பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பார் மகளே பார் |
Ennai Thottu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
ஆண் : முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…
ஆண் & பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
—BGM—
பெண் : ஆஹா… தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன்…
ஓஹோ… தள்ளாடி உள்ளத்தைத் தழுவக் கண்டேன்…
எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன்…
வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்…
பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
ஆண் : ஆஹா… வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன்…
ஓஹோ… வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன்…
ஆஹா… பிஞ்சு கொடியிடை கெஞ்சக் கண்டேன்…
பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்…
ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
—BGM—
ஆண் & பெண் : ஆஹா… மாலைக்கு மாலை மாயம் கண்டோம்…
ஓஹோ… வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம்…
ஓஹோ… சோலைக் கிளி என்று மாறுகின்றோம்…
சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்…
ஆண் & பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
—BGM—
Notes : Ennai Thottu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. என்னைத் தொட்டு பாடல் வரிகள்.