Tag Archives: எஸ்.பி. பி. சரண்

போறாளே போறாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பி. சரண் & எம்.எம். மானசிஜி.வி. பிரகாஷ் குமார்அன்னக்கொடி

Poorale Song Lyrics in Tamil


ஆண் : போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே…
என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே…

ஆண் : அடி ஒண்ணுமே புரியலையே…
உலகமும் தெரியலையே…
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்…
எதும் காணவும் முடியலையே…

ஆண் : இதுதான் என் பொறப்பா…
இதுதான் உன் பொறுப்பா…
மனசே எரியுதம்மா…
எரிக்கும் சுடு நெருப்பா…

ஆண் : போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…

BGM

பெண் : மனசாற முகம் பாத்தா…
மனசுக்குள்ள வெத வெதச்சோம்…
அணை போட முடியாம…
ஆசை எல்லாம் தெறந்து வச்சோம்…

ஆண் : இந்த காடெல்லாம் மேடெல்லாம்…
கால் தடத்த பதிச்சு வச்சு…
கரட்டு வழி இருட்டு வழி…
கண்டபடி திரிஞ்சு வந்தோம்…

பெண் : ஒரு ராத்திரியும் தூங்குனதா…
நமக்கொரு கதையுமில்ல…
அட ராப் பாகலும் தெரியவில்ல…
நமக்கது புதுசுமில்ல…

ஆண் : அதெல்லாம் பழைய கதை…
அத நீ ஏன் மறந்த…
அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த…

பெண் : போனாலும் போகலையே…

BGM

ஆண் : என் நெனப்பிலும் நீதான்…
நெழலிலும் நீதான் மாறலையே… ஓஓஓஓ…

BGM

ஆண் : ஒரு நொடியிலும் ஒரு பொழுதும்…
உன் நெனப்ப ஒளிச்சதில்ல…
ஒரு யுகமா பல யுகமா…
ஒறவ அத்து தவிச்சதில்ல…

பெண் : இதில் யாரோட கண்ணு பட்டு…
பிரிஞ்சது நம்ம பிடி…
இது விதியோட விளையாட்டா…
விழுந்தது பெரிய பழி…

ஆண் : என் வேதனைய எடுத்துச் சொன்னா…
வெயிலும் அழுகுமடி…
அந்த சாமி இத கேட்டுச்சுன்னா…
உனக்கும் புரியுமடி…

பெண் : உசுரே நடுங்குதய்யா…
உன்ன நெனச்சபடி…
இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி…

ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு…
அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே என் கண்ண கட்டி…
காட்டுல விட்டு போறாளே…

BGM

பெண் : அட ஒண்ணுமே புரியலையே…
உலகமும் சரியில்லையே…
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்…
எதும் காணவும் முடியலையே…

பெண் : இதுதான் என் பொறப்பு…
இதுக்கு யார் பொறுப்பு…
மனசே எரியுதய்யா…
என்னச் சுத்தி சுடு நெருப்பு…

ஆண் : போனாளே போனாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போனாளே…


Notes : Poorale Song Lyrics in Tamil. This Song from Annakodi (2013). Song Lyrics penned by Gangai Amaran. போறாளே போறாளே பாடல் வரிகள்.


ஒரு நண்பன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு & சின்மயிஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Oru Nanban Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
ஆண் : கையோடு பூமியை சுமந்திடலாம்…

பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
ஆண் : நம் பேரில் திசைகளை எழுதலாம்…

பெண் : கடலில் நதிகள் பெயர் கலந்தது…
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது…

ஆண் : நட்பு என்பது எங்கள் முகவரி…
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி…

பெண் : இந்த உலகில் மிக பெரும் ஏணி…
நண்பன் இல்லாதவன்… ஹேய்…

ஆண் & பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…

ஆண் & பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…

BGM

ஆண் : தோள் மீது கை போட்டு கொண்டு…
தோன்றியதெல்லாம் பேசி…
ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்…

ஆண் : ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம்…
நட்பின் போர்வைக்குள்ளே…
இந்த காதல் கூட வாழ்க்கையில்…
அழகிலே தோன்றுமே…

ஆண் & பெண் : தோழன் என்ற சொந்தம் ஒன்று…
தோன்றும் நமது உயிரோடு…

பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
ஆண் : கையோடு பூமியை சுமந்திடலாம்…

பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
ஆண் : நம் பேரில் திசைகளை எழுதலாம்…

BGM

ஆண் : நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள…
எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல…
நண்பன் ஒரே சொந்தம்…

ஆண் : நமது மேஜையில் உணவு கூட்டணி…
அதில் நட்பின் ருசி…

பெண் : அட வாழ்க்கை பயணம் மாறலாம்…
நட்புதான் மாறுமா…

ஆண் : ஆயுள் காலம் தேர்ந்த நாளில்…
நண்பன் முகம் தான் மறக்காதே…

ஆண் & பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…

ஆண் & பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…

ஆண் & பெண் : நட்பு என்பது எங்கள் முகவரி…
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி…

ஆண் & பெண் : இந்த உலகில் மிக பெரும் ஏணி…
நண்பன் இல்லாதவன்… ஹேய்…


Notes : Oru Nanban Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. ஒரு நண்பன் பாடல் வரிகள்.


சந்திர மண்டலத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய், ஹரிணி & எஸ்.பி.பி. சரண்வித்யாசாகர்நிலாவே வா

Chandira Mandalathai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…

BGM

ஆண் : வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

குழு : ஹேய்… சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

பெண் : கண்ணில் ஒரு கள்ளம் இல்லை…
விண்வெளியில் பறக்க…
ஒரு விசா தேவையில்லை…
கை விலங்கு ஏதும் இல்லை…

ஆண் : பூமி ஒரு பள்ளிக்கூடம்…
பூவை மட்டும் படித்திருப்போம்…
புத்தகம் தேவையில்லை…
எங்கள் புத்தியில் பாரமில்லை…

பெண் : ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால்…
நட்பை வளக்கலாம்…

ஆண் : ஹேய்… காதலையும் கடந்து…
ஒரு கற்பை வளர்க்கலாம்…

பெண் : நாம் கண்டோம் புதிய இயக்கம்…
ஆண் : இது கண்ணீர் துளியை ஒழிக்கும்…

பெண் & ஆண் : நாம் காணும் கனவு பலிக்கும்…
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்…

பெண் : சந்திர மண்டலத்தை…
ஆண் : சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்…
பெண் : வார்த்தைகள் கோலமிட்டு…
ஆண் : புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

ஆண் : ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்…
கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்குமே…
அது உண்மையை எரிக்குமே…

பெண் : தண்ணீரிலே தன்னை சுற்றி…
தவளைகள் கத்தும் போதும் தாமரை மலருமே…
ஆண் : ஹூம் ஹூம்… தாமரை மலருமே…

ஆண் : வானில் விடும் பட்டம் போலே…
வட்டம் அடிக்கலாம்… ஹேய்…

பெண் : வால் முளைத்த ஜீவன் போலே…
கொட்டம் அடிக்கலாம்…

ஆண் : இனி போதாதிந்த உலகம்…
பெண் : நாம் காண்போம் பத்தாம் கிரகம்…
ஆண் : அங்கு இல்லை இல்லை மரணம்…
குழு : எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
ஆண் : அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

BGM


Notes : Chandira Mandalathai Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்திர மண்டலத்தை பாடல் வரிகள்.


புன்னகைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுக்விந்தர் சிங், எஸ்.பி.பி. சரண் & அனுபமாதேவாஅப்பு

Punnagaiku Song Lyrics in Tamil


BGM

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

BGM

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

BGM

ஆண் : மோகம் என்பது உள்ள வரைக்கும்…
மோகம் என்பது உள்ள வரைக்கும்…
தேகம் என்பதில் ஆவி நிலைக்கும்…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

ஆண் : அடி மண்ணில் பிறப்பது விண்ணில் பறப்பதும்…
சேரும் இடம் மண்ணுதான்…
இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும்…
காதல் சுகம் ஒண்ணுதான்…

பெண் : திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா…
முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா…

BGM

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

BGM

ஆண் : ஓட்டை பானை மேகம் ஆகும்…
ஓட்டை பானை மேகம் ஆகும்…
உயிரின் திரவம் வழிந்து போகும்…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

ஆண் : அட வண்ணத்து பூச்சிகள் ஜாதகம் பார்த்தல்…
சோலைக்கு லாபம் இல்லை…
நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால்…
இன்னைக்கும் இன்பமில்லை…

பெண் : பொன்னாங்கண்ணி விடவும் கீரையில் ஏதும் இருக்கா…
பொம்பளைய விடவும் போதை ஏதும் கிறுக்கா…

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…

ஆண் : மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல்…
வாழ்க்கை இருக்கு…
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்…
வாழ்க்கை எதுக்கு…

பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு…
கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு…

குழு : வா வா வா வாவா வாவா வா…
வா வா வா வாவா வாவா வா…

BGM


Notes : Punnagaiku Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. புன்னகைக்கு பாடல் வரிகள்.


ஒட்டி வாரோனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்எஸ்.பி.பி. சரண்ஜிப்ரான்80’s பில்டப்

Otti Vaarene Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…

ஆண் : ஊத்து நீராதான் ஓடிப்போறாயே…
தேடிப் பாத்தே நான் வாடிப்போறேனே…

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…

BGM

ஆண் : சிரிப்புல உன் சிரிப்புல மயக்குற…
முறச்சதும் நான் முழிக்கிறேன்டி…
மனசில நீ கனவத்தான் விதைக்கிற…
எனக்கென நீ பொறந்தவடி…

ஆண் : நெஞ்சுக்குள்ள ராணி போல உன்ன வச்சு பாக்குறனே…
அச்சு வெல்ல பேச்ச பேசி அரசாளுற…
ஒத்த சொல்ல நானும் கேட்க மண்டி போட்டு ஏங்குறேன்…
பச்சபுள்ள போல நீயும் பழி வாங்குற…

ஆண் : சொச்ச வாழ்க்க நீயும் சேர…
மெச்ச ஆயுளும் மேலும் கூடும்…
என்ன ஆளும் ராணி ஆச தேனீ நீதான்…

ஆண் : ஊத்து நீராதான் ஓடிப்போறாயே…
தேடிப் பாத்தே நான் வாடிப்போறேனே…

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…

ஆண் : ஊத்து நீராதான் ஓடிப்போறாயே…
தேடிப் பாத்தே நான் வாடிப்போறேனே…

ஆண் : ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…


Notes : Otti Vaarene Song Lyrics in Tamil. This Song from 80’s Buildup (2023). Song Lyrics penned by Muthamil. ஒட்டி வாரோனே பாடல் வரிகள்.


தீபங்கள் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஎஸ்.பி.பி. சரண், சந்தியா & கே.பி. மோகன்இளையராஜாதேவதை

Deepangal Pesum Song Lyrics in Tamil


பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

பெண் : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

BGM

பெண் : முல்லை ஆத்து தண்ணி போல…
ஆசை அலைகள் அலைய…
கொள்ளை போன கன்னி நெஞ்சு…
கொஞ்சம் களைய களைய…

பெண் : முல்லை ஆத்து தண்ணி போல…
ஆசை அலைகள் அலைய…
கொள்ளை போன கன்னி நெஞ்சு…
கொஞ்சம் களைய களைய…

பெண் : என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று…
பொன்னான நாள் பார்த்து…
கொண்டாடும் கை கோர்த்து…
குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்றுதானோ…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

BGM

ஆண் : நெருப்பில்லாமல் திரியுமில்லாமல்…
எரியும் வான விளக்கு…
இருக்கும் போது அருகில் வந்து…
வெட்கம் கொஞ்சம் விலக்கு…

பெண் : கனவை கூட கவிதையாக்கி…
புலம்பும் இளைய கவியே…
கவிதை என்னும் சிறகு கொண்டு…
பறக்க வேண்டும் இனியே…

ஆண் : வெண்ணிலவின் முன்னாலே…
விண்மீன்கள் ஊர்கோலம்…

பெண் : கண் இமையே ஓடாதே…
என் கனவை தேடாதே…

ஆண் : அரங்கம் பாடி அரங்கம் சேரும்…
நாளும் இன்றுதானோ…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…


Notes : Deepangal Pesum Song Lyrics in Tamil. This Song from Devathai (1997). Song Lyrics penned by Arivumathi. தீபங்கள் பேசும் பாடல் வரிகள்.


Maaza Maaza Song Lyrics in Tamil

மஜா மஜா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரேயா கோஷல் & எஸ்.பி.பி. சரண்ஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Maaza Maaza Song Lyrics in Tamil


BGM

பெண் : மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…

பெண் : யாரோ யாரோ யார் தடுப்பாரோ…
ஆண் & பெண் : வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ…

பெண் : கண்டால் பாவம் உண்டால் தீறுமல்லவா…
ராத்திரி ராத்திரி ராத்திரி ஏதோ…
ஏதோ ஏதேதோ…

ஆண் : ஓ… மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
ஓ… மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…

BGM

பெண் : நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா…
நானும் வச்சு நீயும் வச்சு…
அச்சு வைக்கவா…

ஆண் : ஏச்சு ஏச்சு என்ன பேச்சு…
ஏச்சு ஏச்சு என்ன பேச்சு…
காச்சு காச்சு என்ன போச்சு…

பெண் : நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா… ஹ்ம்ம்…
ஆண் : மஜா மஜா மஜா மஜா…
பெண் : ஹ்ம்ம் கும்…
ஆண் : ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா…
பெண் : ஹ்ம்ம் கும்…
ஆண் : வூஹோ ஹோ ஹோ ஹோ…
பெண் : ஹ்ம்ம் கும்…

BGM

பெண் : ஜில்லுனு ஒரு ஜிஞ்ஜர் பீர்தான்…
ஆண் : ஓ… ஆசை என்னும் அஜீரணம் தீர தீரதான்…

பெண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு…
ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு…

ஆண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு…
ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு…

பெண் : ஜில்லுனு ஒரு…
ஆண் : ஜில்லுனு ஒரு கிங்கர் பீர்தான்…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
பெண் : மஜா மஜா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
பெண் : மஜா மஜா மஜா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…

ஆண் : யாரோ யாரோ யார் தடுப்பாரோ…
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ…

ஆண் : கண்டால் பாவம் உண்டால் தீறுமல்லவா…
ராத்திரி ராத்திரி ராத்திரி ஏதோ…

ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஏதேதோ…


Notes : Maaza Maaza Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. மஜா மஜா பாடல் வரிகள்.


ஒ சாந்தி சாந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிளிண்டன் & எஸ்.பி.பி. சரண்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil


ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
வழி எங்கும் உந்தன் முகம்தான்…
வலி கூட இங்கே சுகம்தான்…

ஆண் : தொடுவானம் சிவந்து போகும்…
தொலை தூரம் குறைந்து போகும்…
கரைகின்ற நொடிகளில்…
நான் நெருங்கி வந்தேனே…

ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன்…
தொலை தூரம் நகர மாட்டேன்…
முகம் பாா்க்க தவிக்கிறேன்…
என் இனிய பூங்காற்றே…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM

ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
உன்னை காணும் நேரம் வருமா…
இரு கண்கள் மோட்சம் பெறுமா…

ஆண் : விரலோடு விழியும் வாடும்…
விரைகின்ற காலும் நோகும்…
இருந்தாலும் வருகிறேன்…
உன் மடியில் நான் தூங்க…

ஆண் : எனை வந்து உரசும் காற்றே…
அவளோடு கனவில் நேற்றே…
கைகோா்த்து நெருங்கினேன்…
கண் அடித்து நீ ஏங்க…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM


Notes : Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. ஒ சாந்தி சாந்தி பாடல் வரிகள்.


கடவுள் தந்த அழகிய வாழ்வு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பி.சரண், கல்பனா & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்மாயாவி

Kadavul Thanda Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

பெண் : கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு…
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு…
இன்னும் வாழனும் நூறு ஆண்டு…

பெண் : எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்…
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்…
அழகே பூமியின் வாழ்கையை…
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்…

பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

BGM

பெண் : பூமியில் பூமியில்…
இன்பங்கள் எங்கும் குறையாது…
வாழ்க்கையில் வாழ்க்கையில்…
எனக்கொன்றும் குறைகள் கிடையாது…
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…

ஆண் : எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…
அது வரை நாமும் சென்றிடுவோம்…
விடை பெறும் நேரம் வரும் போதும்…
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்…

ஆண் : பரவசம் இந்த பரவசம்…
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே…

ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

BGM

ஆண் : நாமெல்லாம் சுவாசிக்க…
தனி தனி காற்று கிடையாது…
மேகங்கள் மேகங்கள்…
இடங்களை பார்த்து பொழியாது…

ஆண் : கோடையில் இன்று இலை உதிரும்…
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்…
குயில்களின் பாட்டு காற்றில் வரும்…

ஆண் : முடிவதும் பின்பு தொடர்வதும்…
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள்தான் நீ கேளடி…

ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

BGM


Notes : Kadavul Thanda Song Lyrics in Tamil. This Song from Maayavi (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. கடவுள் தந்த அழகிய வாழ்வு பாடல் வரிகள்.


சூடி தந்த சுடர்க்கொடியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன், எஸ்.பி.பி. சரண், யுகேந்திரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Choodithandha Song Lyrics in Tamil


BGM

குழு : சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
தேடிக் கொண்ட திரவியமே…
தேன் மாலை போல வருக…

குழு : மின்னும் அம்பு விழி…
சந்திர பிம்பம் பொன்னொளி வீச…
மங்கை மைதிலி இவள்…
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட…
சங்கம் சூழ வருக…
ஸ்ரீரங்கன் தாளை அடைய…
வளர் திங்களாகி வருக…

BGM

ஆண் : கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
குழு : கல்யாண தேரிலே…

ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
குழு : வீட்டோடு வாழவே…

ஆண் : அந்த தென்மதுரை மீனாள்…
விளக்கேற்ற வந்தாள்…
சீதனமாய் கையில்…
தாய்ப்பாசம் கொண்டு வந்தாள்…

பெண் : கோகுலத்து ராதை வந்தாளோ…
குழு : இந்த கல்யாண தேரிலே…

ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ…
குழு : எங்கள் வீட்டோடு வாழவே…

BGM

பெண் : பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க…
குழு : பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க…

ஆண் : தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க…
குழு : இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க…

ஆண் : உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி…
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு…

ஆண் : மூணு முழம் மல்லிகைப்பூவும்…
கொஞ்சம் அல்வாவும் போதுமே…
எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்…
அடி தலை சாஞ்சு மயங்குமே…

BGM

பெண் : தஞ்சாவூர் பொம்மப் போலத்தான்…
உங்க மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவார்…
குழு : ஆமா தலையாட்டுவார்…

ஆண் : தேசிங்கு ராஜன் எங்கண்ணன்… ஹேய்…
உங்க குதிரை வாலாட்டுமா…
குழு : ஆமா வாலாட்டுமா…

பெண் : ஏய்… தப்பாம எங்கப் பொண்ணு செய்வாளே தந்திரம்…
சிங்கத்தை கட்டிப் போடும் தலைகாணி மந்திரம்…

ஆண் : போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி…
அது நமக்குள்ளதானடி…
ஜோடியத்தான் நல்லாப் பாருடி…
மதுர மீனாட்சி சொக்கன்டி…

BGM

குழு : வெள்ளிப்பனி முற்றத்தில்…
வெட்கம் எனும் தோட்டத்தில்…
மல்லிகை பூத்ததோ…
புது மல்லிகை பூத்ததோ…

குழு : மாடக் குயில் சத்தத்தில்…
மஞ்சள் முகம் நாணத்தில்…
மங்கலம் வந்ததோ…
தினம் மங்கலம் வந்ததோ…

குழு : இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில்…
தீபத் திருவிழா…
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே…
சின்ன வெண்ணிலா…

குழு : எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு…
தென்றல் சந்தனம் பூசுதோ…
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்…
ஒரு தேவதை வந்ததோ…

BGM


Notes : Choodithandha Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Pa. Vijay. சூடி தந்த சுடர்க்கொடியே பாடல் வரிகள்.