ஊரெல்லாம் உன்னை கண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்நண்பேன்டா

Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil


பெண் : கண்களோடு இரு கண்களோடு…
ஒரு காதல் பூத்ததடி பெண்ணே…
காற்றிலாடி சிறு காற்றிலாடி…
ஒரு காடு பூத்ததடி கண்ணே…

பெண் : நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி…
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே…
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி…
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே…

BGM

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

BGM

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…

BGM

பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…

BGM

பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…

ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்…
மஞ்சள் வண்ணம் மாறும்…
நாணம் கொண்டதாலே…
உன் வண்ணம் பொன் வண்ணம்…
செவ்வண்ணம் ஆச்சு வா…

பெண் : கண்ணா நாம் கண்ணும்…
கண்ணும் கலப்போமா…
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா…

பெண் : அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா…
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா…

BGM

ஆண் : துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்…
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்…
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய்…
காற்றோடு மொட்டை போல உடைந்துவிட்டாய்…

பெண் : சிங்கம் கொண்ட பாலை…
வாங்கி வைப்பதென்றால்…
தங்க கிண்ணம் வேண்டும்…
கண்ணாளா நான்தானே…
உன் தங்கக் கிண்ணம் வா…

ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…

பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணா நம் காதல் கண்டு… ம்ம்… ம்ம்…

BGM


Notes : Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Vairamuthu. ஊரெல்லாம் உன்னை கண்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top