செம்பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாசிறைச்சாலை

Sempoove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…

பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…

ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ… ஓஹோ…
பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ… ஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இமைகள் உதடுகள் ஆகுமோ… ஓ…
பெண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ…

ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…

பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…

BGM

ஆண் : அந்திச் சூரியனும் குன்றில் சாய…
மேகம் வந்து கச்சை ஆக…
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்…

பெண் : தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு…
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு…
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்…

ஆண் : தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான்…
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா…

பெண் : நாளும் மின்னல் கொஞ்சும்…
தாழம்பூவைச் சொல்லி…

ஆண் : ஆசைக் கேணிக்குள்ளே…
ஆடும் மீன்கள் துள்ளி…

பெண் : கட்டிலும் கால்வலி கொள்ளாதோ…
கைவளை கைகளை கீறியதோ…

ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…

பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…

BGM

பெண் : இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று…
காத்திருக்கு உள்ளம் நொந்து…
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ…

ஆண் : அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு…
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு…
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே…

பெண் : விம்மியது தாமரை வந்து தொடும் நாளிலா…
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ…

ஆண் : முத்தத்தாலே பெண்ணே…
சேலை நெய்வேன் கண்ணே…
பெண் : நாணத்தால் ஓர் ஆடை…
சூடிக்கொள்வேன் நானே…

ஆண் : பாயாகும் மடி சொல்லாதே…
பஞ்சணை புதையல் ரகசியமே…

பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…

ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…

பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ… ஓஹோ…
ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ… ஓஹோ…

பெண் : இமைகள் உதடுகள் ஆகுமோ… ஓ…
ஆண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ…

ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான்…
வந்தால் ஒரு வழியுண்டோ…

பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்…
முத்தாகிடும் முத்துண்டே…


Notes : Sempoove Song Lyrics in Tamil. This Song from Sirichalai (1996). Song Lyrics penned by Arivumathi. செம்பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading