Tag Archives: தாமரை

Mudhal Murai Song Lyrics in Tamil

முதல் முறையாக

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & ரம்யா என்.எஸ்.கேஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், ரம்யா என்.எஸ்.கே & கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

ஆண் : நீதானே… நீதானே என் தாய்போல…
தூங்காத சேய்போல…
துரத்தாத பேய் போல…
காதல் செய்தாய்…

ஆண் : காதலில் விழ மாட்டேன் என்றே…
காந்தலாய் இருந்தேன்…
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்…
கந்தலாகி விழுந்தேன்…

ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM

ஆண் : மஞ்சரியே மாரதியே நீயும் வா வா வெளியே…
உன் இடையை நான் அணைத்தே பார்ப்பேன்…
மேலே வா கிளியே…

பெண் : ஹா ஆஆ… வா என்று நீ சொன்னால்…
வருவேன் எங்கும் தனியே…
முள் மடியோ விண்வெளியோ…
நடப்பேன் நானும் உன் வழியே…

ஆண் : என்னை காணாமலும் முகம் கோணாமலும்…
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி…

பெண் : நீ தினம் தினம் என்னை வைய…
என்ன குற்றம் நான் செய்ய…

BGM

பெண் : பகல் எல்லாம் பார்க்காமல்…
ஏக்கம் ஏணியில் ஏறும்…
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்…

ஆண் : நீ வந்த பின்தானே…
வாழ்வில் இத்தனை சாரம்…
உன் ஆசை நிறைவேற்ற…
வேகம் என்னையும் மீறும்…

பெண் : விரல் கோர்த்தாலென்ன…
நிரல் கேட்டாலென்ன…
பழி தீர்த்தாலென்ன…
பாதம் பார்த்தாலென்ன…

ஆண் : நான் காவலன்தானே இருந்தும்…
கொள்ளையிட வந்தேனே…

பெண் : ஹா ஆஆ… ஹ்ம்ம் ம்ம்ம்…
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்…
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன்…

ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…

BGM


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Thamarai & Ramya N.S.K. முதல் முறையாக பாடல் வரிகள்.


ஒ சாந்தி சாந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிளிண்டன் & எஸ்.பி.பி. சரண்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil


ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
வழி எங்கும் உந்தன் முகம்தான்…
வலி கூட இங்கே சுகம்தான்…

ஆண் : தொடுவானம் சிவந்து போகும்…
தொலை தூரம் குறைந்து போகும்…
கரைகின்ற நொடிகளில்…
நான் நெருங்கி வந்தேனே…

ஆண் : இனி உன்னை பிாிய மாட்டேன்…
தொலை தூரம் நகர மாட்டேன்…
முகம் பாா்க்க தவிக்கிறேன்…
என் இனிய பூங்காற்றே…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM

ஆண் : நீ இன்றி நானும் இல்லை…
என் காதல் பொய்யும் இல்லை…
உன்னை காணும் நேரம் வருமா…
இரு கண்கள் மோட்சம் பெறுமா…

ஆண் : விரலோடு விழியும் வாடும்…
விரைகின்ற காலும் நோகும்…
இருந்தாலும் வருகிறேன்…
உன் மடியில் நான் தூங்க…

ஆண் : எனை வந்து உரசும் காற்றே…
அவளோடு கனவில் நேற்றே…
கைகோா்த்து நெருங்கினேன்…
கண் அடித்து நீ ஏங்க…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

ஆண் : ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…

BGM


Notes : Oh Shanthi Shanthi Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. ஒ சாந்தி சாந்தி பாடல் வரிகள்.


கண்களிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & ஜாவேத் அலிஜி. வி. பிரகாஷ் குமார்பென்சில்

Kangalilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நி ச ரி தா நி தா…
நி ச ரி தா நி தா…
நி ச ரி ரி தா நி ரி…
ரி நி ச தா நி ப…

ஆண் : நி ச ரி தா நி தா…
நி ச ரி தா நி தா…
நி ச ரி ரி தா நி ரி…
ரி நி ச தா நி ப…

BGM

ஆண் : கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

பெண் : எனக்கேதான் தெரியாமல்…
எனை சிறுக சிறுக இழந்தேன்…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நீ தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நி தா நி தா…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நீ தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நி தா நி தா…

BGM

பெண் : கல்லை குளத்தினில் எறிந்தாய்…
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்…

ஆண் : ஓ… தள்ளி நடந்திட விரும்பி…
நீ மெல்ல அருகினில் வந்தாய்…

பெண் : முதன் முதலாய்…
முகவரியாய் உனை நினைத்தேன்…
நல்ல முடிவெடுத்தேன்…

ஆண் : மேலாடை தொடுமோ…
மூச்சென்னை தொடுமோ…
கை விரல் தொடுமோ…
கால் நகம் படுமோ…

ஆண் : பட்டாடை இல்லாமல்…
பூ போட்டும் இல்லாமல்…
நீ வந்து நின்றாலும்…
உன் போலே வருமோ…

ஆண் : ஓ… கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

BGM

ஆண் : வண்ண உடைகளில் வந்தால்…
என் எண்ணம் சிதறுது பெண்ணே…

பெண் : என்னை மறைத்திட்ட போதும்…
அதை காட்டி கொடுப்பது கண்ணே…

ஆண் : ஒரு புறம் நீ…
மறு புறம் நான்…
இடையினில் யார்…

பெண் : வெட்கம் தடுப்பதை பார்…

ஆண் : எங்கே நான் சென்றாலும்…
என் பாட்டில் நின்றாலும்…
பின்னாலே நீ வந்தாய்
பேசாமல் ஏன் சென்றாய்…

ஆண் : கார் காலம் போல் இன்று…
சங்கீத சொல் ஒன்று…
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு…

ஆண் : ஹோ… கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

பெண் : ஹோ… எனக்கேதான் தெரியாமல்…
எனை சிறுக சிறுக இழந்தேன்…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நி தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நீ தா நி தா…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நி தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நீ தா நி தா…

BGM


Notes : Kangalilae Song Lyrics in Tamil. This Song from Pencil (2016). Song Lyrics penned by Thamarai. கண்களிலே பாடல் வரிகள்.


அடியே கொல்லுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிரிஷ், பென்னி டயல் & ஸ்ருதி ஹாசன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Adiyae Kolluthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM

ஆண் : இரவும் பகலும் உன்முகம்…
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ…
முதலும் முடிவும் நீயென…
தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ…

பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள்…
ஒரு வாசம் வந்ததே…
உன் நேசம் என்றதே…

பெண் : உந்தன் கண்களில் ஏதோ…
மின்சாரம் உள்ளதே…
என் மீது பாய்ந்ததே…

பெண் : மழைக்காலத்தில் சாியும்…
மண் தரை போலவே மனமும்…
உனைக் கண்டதும் சாியக் கண்டேனே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM

ஆண் : அழகின் சிகரம் நீயடி…
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே…
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி…
இந்தக் கணமே உன்னை மணப்பேனே…

பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே…
மயில் தோகை போலவே என் மீது ஊருதே…
எல்லா வானமும் நீலம்…
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே…

பெண் : எனக்காகவே வந்தாய்…
என் நிழல் போலவே நின்றாய்…
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

பெண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

பெண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

BGM


Notes : Adiyae Kolluthey Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அடியே கொல்லுதே பாடல் வரிகள்.


நீ வந்து போனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே, பாம்பே ஜெயஸ்ரீ, ரம்யா என்.எஸ்.கே & மேகாஹாரிஸ் ஜெயராஜ்யான்

Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும்…
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும்…
கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே…

பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய்…
கற்கண்டு மாமழை தந்து போனாய்…
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே…

BGM

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

—BGM—

ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும்…
எந்நாள் என்று இன்பம் நுகரும்…
நான் கண்டேன் என் மரணம்…

ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்…
பஞ்சை பற்றி செந்தீ பரவும்…
ஓ… எங்கே என் அமுதம்…

பெண் : திரை சிலைகள் இல்லாத…
என் ஜன்னல் ஓடாக தேடினேன்…
வெளி ஓசைகள் இல்லாமல்…
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்…

பெண் : என்னை உன் உள்ளம்கை மீது…
நீ தாங்கிதாலாட்ட ஆடினேன்…
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

BGM

பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே…
பெண்ணை கண்டு நின்றால் நலமே…
ஓ… இங்கே நான் தனியே…

பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே…
எங்கே எங்கே எந்தன் கரையே…
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்…

ஆண் : கடை கண்ணால நீ பாா்த்த…
பாா்வைகள் போதாமல் ஏங்கினேன்…
சிறு ஓசைகள் கேட்டாலே…
நீதானோ என்றே நான் தேங்கினேன்…

ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று…
கை நீட்டி ஏமாந்து போகிறேன்…
கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி…

ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…

பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…

ஆண் : என் வானம் தேடிய வானவில்லை…
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை…

பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை…

BGM


Notes : Nee Vandhu Ponadhu Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Thamarai. நீ வந்து போனது பாடல் வரிகள்.


ஏன் என்னை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுனிதா சாரதி & கரேஸ்மா ரவிச்சந்திரன்ஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Yaen Ennai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட்…
அன்லெஸ் ஹி இஸ் தி மேன்…
ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம்…
ஐ எம் பைன் அஸ் ஐ எம்…
ஜஸ்ட் ஷோ மீ தி மேன்…
பார் சேர்லி ஐ கேன்…
பட் ஐ வுட்நாட் கோ…
லேன்ட் இப் ஹி இஸ் நாட் தி மேன்… ஹோலா…

பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட்…
அன்லெஸ் ஹி இஸ் தி மேன்…
ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம்…
ஐ எம் பைன் அஸ் ஐ எம்…
ஜஸ்ட் ஷோ மீ தி மேன்…
பார் ஐ நோ தி ப்ரண்ட் அண்ட்…
ஸ்டாப் மேக்கிங் பிளான்ஸ்…
காஸ் ஹி இஸ் நாட் தி மேன்…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

பெண் : ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…

பெண் : ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

பெண் : என் வானில் வானில் மேகம் என்றும் போல…
வெந்நீலம் நீலம் அதை தூவி போக…
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்…
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக…

பெண் : என் வானில் வானில் மேகம் என்றும் போல…
வெந்நீலம் நீலம் அதை தூவி போக…
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்…
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

BGM

பெண் : இன்றுதானோ உன்னால்…
நான் மண்டி இட்ட நன்னாள்…

ஆண் : நைந்திட செய்தாய் என்னை…
நகாசு வேலை என்னை…

பெண் : கையை நீட்டி தொட்டால்…
சிறு காற்றின் தூசி பட்டால்…

ஆண் : கரைந்திடும் பனிதுளிதானோ…
கனாவில் கலைந்திடுவானோ…

பெண் : தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே…
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்…

பெண் : தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே…
ரசிப்பதை யாரிடம் சொல்ல…
ரகசிய சொப்பனம் கிள்ள…
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல…

BGM

பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட்…
அன்லெஸ் ஹி இஸ் தி மேன்…
ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம்…
ஐ எம் பைன் அஸ் ஐ எம்…

பெண் : ஏன் என்னை என்னை இன்று தேடி வந்தாய்…
இவன்தானோ என்று என்று எண்ண வைத்தாய்…

பெண் : ஜஸ்ட் பௌன்ட் மை மேன்…
அண்ட் நவ் சேர்லி ஐ கேன்…
ஐ எம் ஆல் செட் டு லேன்ட்…
பிகாஸ் ஹி இஸ் தி மேன்…

பெண் : உன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…


Notes : Yaen Ennai Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. ஏன் என்னை பாடல் வரிகள்.


என்னை அறிந்தால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதேவன் ஏகாம்பரம், மார்க் தாமஸ் & அபிஷேக்ஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Yennai Arindhaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…

BGM

ஆண் : கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…

ஆண் : ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்…
ஓடி போயிருடா…
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து…
சாம்பல் ஆயிருடா…

BGM

ஆண் : ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்…
ஓடி போயிருடா…
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து…
சாம்பல் ஆயிருடா…

BGM

ஆண் : மிக பாதுகாப்பாய் வீடு செல்வாா்…
என்னை அடைந்தால்…
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு…
என்னை அறிந்தால்…

BGM

ஆண் : எடை போட கல்லும் இல்லை…
எதிா்பாா்க்கும் சொல்லும் இல்லை…
இவன் யாரு என்றே சொல்ல…
உயிரோடு எவனும் இல்லை…

BGM

ஆண் : எடை போட கல்லும் இல்லை…
எதிா்பாா்க்கும் சொல்லும் இல்லை…
இவன் யாரு என்றே சொல்ல…
உயிரோடு எவனும் இல்லை…

BGM

ஆண் : மறு பக்கம் மா்மம்…
நிலவுக்கு மட்டும் இல்லையே…
பல வேறு வா்ணம்…
வான வில்லில் மட்டும் இல்லையே…

ஆண் : ஒரு போதும் வந்து மோத மாட்டாய்…
என்னை அறிந்தால்…
அட மோதி பாா்க்க ஆசை பட்டால்…
அய்யோ தொலைந்தாய்…

BGM

ஆண் : அறிந்தால்… அறிந்தால்… அறிந்தால்…

BGM

ஆண் : அறிந்தால்…


Notes : Yennai Arindhaal Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. என்னை அறிந்தால் பாடல் வரிகள்.


கண்ணுக்குள் கண்ணை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர்ஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Kannukkul Kannai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே…
இல்லை இல்லை என்றாயே…
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து…
பார்வை தந்து சென்றாயே…

ஆண் : காதல் கொண்டு நான் பேச…
கத்தி தூக்கி நீ வீச…
பக்கம் வந்து தொட்டு பேசும்…
கனவுகள் கண்டேன்…

ஆண் : இன்னும் சற்று அருகே வந்து…
முத்தமும் தந்தேன்…
இத்தனை நடந்தும் காதல் இல்லை…
என்பது சரியா…

ஆண் : ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்…
இருப்பது பிழையா…

ஆண் : உன் நண்பன் இல்லை…
நான் உன் வானின் நிலா…
உன் நண்பன் இல்லை…
நீ என் உயிரின் விழா…

ஆண் : உன் நண்பன் இல்லை…
நான் உன் வானின் நிலா…
உன் நண்பன் இல்லை…
நீ என் உயிரின் விழா…

BGM

ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே…
இல்லை இல்லை என்றாயே…
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து…
பார்வை தந்து சென்றாயே…

ஆண் : காதல் கொண்டு நான் பேச…
கத்தி தூக்கி நீ வீச…
பக்கம் வந்து தொட்டு பேசும்…
கனவுகள் கண்டேன்…

ஆண் : இன்னும் சற்று அருகே வந்து…
முத்தமும் தந்தேன்…

BGM

ஆண் : நீயும் நானும் ஒரே புள்ளி…
ஒரே கோடு நீயும் நானும்…
வாழ போகும் அந்த இடம் ஒரே வீடு…
காதல் என்றால் காயம் தான்…

ஆண் : அன்பே ஓடோடி…
வந்து என் கண்ணை பார்த்து…
காதல்தான் என்று சொல்லி…
என் காயம் மாற்று…

ஆண் : அன்பே ஓடோடி…
வந்து என் கண்ணை பார்த்து…
காதல்தான் என்று சொல்லி…
என் காயம் மாற்று…

ஆண் : கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே…
இல்லை இல்லை என்றாயே…
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து…
பார்வை தந்து சென்றாயே…

ஆண் : காதல் கொண்டு நான் பேச…
கத்தி தூக்கி நீ வீச…
பக்கம் வந்து தொட்டு பேசும்…
கனவுகள் கண்டேன்…

ஆண் : இன்னும் சற்று அருகே வந்து…
முத்தமும் தந்தேன்…
இத்தனை நடந்தும் காதல் இல்லை…
என்பது சரியா…

ஆண் : ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்…
இருப்பது பிழையா…

ஆண் : உன் நண்பன் இல்லை…
நான் உன் வானின் நிலா…
உன் நண்பன் இல்லை…
நீ என் உயிரின் விழா…

ஆண் : உன் நண்பன் இல்லை…
நான் உன் வானின் நிலா…
உன் நண்பன் இல்லை…
நீ என் உயிரின் விழா…

ஆண் : உயிரின் விழா…

BGM


Notes : Kannukkul Kannai Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai. கண்ணுக்குள் கண்ணை பாடல் வரிகள்.


அன்பில் அவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதேவன் ஏகாம்பரம் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Anbil Avan Song Lyrics in Tamil


ஆண் : அன்பில் அவன் சேர்த்த இதை…
மனிதரே வெறுக்காதீர்கள்…
வேண்டும் என நினைத்த இதை…
வீணாக மிதிக்காதீர்கள்…

பெண் : உயிரே உன்னை உன்னை எந்தன்…
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்…

பெண் : இனிமேல் புயல் வெயில் மழை…
மாலை சோலை இவை…
ஒன்றாக கடப்போமே…

ஆண் : உன்னை தாண்டி எதையும்…
என்னால் யோசனை செய்ய…
முடியாதே முடியாதே…

ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக…
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ…
ஓ… ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே…
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ…

ஆண் : உயிரே உன்னை உன்னை எந்தன்…
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்…

ஆண் & பெண் : இனிமேல் புயல் வெயில் மழை…
மாலை சோலை இவை…
ஆண் : ஒன்றாக கடப்போமே…

BGM

பெண் : நீளும் இரவில் ஒரு பகலும்…
நீண்ட பகலில் சிறு இரவும்…
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்…
எங்கு என்று அதை பயின்றோம்…

ஆண் : பூமி வானம் காற்று…
தீயை நீராய் மாற்று…
புதிதாய் கொண்டு வந்து நீட்டு…

ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக…
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ…
ஓ… ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே…
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ…

ஆண் : உயிரே உன்னை உன்னை எந்தன்…
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்…

ஆண் : இனிமேல் புயல் வெயில் மழை…
மாலை சோலை இவை…
ஒன்றாக கடப்போமே…

பெண் : உன்னை தாண்டி எதையும்…
என்னால் யோசனை செய்ய…
முடியாதே முடியாதே…

ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக…
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ…
ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே…
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ…

BGM

ஆண் : காதல் எல்லாம்…
தொலையும் இடம்…
கல்யாணம்தானே…
இன்று தொடங்கும்…
இந்த காதல் முடிவில்லா வானே…


Notes : Anbil Avan Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai. அன்பில் அவன் பாடல் வரிகள்.


எங்கேயும் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Engeyum Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல்வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…

BGM

ஆண் : கடற்கரையில் அதன் மணல் வெளியில்…
அக்காற்றோடு காற்றாக…
பலகுரல்கள் பல பல விரல்கள்…
தமை பதிவு செய்திருக்கும்…

ஆண் : விடியலிலும் நடு இரவினிலும்…
இது ஓயாதே ஓயாதே…
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்…
மிக கலந்து காத்திருக்கும்…

ஆண் : ஓ… பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்…
உள்ளம் தாங்காதே தாங்காதே…
கண்கள்தான் பின்பு தூங்காதே…

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

BGM

ஆண் : அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்…
யார் சொன்னாலும் கேட்காதே…
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்…
இது புரண்டு தீர்த்திடுமே…

ஆண் : முகங்களையோ உடல் நிறங்களையோ…
இது பார்க்காதே பார்க்காதே…
இரு உடலில் ஓர் உயிர் இருக்க…
அது முயன்று பார்த்திடுமே…

ஆண் : யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்…
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்…
பூசென்றாய் பூமி திண்டாடும்…

ஆண் : எங்கேயும் காதல்…
பெண் : விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
ஆண் : வெண்காலை சாரல்…
பெண் : முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பெண் : பரவசம் தந்து பாதத்தில் ஓட…
ஆண் : முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…


Notes : Engeyum Kaadhal Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Thamarai. எங்கேயும் காதல் பாடல் வரிகள்.