| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| இளைய பாரதி | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | காவலுக்குக் கெட்டிக்காரன் |
Ammamma Song Lyrics in Tamil
ஆண் : அம்மம்மா… இதயம் எரியும் கொடுமை நடந்ததே…
பூ மாலை… கனலில் விழுந்து கருகிப் போனதே…
தீயோடு தீயாகித் தீந்தாயே… அம்மம்மா…
ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…
ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே…
புது மலர்தான் பொசுங்கியதே…
ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…
—BGM—
ஆண் : சோறூட்டிப் பார்த்திருந்து…
சொந்தம் என ஆதரித்த…
தாயவளும் தீ கொண்டாள் என்ன சதியோ…
ஆண் : தாலாட்ட தாயும் இன்றி…
சொல்லி அழ யாரும் இன்றி…
ஏங்கி அழுதே இங்கே ஏழைக் கிளியே…
ஆண் : ஒளியே மறைந்தே கிடக்க…
உலகே இருளில் தவிக்க…
அடிமை உயிர் தான் மலிவா…
விடிவே எமக்கு இல்லையா…
ஆண் : விழியில் தெரியும் விடிவே…
அது தினமும் எழுதும் முடிவே…
இங்கு வெடித்திடும் நெருப்பினில்…
கொடுமைகள் எரிந்திடுமே…
ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…
—BGM—
ஆண் : ஆண்டாண்டு காலம் இங்கு…
அடிமை என வாழ்ந்ததெல்லாம்…
நாளை முதலே இங்கே மாறி விடலாம்…
ஆண் : வாதாடிப் பார்த்ததெல்லாம்…
வீணாகப் போனதென்ன…
வாளை எடுத்தால் இங்கே நீதி பெறலாம்…
ஆண் : துணிவே துணையாய் இனி வா…
புலியாய் எழுவாய் மனிதா…
தடையே தகரும் இனியே…
தருமம் ஜெயிக்கும் நிஜமே…
ஆண் : கொடுமைச் சிறையும் உடைக்க…
ஒரு சபதம் எடுத்து வருவேன்…
இனி விடிந்திடும் பொழுதுகள்…
நமக்கென விடியட்டுமே… ஏ…
ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…
ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே…
புது மலர்தான் பொசுங்கியதே…
Notes : Ammamma Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. அம்மம்மா பாடல் வரிகள்.
