பெண் : ஹேய் நிஜமே கலையாதே… கனவு நீ அல்ல… பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே… நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்… இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்… நான் சொல்கிறேன் வா அருகே…
—BGM—
பெண் : சுழலாதிரு உலகே… மீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்… முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ…
பெண் : சுற்றாதிரு சற்றே… ஏ… காதல் நொடி நீள… பிரிவெல்லாமே இது போல் மாறாதா…
குழு : தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்… ஓயாத காற்றாக என்னோடு நீ… நிற்காத பாட்டாக உன் காதில் நான்… வீழாத உற்சாக ஊற்றாக நீ…
குழு : மாறாத இன்பத்து பாலாக நான்… தீராத தீக்காமம் ஒன்றாக நீ… தூங்காத உன் கண்ணின் கனவாக நான்… தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ…
குழு : வாசத்தின் வாசலில் தோரணம் நான்… வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ… யாசித்து நீ கேட்ட இரவாக நான்… யாருக்கும் தெரியாத உறவாக நீ…
Notes : Hey Nijame Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Madhan Karky. ஹேய் நிஜமே பாடல் வரிகள்.
ஆண் : மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்… வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்… என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்… என் விழி எங்கும் பூக்காலம்…
ஆண் : உடல் கொதித்ததே… உயிர் மிதந்ததே… ஹையோ… அது எனக்கு பிடித்ததடி…
ஆண் : எடை குறைந்ததே… தூக்கம் தொலைந்ததே… ஹையோ… பைத்தியமே பிடித்ததடி…
—BGM—
ஆண் : முதல் முறை என் விரல்… பூக்கள் பறித்தது தோட்டத்திலே… தலையணை உறையில்… ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே…
ஆண் : காலை தேனீர் குழம்பாய்… மிதந்தது சோற்றுக்குள்ளே… கிறுக்கன் என்றொரு… பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே…
பெண் : காதலி ஒரு வகை ஞாபக மறதி… கண்முன்னே நடப்பது மறந்திடுமே… வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி… தலை கீழாக தொங்கிடுமே…
பெண் : உடல் கொதித்ததே… உயிர் மிதந்ததே… ஹையோ… அது எனக்கு பிடித்ததடா…
ஆண் : எடை குறையதே… தூக்கம் தொலையதே… ஹையோ… பைத்தியமே பிடிக்கிறதே…
—BGM—
பெண் : என் பேர் கேட்டால்… உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே… பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே…
பெண் : காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே… ஓ… குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே…
—BGM—
ஆண் : காதலும் ஒரு வகை போதை தானே… உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல… ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்… புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல…
பெண் : உடல் கொதித்ததே… உயிர் மிதந்ததே… ஹையோ… அது எனக்கு பிடித்ததடா…
பெண் : எடை குறைந்ததே… தூக்கம் தொலைந்ததே… ஹையோ… பைத்தியமே பிடித்ததடா…
—BGM—
Notes : Minnalgal Koothadum Song Lyrics in Tamil. This Song from Polladhavan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. மின்னல்கள் கூத்தாடும்பாடல் வரிகள்.
ஜெய்ராம் பாலசுப்ரமணியன், பாம்பே ஜெயஸ்ரீ & தேபப்ரியா அதிகாரி
கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
வீட்ல விசேஷம்
Family Paattu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை… தாயும் தந்தையும் போதுமே… ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்… எங்கள் வீட்டில் வாழுமே…
ஆண் : யாரும் இல்லை என்றுதான்… இங்கு யாருமே இல்லை… ஆதி பகவன் வீட்டிலே… என்றும் அன்புக்கேதெல்லை…
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை… தாயும் தந்தையும் போதுமே…
—BGM—
ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா… இதயம் நமக்கு சின்னதா… கவலை மறந்து உறவில் கலந்து… செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்…
பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும்… வரங்கள் கிடைக்கும் பூமியிலே… கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய்… சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே…
ஆண் & பெண் : இது பாச மலர்களின் தோட்டமே… ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே… அழகோ அழகு எந்தையும் தாயும்… மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே…
—BGM—
பெண் : உடைந்த இதயங்கள் சேருமா… உறவில் இதயங்கள் உடையுமா… விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா… விலகும் நெஞ்சங்கள் விரும்புமா…
பெண் : பார்த்து பழகிய மனசுதான்… பழச மறந்திடுமா… பழச மறக்க நினைக்கயில்… மீண்டும் நினைத்திடுமா…
ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ… வரங்கள் கிடைக்கும் பூமியிலே… கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து… உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு கண்ணீரை ஊற்றுவதா…
—BGM—
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை… தாயும் தந்தையும் போதுமே… ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்… எங்கள் வீட்டில் வாழுமே…
ஆண் : யாரும் இல்லை என்றுதான்… இங்கு யாருமே இல்லை… ஆதி பகவன் வீட்டிலே… என்றும் அன்புக்கேதெல்லை…
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை… தாயும் தந்தையும் போதுமே…
—BGM—
Notes : Family Paattu Song Lyrics in Tamil. This Song from Veetla Vishesham (2022). Song Lyrics penned by Pa. Vijay. ஃபேமிலி பாட்டு பாடல் வரிகள்.
பெண் : கண்களோடு இரு கண்களோடு… ஒரு காதல் பூத்ததடி பெண்ணே… காற்றிலாடி சிறு காற்றிலாடி… ஒரு காடு பூத்ததடி கண்ணே…
பெண் : நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி… ஒரு நேசம் வந்ததடி பெண்ணே… ஒன்று கூடி மனம் ஒன்று கூடி… உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே…
—BGM—
ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா… உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா… அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா… கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
—BGM—
ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா… உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா… அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா… கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா… என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
—BGM—
பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது… இரு விழிகளில் ரோஜாக் கனவு… வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு… நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…
—BGM—
பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது… இரு விழிகளில் ரோஜாக் கனவு… வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு… நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…
ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்… மஞ்சள் வண்ணம் மாறும்… நாணம் கொண்டதாலே… உன் வண்ணம் பொன் வண்ணம்… செவ்வண்ணம் ஆச்சு வா…
பெண் : கண்ணா நாம் கண்ணும்… கண்ணும் கலப்போமா… காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா…
பெண் : அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா… ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா…
—BGM—
ஆண் : துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்… துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்… நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய்… காற்றோடு மொட்டை போல உடைந்துவிட்டாய்…
பெண் : சிங்கம் கொண்ட பாலை… வாங்கி வைப்பதென்றால்… தங்க கிண்ணம் வேண்டும்… கண்ணாளா நான்தானே… உன் தங்கக் கிண்ணம் வா…
ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா… உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா… அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா… கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா… என்னோடு காதல் சொல்லி நயன்தாரா… அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா… கண்ணா நம் காதல் கண்டு… ம்ம்… ம்ம்…
—BGM—
Notes : Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Vairamuthu. ஊரெல்லாம் உன்னை கண்டுபாடல் வரிகள்.
பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது… கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது… ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது… தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுகிட்டது…
பெண் : தேதி தாள போல வீணே… நாளும் கிழியறேன் நான்… தேர்வு தாள கண்ணீரால… ஏனோ எழுதறேன்…
பெண் : இது கனவா… இல்லை நெஜமா… தற்செயலா… தாய் செயலா… நானும் இங்கு நானும் இல்லையே…
பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது… கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது… ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
—BGM—
பெண் : ஏதும் இல்லை வண்ணம் என்று… நானும் வாடினேனே… ஏழு வண்ண வானவில்லாய்… என்னை மாற்றினாய்…
பெண் : தாயும் இல்லை என்று உள்ளம்… நேற்று ஏங்கினேனே… தேடி வந்து நெய்த அன்பால்… நெஞ்சை தாக்கினாய்…
பெண் : கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்… உன் கண்கள் செய்த வைத்தியத்தால்… நன்மை அடைகிறேன்…
பெண் : மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்… உன் நிழல் கொடுத்த தைரியத்தால்… உண்மை அறிகிறேன்…
பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
—BGM—
பெண் : ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…
—BGM—
பெண் : மீசை வைத்த அன்னை போல… உன்னைக் காண்கிறேன்… நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம்… வேதம் ஆகுதே…
பெண் : பாழடைந்த வீடு போல… அன்று தோன்றினேன்… உன் பார்வை பட்ட காரணத்தால்… கோலம் மாறுதே…
பெண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு… ஆன போதிலும்… உன் பாசம் கண்டு தூங்கவில்லை… எனது விழிகளே…
பெண் : தென்றல் உண்டு திங்கள் உண்டு… ஆன போதிலும்… கண் நாளும் இங்கு தீண்டவில்லை… உனது நினைவிலே…
பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது… கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது… ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது… தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டது…
பெண் : தேதி தாள போல வீணே… நாளும் கிழியுறேன் நான்… தேர்வு தாள கண்ணீரால… ஏனோ எழுதறேன்…
பெண் : இது கனவா… இல்லை நெஜமா… தற்செயலா… தாய் செயலா… நானும் இங்கு நானும் இல்லையே…
பெண் : உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது… கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
Notes : Uppu Kallu Thanneerukku Song Lyrics in Tamil. This Song from Karuppusamy Kuththagaithaarar (2007). Song Lyrics penned by Yugabharathi. உப்பு கல்லு தண்ணீருக்குபாடல் வரிகள்.