தாமரைப் பூவுக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & கிருஷ்ணசந்தர்வித்யாசாகர்பசும்பொன்

Thamarai Poovukum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…
மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…

பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு…
கஞ்சி எல்லாம் சேர்தல் போல…
கண்டபோதே இந்த மூஞ்சி…
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள…

ஆண் : நாக்குல மூக்கையே…
ஏ ஏ… தொட்டவன் நானடி…
பார்வையால் உசுரையே…
ஓகோ… தொட்டவ நீயடி…

பெண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…

ஆண் : மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…

BGM

ஆண் : ஐயாறெட்டு நெல்லைப் போல…
அவசரமா சமஞ்ச…
அயித்த மக பஞ்சதுக்கு…
ஆதரமா அமஞ்ச…

பெண் : குட்டிபோட்ட பூனைப் போல…
காலச் சுத்திக் கொழஞ்ச…
பாவமென்னு நீவி விட்டா…
கல்லுப் போட துணிஞ்ச…

ஆண் : சொந்தக்காரன் நான்தானே…
தொட்டுப் பாக்கக் கூடாதா…

பெண் : கன்னம்தொடும் கை ரெண்டும்…
கீழேக் கொஞ்சம் நீளாதா…

ஆண் : இந்த நாட்டில் தீண்டமைதான்…
இன்னும் உள்ளதா…

பெண் : வயசுக்கு வந்தப் பூ…
ஒகோ… ஆசையே பேசுமா…
வண்டுக்கும் பூவுக்கும்…
ஒகோ… சண்டையா சத்தமா…

ஆண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…

பெண் : மாமன அள்ளி நான்…
தாவணி போட்டுக்க…
மாலையும் சூடவில்ல…

BGM

பெண் : கம்மாக்குள்ள ஒத்த மரம்…
அங்கே போவோம் மாமா…
கம்மாத்தண்ணி வத்தும்போது…
திரும்பிறுவோம் மாமா…

ஆண் : நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன்…
நீயும் கொஞ்சம் வாமா…
அங்கே இங்கே கையிப்படும்…
சொல்லிபுட்டேன் ஆமா…

பெண் : நிலாக் கறையை அழிச்சாலும்…
உன்னைத் திருத்த முடியாது…

ஆண் : பொரட்டிப்போட்டு அடிக்காம…
ஆமை ஓடு ஒடையாது…

பெண் : போகப் போக மாமனுக்கு…
புத்தி மாறுது…

ஆண் : கிள்ளவா அள்ளவா…
ஓகோ… சொல்லடி செய்யலாம்…
வேட்டியா சேலையா…
ஒகோ… பட்டிமன்றம் வைக்கலாம்…

பெண் : தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…

ஆண் : மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…

பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு…
கஞ்சி எல்லாம் சேர்தல் போல…

ஆண் : கண்டபோதே இந்த மூஞ்சி…
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள…

பெண் : மாமனே மாமனே…
ஒகோ… ஓங்கிட்ட ஒட்டவா…
பூமிக்கும் வேருக்கும்…
ஓகோ… சண்டையா சத்தமா…

BGM


Notes : Thamarai Poovukum Song Lyrics in Tamil. This Song from Pasumpon (1995). Song Lyrics penned by Vairamuthu. தாமரைப் பூவுக்கும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top