பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவசிதம்பரம் &கே.எஸ். சித்ரா | மரகதமணி | அழகன் |
Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வந்தேன் வந்தேன் வந்தேன்…
கதையின் சூத்திரதாரி…
தந்தேன் தந்தேன் தந்தேன்…
வணக்கம் சபையினை நாடி…
ஆண் : காதல் தேவதை போலே…
இங்கொரு பெண் சிலை ஒன்று…
கண்ணில் இத்தனை சோகம் வந்தது…
ஏன் அதில் இன்று…
ஆண் : அழகான மணவாளன் காதலின் வசமானாள்…
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்…
ஆண் : இரவெல்லாம் முதலிரவாக…
அவர் வாழும் ஒரு நாள் காலையில்…
துயில் மேவும் அவள் மணவாளன்…
தனை மங்கை எழுப்புகின்றாள்…
—BGM—
பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…
பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…
பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…
—BGM—
ஆண் : ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே…
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள்ளம்மா…
பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…
ஆண் : தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே…
அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே…
நெத்திலி மீனே மைவிழி மானே…
நெஞ்சிலே சாச்சுக்கோ…
பெண் : அட கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…
—BGM—
ஆண் : எப்போதும் மீனுண்டு கடலிலதான் காதலியே…
கடல் எங்கே போய் விடும் சொல்லு…
பெண் : ஐயோ… கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…
ஆண் : ஹேய்… ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்…
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்…
பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…
பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…
பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…
—BGM—
ஆண் : காதலி சொன்னது வேதம் என்று…
புயல் வரும் வேளையில் அவன் போனான்…
இந்திய எல்லையை தாண்டும் போது…
பாவிகள் சுட்டதில் பலியானான்…
—BGM—
ஆண் : காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்…
எனினும் அவள் மனம் நம்பாது…
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே…
தனிமையில் ஆடி சிலையானாள்…
—BGM—
Notes : Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. கோழி கூவும் பாடல் வரிகள்.