுரா நகரில் பாடல் வரிகள்.

