பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | தொடரும் |
Kanavanukkaga Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
பூமி இதைப் பெண் என்று போற்றும் உலகம்… ஹோ…
பூமியினும் மேலம்மா பெண்ணின் இதயம்…
அன்பை வளர்ப்பாள்…
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்…
ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
—BGM—
ஆண் : தெய்வ வீணை இதை இங்கு வீதியினில்…
போட்டது விதிதானா…
தேடி வந்த துணை வேறு மாலை இட…
செய்தது விதிதானா…
—BGM—
ஆண் : என்ன ஜென்மமடி பெண்ணின் ஜென்மம் இது…
சொல்லடி சிவசக்தி…
எந்த நாளிலடி இந்த வேதனைகள்…
தீர்வது சிவசக்தி…
ஆண் : தொடக்கம் எது முடிவும் எதுவோ…
எதுவும் இங்கு தெரியாது…
நடப்பதென்ன கதையா கனவா…
அதுவும் இங்கு புரியாது…
ஆண் : மாவிலைத் தோரணம் ஆடுது…
அங்கொரு வாசலிலே…
மங்கையினால் உயிர் ஆடுது…
இங்கொரு ஊசலிலே… ஏ…
ஆண் : கணவனுக்காக எதையும் செய்வாள் பத்தினி…
உயிரையும் கூட தருவாள் அந்த உத்தமி…
—BGM—
ஆண் : நாயன ஓசையில் அங்கே ஓர்…
வாழ்த்தொலி கேக்குதம்மா…
பேதையின் பாதையில் இங்கே ஓர்…
கானம் நெருங்குதம்மா…
ஆண் : அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை…
ஆரம்பம் ஆகுதம்மா…
அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை…
பயணம் ஓய்ந்திடுமா…
ஆண் : கணவனது வாழ்வுக்காக…
நொந்து நொந்து நூலானாள்…
தன் தலையில் தீயைத் தாங்கும்…
மெழுகுவர்த்தி போல் ஆனாள்…
வாழ்க்கையின் கணக்கினில்…
ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா…
—BGM—
ஆண் : மாதமும் தேய்ந்தொரு…
நாள் என நொடி எனப் போகுதம்மா…
விதி இதுவா அவன் எழுதும் கணக்கிதுவா…
Notes : Kanavanukkaga Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pulamaipithan. கணவனுக்காக பாடல் வரிகள்.