பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | சித் ஸ்ரீராம் | யுவன் ஷங்கர் ராஜா | நானே வருவேன் |
Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…
ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன…
முன்னம் செய்த தவமோ என எண்ண…
கன்னக்குழி கதை நீளுவதென்ன…
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…
ஆண் : பால் முகம்…
பகல் இரவையும் மாற்றுவதென்ன…
பசுந்தளிரென ஆக்குவதென்ன…
கலங்கரை அவள் பார்வையே…
ஆண் : தேன் மழை…
தினம் தினம் எனை தீண்டுவதென்ன…
திசை மறந்திட தூங்குவதென்ன…
கதிர் ஒளி அவள் வார்த்தையே…
ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று…
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு…
என் வாழ்வில் நான் அதை…
பார்த்திட பூத்தவள் என் மகளே…
ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று…
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு…
ஓடாமலே உறைவது என்ன காலங்களே…
—BGM—
ஆண் : மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே…
நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே…
உன் கை விரலே ஒரு தூரிகையாய்…
தீட்டிடுதே என்னை ஓவியமாய்…
ஆண் : உன் இதழ்கள் பேசும் பேச்சை…
இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்…
இது போதும் இது போதும் என் மகளே…
ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…
ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன…
முன்னம் செய்த தவமோ என எண்ண…
கன்னக்குழி கதை நீளுவதென்ன…
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன…
ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று…
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு…
என் வாழ்வில் நான் அதை…
பார்த்திட பூத்தவள் என் மகளே…
ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று…
கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு…
ஓடாமலே உறைவது என்ன காலங்களே…
—BGM—
Notes : Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil. This Song from Naane Varuvean (2022). Song Lyrics penned by Yugabharathi. பிஞ்சு பிஞ்சு மழை பாடல் வரிகள்.