| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| இளைய பாரதி | மனோ & கே.எஸ்.சித்ரா | இளையராஜா | காவலுக்குக் கெட்டிக்காரன் |
Solai Ilankuyil Song Lyrics in Tamil
பெண் : சசச சநிச…
குழு : சசச சநிச…
பெண் : ரிரிரி ரிசரி…
குழு : ரிரிரி ரிசரி…
பெண் : ககரி ரிசசா…
குழு : சரி ககரி ரிசசா…
—BGM—
பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…
ஆண் : வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து…
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ…
பெண் : ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்…
ஆண் : நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ…
பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…
—BGM—
பெண் : காதலின் வானத்துச் சந்திரனோ…
வாலிப தேசத்துச் சூரியனோ…
காதலின் வானத்துச் சந்திரனோ…
வாலிப தேசத்துச் சூரியனோ…
ஆண் : தோளினில் தாவிடும் தாரகையே…
வானத்தில் ஏகிடும் தாமரையே…
தோளினில் தாவிடும் தாரகையே…
வானத்தில் ஏகிடும் தாமரையே…
பெண் : இசையே மீட்டிடு எனையே…
கனலே மூட்டிடு தினமே…
ஆண் : பூமகளே உனை தேடுகிறேன்…
பூவினில் வண்டென கூடிடத்தானே…
பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…
ஆண் : வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து…
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ…
—BGM—
பெண் : பாலோடு தேனூறும் பாத்திரம்…
ஆண் : நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்…
பெண் : பாலோடு தேனூறும் பாத்திரம்…
ஆண் : நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்…
பெண் : நான் என்றும் நீ என்றும் வேறில்லையே…
ஆண் : வாலிபம் போகுது வா முல்லையே…
பெண் : நான் என்றும் நீ என்றும் வேறில்லையே…
ஆண் : வாலிபம் போகுது வா முல்லையே…
பெண் : உயிரே காதலின் சுடரே…
விழியே பாடிடும் கவியே…
ஆண் : ஆயிரம் பூ மழை தூவிடுதே…
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல…
பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…
ஆண் : வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து…
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ…
பெண் : ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்…
ஆண் : நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ…
பெண் : சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி…
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ…
Notes : Solai Ilankuyil Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. சோலை இளங்குயில் பாடல் வரிகள்.
