| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அறிவுமதி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | சிறைச்சாலை |
Sempoove Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…
பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…
ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ… ஓஹோ…
பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ… ஓஹோ…
ஆண் : இமைகள் உதடுகள் ஆகுமோ… ஓ…
பெண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ…
ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…
பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…
—BGM—
ஆண் : அந்திச் சூரியனும் குன்றில் சாய…
மேகம் வந்து கச்சை ஆக…
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்…
பெண் : தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு…
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு…
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்…
ஆண் : தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்…
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா…
பெண் : நாளும் மின்னல் கொஞ்சும்…
தாழம்பூவைச் சொல்லி…
ஆண் : ஆசைக் கேணிக்குள்ளே…
ஆடும் மீன்கள் துள்ளி…
பெண் : கட்டிலும் கால்வலி கொள்ளாதோ…
கைவளை கைகளை கீறியதோ…
ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…
பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…
—BGM—
பெண் : இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று…
காத்திருக்கு உள்ளம் நொந்து…
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ…
ஆண் : அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு…
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு…
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே…
பெண் : விம்மியது தாமரை வந்து தொடும் நாளிலா…
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ…
ஆண் : முத்தத்தாலே பெண்ணே…
சேலை நெய்வேன் கண்ணே…
பெண் : நாணத்தால் ஓர் ஆடை…
சூடிக்கொள்வேன் நானே…
ஆண் : பாயாகும் மடி சொல்லாதே…
பஞ்சணை புதையல் ரகசியமே…
பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…
ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…
பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ… ஓஹோ…
ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ… ஓஹோ…
பெண் : இமைகள் உதடுகள் ஆகுமோ… ஓ…
ஆண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ…
ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…
பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…
Notes : Sempoove Song Lyrics in Tamil. This Song from Sirichalai (1996). Song Lyrics penned by Arivumathi. செம்பூவே பாடல் வரிகள்.
