தூரமாய் கனா
தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…
தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…
ஒசர பறந்து வா வெரசாக நீயும்தான்…
ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும்தான்…
காணாம போச்சே செவத்த சிரிப்புதான்…
முகம் காட்டு ராசா இறங்கும் பாரம்தான்…
நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…
கடற் கர காத்து வீசுதே யாரால…
அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…
மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி…
வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி…
காற்றோடு நான் காணும் காட்சி…
கண்ணாடி தேர் போல ஆச்சி…
சிறகினை விரிக்குதே ஒரு வானமே…
பறக்கலாம் பறக்கலாம் நாமே…
பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…
சக உயிரே…
சக உயிரே…
சதையா நானும் கரைகளிலே…
நதி எனதே…
கடல் எனதே…
விதி யார் யாரோ எழுதியதிதே…
வானம் தாயாக…
பூமி நானாக…
வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக…
தகப்பன் சாமி நீயடி…
இரு விழியால் வரம் தருவாய்…
கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…