மகிழினி
காற்றோடு ஆடும் மலராக நீ ஆடிட…
முகில் என்னை வாழ்த்தி தூறுமே…
நீரோடு ஆடும் நிழல்போல நீ ஆடிட…
விட்டில்கள் கை தட்டி உன்னோடு சேர்ந்தாடுமே…
காற்றோடு ஆடும் மலராக நீ ஆடிட…
முகில் என்னை வாழ்த்தி தூறுமே…
நீரோடு ஆடும் நிழல்போல நீ ஆடிட…
விட்டில்கள் கை தட்டி உன்னோடு சேர்ந்தாடுமே…
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
இளையோர் சூடார்…
வளையோர் கொய்யார்…
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்…
பாணன் சூடான் பாடினி அணியாள்…
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த…
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை…
தூயா துணையாய் நீ வருவாயா…
தீயா வளர் காதல் தருவாயா…
பார்வை முதற்பார்வை கொண்டென்னை…
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா…
இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா…
இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா…
இதமாய் நெளியும் விரலில்…
கதை படிப்பாயா… ஹோ… ஓ… ஓ…
அப்பன் குடுத்த…
பூமிப் பந்தா…
நீ ஒதைச்சு ஆட்டம் போட…
ஒன்னப்போல உயிர்கள் உண்டு…
வாழ விடு அதையும் கூட…