பிஞ்சு பிஞ்சு மழை
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…
ஒரே ஒரு ஊருக்குள்ளே…
ரெண்டு ராஜா இருந்தாராம்…
ஒரு ராஜா நல்லவராம்…
இன்னொரு ராஜா கெட்டவராம்…
யாரும் இல்லா பொன் நேரமே…
உன் மாயங்கள்தானே கண்ணோரமே…
காடும் காற்றும் கை வீசுமே…
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே…