Tag Archives: பி. உன்னிகிருஷ்ணன்

கண்ணைப் பறிக்குற

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.உன்னி கிருஷ்ணன், அருண்மொழி & கே.எஸ். சித்ராசிவாபூமகள் ஊர்வலம்

Kannai Parikkira Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…
குழு : எப்பா அட எப்பா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…
குழு : எப்பா அட எப்பா…

ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்…
அட பாவி நெஞ்சு துடிக்கும்…

ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே…
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்…

பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்…
திரு மார்பு தித்திக்கும்…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

BGM

ஆண் : இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும்…
இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்…

குழு : எந்நாளும் ஆணுக்கு ஏத்த…
பொண்ணு ஒருத்தி வேணும்…

BGM

பெண் : இளமை வயதில் வாங்கி அணைக்கவும்…
முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்…

குழு : எப்போதும் ஆணுக்கு ஏத்த…
பொண்ணு ஒருத்தி வேணும்…

ஆண் : இவள் போலொரு மனைவியும் வாய்த்தால்…
மூப்பு நேராது…

BGM

ஆண் : இவள் கூந்தல் மந்திரித்து வைத்தால்…
நோயும் வாராது…

ஆண் : உங்களுக்குன்னு பூத்த பூ…
வாடி போகாது…

பெண் : நான் காணும் மாங்கல்யம்…
நிறம் மாறிப் போகாது…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

BGM

ஆண் : கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும்…
கண்ணில் வைத்து காவல் காக்கவும்…

குழு : எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த…
ஆளு ஒருத்தன் வேணும்…

BGM

பெண் : வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும்…
வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும்…

குழு : எப்போதும் பொண்ணுக்கு ஏத்த…
ஆளு ஒருத்தன் வேணும்…

ஆண் : என் போலொரு ஆம்பள பார்த்தா…
பொண்ணு விடமாட்டா…

BGM

ஆண் : முந்தானையில் முத்தம் தந்தா…
மூச்சு விடமாட்டா…

ஆண் : தாலி கட்டி கேட்டா கூட…
தானா தரமாட்டா…

பெண் : அட தள்ளாடும் தாத்தாவுக்கும்…
என்னோட விளையாட்டா…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும்…
அட பாவி நெஞ்சு துடிக்கும்…

ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே…
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்…

பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும்…
திரு மார்பு தித்திக்கும்…

BGM

ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா…
என்னைப் பறிக்கிறதா…

ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி…
என்னை அழைக்குதடா…

BGM


Notes : Kannai Parikkira Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணைப் பறிக்குற பாடல் வரிகள்.


ஆகாயம் பூக்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபி.உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Aagayam Pookal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…

ஆண் : குட்டை வால் ஓணான் வேலிக்குள்…
குதித்தாடும் உற்சாகம்…
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்…
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்…

பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

BGM

ஆண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்…
கிளி மூக்கில் சந்தோஷம்…
சூரியனின் ரேகை மோதாமல்…
சொட்டும் பனி சங்கீதம்…

BGM

பெண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்…
கிளி மூக்கில் சந்தோஷம்…
சூரியனின் ரேகை மோதாமல்…
சொட்டும் பனி சங்கீதம்…

ஆண் : கொப்பளித்த நீரை யானைகள்…
துப்புவதில் குற்றாலம்…

பெண் : குட்டி கங்கை ஒவ்வொரு புல்லிலும்…
குடி ஏறும் விடியற் காலம்…

ஆண் : குறவை மீன் தாவி தழுவாமல்…
கூழாங்கல் மென்மையில்லையடி…
குன்றின் மேல் வானை குத்தியொரு…
குடை செய்ய ஆசையுள்ளதடி…

பெண் : வானம் மழை தூவும் பருவத்தில்…
வருடும் புது மண் வாசம்…
வாய்க்கால் வழியோடும் தண்ணீரில்…
கப்பல் விட உத்தேசம்…

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

BGM

ஆண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே…
அமரும் ஒரு மீன்கொத்தி…
அரை பவுனில் செய்து தருவோமா…
அதற்கும் ஒரு மூக்குத்தி…

BGM

பெண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே…
அமரும் ஒரு மீன்கொத்தி…
அரை பவுனில் செய்து தருவோமா…
அதற்கும் ஒரு மூக்குத்தி…

ஆண் : அதிகாலை சூரியன் வானத்தில்…
மணி பார்க்கும் கடிகாரம்…

பெண் : அலங்காரம் செய்கிற வானில்…
ஏழு வண்ண உதட்டு சாயம்…

ஆண் : வல்லாரை லேகியம் இல்லாமல்…
வானவில் ஞாபகம் தோன்றுதடி…
கல்லூரி சென்று படிக்காமல்…
கத்தாழை வைத்தியம் பார்க்குதடி…

பெண் : நதியோர ஈச்சங் கீற்றின்…
நாக்கு ரொம்ப நீளம்…
நாணல் ஏன் வளைந்ததென்று…
நக்கல் பண்ணி பேசும்…

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…

பெண் : குட்டை வால் ஓணான் வேலிக்குள்…
குதித்தாடும் உற்சாகம்…
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்…
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்…


Notes : Aagayam Pookal Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Viveka. ஆகாயம் பூக்கள் பாடல் வரிகள்.


சுடும் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிவித்யாசாகர்தம்பி (2006)

Sudum Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…

ஆண் : சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…

BGM

ஆண் : இமையடித்தாலும் இதயம் வலிக்கும்…
வலிகளில் கூட வாசனை இருக்கும்…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…

பெண் : நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்…
நதியிருந்தாலும் நாவே உலரும்…

ஆண் : தப்பு எல்லாம் கணிதமாகும்…
தவறு எல்லாம் புனிதமாகும்…

பெண் : பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்…
எச்சில் பண்டம் அமிர்தமாகும்…

ஆண் : நாக்கு உதடு பேசும்…
வார்த்தை முத்தமாகும்…

பெண் : சுடும் நிலவு சுடாத சூரியன்…
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்…

BGM

பெண் : மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்…
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…

ஆண் : சத்தியக் காதல் என்னவும் செய்யும்…
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்…

பெண் : தொட்ட பாகம் மோட்சமாகும்…
மத்த பாகம் காய்ச்சலாகும்…

ஆண் : தெய்வம் தேய்ந்து மிருகமாகும்…
மிருகம் தூங்கி தெய்வமாகும்…

பெண் : தேடல் ஒன்றே வாழ்க்கை என்று…
தெரிந்து போகும்…

குழு : காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…
காதலித்துப் பார்…


Notes : Sudum Nilavu Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Vairamuthu. சுடும் நிலவு பாடல் வரிகள்.


உனக்காகத்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சோலார் சாய், சுஜாதா மோகன் & பி. உன்னிகிருஷ்ணன்டி. இமான்நெஞ்சில் ஜில் ஜில்

Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil


ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்…
அழியாது காதல்…
அழியாது காதல்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : தேவதைப்போல வந்து காதல் இறங்கும்…
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்…

ஆண் : புரியாது பெண்ணே…
குழு : காரணங்கள்…
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்…
தனனானனா…

பெண் : வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்…
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்…
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்…
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்…

ஆண் : காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்…
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்…
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்…

ஆண் : சலவைக்கல் சிலையே…
குழு : பூஜிக்க வா…
ரகசிய பூவாய் தனனானனா…

பெண் : உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது…
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது…
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது…
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது…

ஆண் : பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்…
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…


Notes : Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Jil Jil (2006). Song Lyrics penned by Pa. Vijay. உனக்காகத்தானே பாடல் வரிகள்.


வாடா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Vada Vaa Song Lyrics in Tamil


BGM

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

BGM

ஆண் : வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

ஆண் : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா… ஆஅ…

BGM

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்…
பாதையெல்லாம் மெத்தைத்தான்…
குழு : ஹை ஹாய்…

ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்…
பூமி எல்லாம் சொர்க்கம்தான்…
குழு : ஹை ஹாய்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே…
வாழ்க்கைய தொலைச்சோம்…
வாழ்க்கைய தொலைச்சோம்…

BGM

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்…
வீட்டுக்கு வருவோம்…
வீட்டுக்கு வருவோம்…

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை…
துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை…

ஆண் : ஓஹோ… புத்தி உள்ள ஆளுக்கு…
தொட்டதெல்லாம் தூள் அப்பா…
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஏதெப்பா…

ஆண் : ஓஓ… லட்சியம் ஏதும் இல்ல…
அண்ணனைக்கு வாழ பாரப்பா…

ஆண் : நீ வாடா வா நீ வாடா வா…
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…

ஆண் : நீ வாடா வா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

BGM

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே…
கொள்ளை ஆசை இல்லையே…
கொள்ளை ஆசை இல்லையே…

BGM

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்…
வந்ததது இந்த தொல்லையே…
வந்தது இந்த தொல்லையே…

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்…
குழந்தையின் வயது…
சொர்க்கத்தில் துன்பம் காணும்…
மனிதனின் மனது…

ஆண் : ஏஹே… பூமி எல்லாம் கடல் என்றால்…
மீனாகதான் வாழனும்…
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்…
புல்லாங்குழல் ஆகணும்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

குழு : நீ வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

குழு : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…
ஆண் : தர ராராரா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…


Notes : Vada Vaa Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. வாடா வா பாடல் வரிகள்.


ஒரு துளிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & பவதாரணிஇளையராஜாதொடரும்

Oru Thulir Song Lyrics in Tamil


பெண் : சந்தான லட்சுமி வந்த நேரம்…
சரியான நேரம்…
மங்காத ஜோதி என்றும் இங்கு…
நின்றாடும் கோலம்…

பெண் : நலுங்கொன்று சொல்ல…
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்…
நலம் கோடி காண…
மங்கலங்கள் மனம் போலக் கூடும்…

BGM

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…

BGM

பெண் : குறுகுறு விழிகளில்…
சிறுசிறு நவமணிகள் ஆஹா…
அந்த சிறுசிறு மணிகளில்…
குறுகுறு கவிமணிகள்…

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்…
புதுப்புது கதிரலைகள்…
அந்த புதுப்புது கலைகளில்…
இணைந்தது உயிரலைகள்…

பெண் : கைகளில் கம்பன் பாட்டு…
காவியம் பாடாதோ…
கால்களில் தென்றல் காற்று…
ஓவியம் போடாதோ…

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்…
இந்த செந்தமிழ் புதுக்கவிதை…

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஆண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

ஆண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

BGM

ஆண் : மணிரதம் ஏறிய மரகத வீணை இது…
உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது…

பெண் : அணிகலன் அணிந்திட…
அவசியம் இல்லை என… ஆஹா…
கொள்ளை அழகுடன் பழகிடும்…
அதிசயப் பிள்ளை இது…

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்…
மென்மையைத் தந்தாயோ…
சொல்லிய சொல்லுக்குள்ளே…
சொற்ச் சுவை ஆனாயோ…

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்…
அந்த வானுலகம் இயங்கும்… ம்ம்ம்ம்…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…

பெண் : இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

குழு : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…


Notes : Oru Thulir Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு துளிர் பாடல் வரிகள்.


மஞ்ச மஞ்சளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்பி. உன்னி கிருஷ்ணன்தேவாஇனியவளே

Manja Manjala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : நெத்திக்கழகா ஸ்டிக்கர்ரு பொட்டு…
நெஞ்சுக்குள்ளதான் பவர்ரு கட்டு…
நெனைச்சாலே இனிப்பு லட்டு செல்லம்மா…
நீ சிரிச்சாலே சிதறும் துட்டு நில்லம்மா…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…
ஜோரான நடைய போட்டு…
தங்கமே கலகலக்க வைக்கிற…
மனச ஊசி நூலு இல்லாமலே தைக்கிற…

BGM

ஆண் : காஞ்சிபுரம் சேலை கட்டி…
கடைத் தெருவில் போற குட்டி…
கரும்ப எறும்பு தின்னா கெட்டிடுமா…
உன்ன கையாள தொட்டா ஏதும் பட்டிடுமா…

BGM

ஆண் : ஜலு ஜலுன்னு கொலுசு சத்தம்…
காதுக்குள்ளதான் கேட்க்கும் நித்தம்…
நிலவாத்தான் ஜொலிக்கிறியே இரவுல…
நாம நிரந்தரமா இருந்திடலாம் உறவுல…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…
ஆண் : அப்படி…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…

ஆண் : அழகழகு பிகரு எல்லாம்…
கலர் கலரா போகையில…
பார்த்தாலே மொறைக்கிறைங்க கோவமா…
இது பாண்டி நாட்டு கண்ணகியின் சாபமா…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…
நடமாடும் மின்னலுதான்…
வானவில்லு வளையலான மாயமா…
கனவுல தேவதையா வந்து போற நியாயமா…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : கண்ணான கண்ணழகி…
கனிவான பேரழகி…
செந்தூர சிவப்பழகி மீனம்மா…
உசுர உண்டியலா குலுக்குறியே ஏனம்மா…

BGM


Notes : Manja Manjala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Jeevan. மஞ்ச மஞ்சளா பாடல் வரிகள்.


அன்பு அலைபாயுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பி. உன்னிகிருஷ்ணன், மனுவேல் நௌயர், கார்த்திக், ரேஷ்மி & மாளவி கார்த்திகேயன்பரத்வாஜ்பிரியசகி

Anbu Alaipayuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…

ஆண் : இந்த பூமியில் இது பொக்கிஷம்…
இதில் வாழ்வதே தினம் பரவசம்…
பல உறவுகள் இதில் கொஞ்சுதே…
அந்த சொர்கத்தை இது மிஞ்சுதே…
என்ன தவம் செய்தேனோ…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

ஆண் : பட்டாம் பூச்சிகள் எங்கள் தோட்டத்து பூக்களை…
காவல் காக்கிறதே…
பட்டு நிலவும் முற்றத்தில் தினம்…
வெள்ளை அடிக்க வருகிறதே…

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரையில்…
கவலை என்பது தெரியவில்லை…
விரும்பியதெல்லாம் கிடைப்பதனாலே…
கடவுளை தொல்லை செய்வதில்லை…

ஆண் : புன்னகை கீதம் எங்கள் கூட்டில்…
என்றும் கேட்குமே…
அன்பென்னும் வேதம் எங்கள் வாழ்வில்…
வீட்டு பாடமே…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

குழு : இன்பத்தை உருவாக்கி…
இரு கண்ணை மகனாக்கி…
பதினாறும் எனக்கருளினாய்…

குழு : இறைவா உனக்கென்ன நான் செய்வேன்…
உயிர் அன்றி வேறில்லை…
உன் பாதம் சமர்பிக்கவே…

குழு : இது போல எம் மக்கள் எந்நாளும் ஒன்றாகி…
உன் பாதம் பூஜிக்கவே…
அருள் வென்றும் என் சாமி…
தாய் உள்ளம் பூரிக்க…
தர வேண்டும் வரம் ஒன்று நீ…

BGM

ஆண் : இன்னொரு பிறவி மண்ணில் பிறந்தால்…
மீண்டும் நாங்களே உறவாவோம்…
விட்டு கொடுத்து வாழ்வதில் மட்டும்…
போட்டி போட்டு தினம் மகிழ்ந்திடுவோம்…

ஆண் : ஒருவர் மனதை ஒருவர் படித்து…
உறவை கவிதை ஆக்கிடுவோம்…
கனவில் கூட பிரிவென்னும் வார்த்தை…
கலந்து விடாமல் கதவடைப்போம்…

ஆண் : சந்தோஷம் யாவும்…
எங்கள் வீட்டை தேடி வந்ததே…
சங்கீதம் போல எங்கள்…
வாழ்க்கை மேன்மை ஆனதே…

BGM


Notes : Anbu AlaipayutheySong Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Snehan. அன்பு அலைபாயுதே பாடல் வரிகள்.


எந்தன் குயிலெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Endhan Kuyil Engey Song Lyrics in Tamil


ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்…
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி…
பெண் : ஓஹோஹோ…

ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்…
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி…
பெண் : ஓஹோஹோ…

பெண் : அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்…
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே…
ஆண் : ஓஹோஹோ…

பெண் : அழகழகாய் இனி பூ மலரும்…
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்…
ஓஹோஹோ…

ஆண் : என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…


Notes : Endhan Kuyil Engey Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. எந்தன் குயிலெங்கே பாடல் வரிகள்.


மார்கழி மாசத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜாதா & பி.உன்னி கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Margazhi Maasathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…
தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

குழு : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… தினாக்குதின…

BGM

குழு : சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே…

BGM

ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே…
எங்கும் நம் பேச்சு…

ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து…
தேதியும் வச்சாச்சு…

பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே…
ஆளும் போயாச்சா…

பெண் : வானவில்லை தூக்கி வந்து…
தோரணம் போட்டாச்சா…

ஆண் : கல்யாண நாளன்று ஊரில்…
விடுமுறை விடுவோமா…
கச்சேரி கேட்பதற்கே நாம்…
கிளின்டனை அழைப்போமா…

ஆண் : நேற்று உன்னை பார்த்த…
பார்வைகள் நேர்மையானது…

பெண் : இன்று என்னை பார்க்கும்…
பார்வையில் ஏதோ இருக்கிறது…

ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்…
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்…

BGM

குழு : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்…

BGM

பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
பொண்ணு வரவேணும்…

ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை…
என்றால் பாரதி வரவேணும்…

ஆண் : காலை மாலை காதல் கடலில்…
மூழ்கி பார்ப்போமா…
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே…
முத்தமும் கொடுப்போமா…

பெண் : கண்ணாலே பிறக்கிற காதல்…
கண்ணுக்கு தெரியாது…
பெண்ணாக பிறந்தவர் இதயம்…
பிறருக்கு புரியாது…

BGM

பெண் : சிங்கம் போல வந்து நின்று…
சேர்த்துக்கோ பாவா…

ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது…
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது…

பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..

BGM

பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு…
கோட்டைய புடிச்சாச்சு…

ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்…
எல்லாம் மீசைய எடுத்தாச்சு…

ஆண் : காதல் ரதமே நாளை தினமே…
ஊரில் வலம் வருமே…

பெண் : எங்கள் தவமே தந்த வரமே…
ஒன்பது சுயம்வரமே…

ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு…
அனுமதி கேட்டாச்சா…

பெண் : அரசாங்க வாசலில் காதல்…
அனுமதி கேட்பதில்லை…

ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில்…
காவல் நானிருப்பேன்…
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில்…
சிறை இருப்பேன்…

ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி…
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி… ஹே ஹேய் ஹேய்…

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…

பெண் : தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM


Notes : Margazhi Maasathu Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. மார்கழி மாசத்து பாடல் வரிகள்.