பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளைய பாரதி | மனோ & எஸ். ஜானகி | இளையராஜா | காவலுக்குக் கெட்டிக்காரன் |
Ithazhenum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…
ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…
ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…
—BGM—
பெண் : காம தேவனின் கலைகள் யாவுமே…
பாவை மேனியில் படைத்திடவே…
ஆண் : காதல் ராஜியம் உதயமாகவே…
ராஜ மோகினி வரம் தரவே…
பெண் : வாள் ஏந்தும் உந்தன் தோளோடு…
தேனூற்றில் வந்து நீராடு…
ஆண் : ஆடை மேகமே பாரம் ஆகுமே…
தேக தாகமே வாட்டுதே…
பெண் : போதும் போதுமே தேவ தேவனே…
தாகம் தீரவே வேண்டுமே…
ஆண் : மோகப் பூங்கொடி நாணம் ஏனடி…
தேவை தீரவே ஓடி வா…
பெண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…
பெண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…
—BGM—
ஆண் : காதல் தேசமே நமது ஆனதே…
கனவு யாவுமே இனித்திடுதே…
பெண் : மோக மூச்சிலே கருகிப் போகுதே…
பாவை மேனியே தினம் தினமே…
ஆண் : ஏந்திழையே உன்னை ஏந்திடவே…
ஏங்கிடுதே என் வாலிபமே…
பெண் : காமன் பாணமே தோற்கும் போதிலே…
பூவை மேனியும் தாங்குமா…
ஆண் : நீயும் நானுமே சேரும் நேரமே…
நாணம் இன்னுமே வேண்டுமா…
பெண் : நாணம் என்பது நாளும் உள்ளது…
விலகி ஓடினால் என்னாவது…
ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…
ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
பெண் : மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…
ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…
Notes : Ithazhenum Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. இதழெனும் மடலிலே பாடல் வரிகள்.