கண்ணே என் கண்மணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாகவிதை பாடும் அலைகள்

Kanne En Kanmaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே…

ஆண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்…
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்…
வாடி வாடி மானே…

பெண் : ராசா என் ராசாக் கண்ணு…
ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு…
ஒண்ணோட ஒண்ணா நின்னு…
தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு…

BGM

ஆண் : மாலைக்கும் மாலை…
என் மாமன் பொண்ணு சேலை…
அழைக்கும் வேளை அசத்தும் ஆளை…

பெண் : சேலைக்கும் மேல…
நான் சேர்ந்திருக்கும் சோலை…
கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ…

ஆண் : நீ கூறு வேளை…
இனி வேறேது வேலை…

பெண் : என் மாமன் தோளை…
தெனம் நான் சேரும் மாலை…
ஒண்ணு தாங்க கூரச்சேலை…

ஆண் : காலம் சேர்ந்ததும் மாலை மாத்தணும்…
காதல் கதை சொல்லி போதை ஏத்தணும்…
வாடி வாடி மானே…

பெண் : ராசா என் ராசாக் கண்ணு…
ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு…
ஒண்ணோட ஒண்ணா நின்னு…
தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு…

BGM

பெண் : உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கதை நூறு…
நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு…

ஆண் : கண்ணுக்குள் உன்னை நான் கட்டி வச்சேன் பாரு…
கலைப்பது யாரு பிரிப்பது யாரு…

பெண் : தேனோட பாலும்…
தெனம் நான் ஊத்த வேணும்…

ஆண் : பூவான வானம்…
அதில் போய் ஆட வேணும்…
இனி மேல என்ன வேணும்…

பெண் : நாளும் பொழுதெல்லாம் ஒன்ன நெனைக்கிறேன்…
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்…
ராஜா ராணி போல…

ஆண் : கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே…

பெண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்…
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்…
வாங்க வாங்க ராசா…

ஆண் : கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…

பெண் : ராசா என் ராசாக் கண்ணு…
ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு…


Notes : Kanne En Kanmaniye Song Lyrics in Tamil. This Song from Kavidhai Paadum Alaigal (1990). Song Lyrics penned by Gangai Amaren. கண்ணே என் கண்மணியே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top