பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | தேவன் ஏகாம்பரம் & சின்மயி | ஏ.ஆர்.ரகுமான் | விண்ணைத்தாண்டி வருவாயா |
Anbil Avan Song Lyrics in Tamil
ஆண் : அன்பில் அவன் சேர்த்த இதை…
மனிதரே வெறுக்காதீர்கள்…
வேண்டும் என நினைத்த இதை…
வீணாக மிதிக்காதீர்கள்…
பெண் : உயிரே உன்னை உன்னை எந்தன்…
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்…
பெண் : இனிமேல் புயல் வெயில் மழை…
மாலை சோலை இவை…
ஒன்றாக கடப்போமே…
ஆண் : உன்னை தாண்டி எதையும்…
என்னால் யோசனை செய்ய…
முடியாதே முடியாதே…
ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக…
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ…
ஓ… ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே…
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ…
ஆண் : உயிரே உன்னை உன்னை எந்தன்…
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்…
ஆண் & பெண் : இனிமேல் புயல் வெயில் மழை…
மாலை சோலை இவை…
ஆண் : ஒன்றாக கடப்போமே…
—BGM—
பெண் : நீளும் இரவில் ஒரு பகலும்…
நீண்ட பகலில் சிறு இரவும்…
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்…
எங்கு என்று அதை பயின்றோம்…
ஆண் : பூமி வானம் காற்று…
தீயை நீராய் மாற்று…
புதிதாய் கொண்டு வந்து நீட்டு…
ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக…
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ…
ஓ… ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே…
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ…
ஆண் : உயிரே உன்னை உன்னை எந்தன்…
வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்…
ஆண் : இனிமேல் புயல் வெயில் மழை…
மாலை சோலை இவை…
ஒன்றாக கடப்போமே…
பெண் : உன்னை தாண்டி எதையும்…
என்னால் யோசனை செய்ய…
முடியாதே முடியாதே…
ஆண் : நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக…
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ…
ஓ ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே…
கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ வாராதோ…
—BGM—
ஆண் : காதல் எல்லாம்…
தொலையும் இடம்…
கல்யாணம்தானே…
இன்று தொடங்கும்…
இந்த காதல் முடிவில்லா வானே…
Notes : Anbil Avan Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai. அன்பில் அவன் பாடல் வரிகள்.