பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | கே. எஸ். சித்ரா | இளையராஜா | கண்ணுக்குள் நிலவு |
Chinnanjchiru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…
பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…
பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…
—BGM—
பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்…
கண்ணில் நிலவு குடியிருக்கும்…
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள்…
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்…
பெண் : நீ சிரித்தால்…
அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்…
நீ பார்த்தால் மணி தீபங்கள்…
என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ… ஹோ…
பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…
—BGM—
பெண் : என்னை அன்னை என்றான்…
வரம் அள்ளி தந்தான்…
மகனாய் பிறந்து தவம் முடித்தான்…
பெண் : விழி தேடி வந்து மடி ஆடி நின்று…
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்…
பெண் : உன் நிழலும் என் மகன் போல…
பாலூட்ட கேட்கும்…
தாலாட்டும் இந்த சொந்தங்கள்…
எப்போதும் வேண்டும் ஆராரோ… ஹோ…
பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…
பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…
பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…
Notes : Chinnanjchiru Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.