கண்ணுக்குள்ளே
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
மழைகொண்டு கவிதை தீட்டினார்…
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
சிரித்திடும் சிலையை காட்டினார்…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…