பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி. ஸ்ரீனிவாஸ் | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பார் மகளே பார் |
Aval Parandhu Song Lyrics in Tamil
—BGM—
{ ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே… } * (2)
—BGM—
ஆண் : என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…
என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…
ஆண் : என் நெஞ்சுக்கு நினைவில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…
ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…
—BGM—
ஆண் : இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…
இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…
ஆண் : என் அன்புக்கு மகள் இல்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…
ஆண் : அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…
—BGM—
ஆண் : என் இதயத்தில் பூட்டி வைத்தேன்…
அதில் என்னையே காவல் வைத்தேன்…
அவள் கதவை உடைத்தாளே…
தன் சிறகை விரித்தாளே…
தன் சிறகை விரித்தாளே…
ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…
ஆண் : அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…
அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…
ஆண் : என் உரிமைத் தாயல்லவா…
என் உயிரை எடுத்து கொண்டால்…
என் உயிரை எடுத்து கொண்டால்…
ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…
—BGM—
Notes : Aval Parandhu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. அவள் பறந்து பாடல் வரிகள்.