பூமியில் வானவில்
பூமியில் வானவில் பூத்ததே…
என்னிடம் காதலில் பேசுதே…
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்…
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்…
பூமியில் வானவில் பூத்ததே…
என்னிடம் காதலில் பேசுதே…
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்…
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்…
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…
மொகத்தின் திரையை விலக்கி பார்க்க…
துணிவும் இல்ல…
சாயும் பகல குதிச்சு பார்க்க…
ஒசரமில்ல…
திசையும் இழந்தேனே…
திசையில சுழன்றேனே…
அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…
கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே…
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே…
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி…
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…
பூ அவிழும் பொழுதில் Read More »