ஒரு கண் ஜாடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபென்னி டயல் & ஸ்வேதா பண்டிட்யுவன் சங்கர் ராஜாஅஞ்சான்

Oru Kan Jaadai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

ஆண் : தரையில் போகும் மேகம் இவளா…
மயங்கி பார்த்தேனே…
உயிரும் கூச்சல் போடும் அவள்…
செய்யும் மாயம் ஓயாதே…

ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

BGM

ஆண் : வானம் என்றால் தலைக்கு மேலே…
இருக்கும் என்று நினைத்திருந்தேன்…
எந்தன் வானம் எதிரில் நின்று…
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்…

ஆண் : ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே…
சாவி உந்தன் விழிகளிலே…
அனுமதிக்கும் பார்வை வந்தாலே…
அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே…

ஆண் : எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள்…
சேர்த்து போகும் நெடும் பயணம்…
காதல் ஒன்றுதான் இறுதிவரை…
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்…

BGM

ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

BGM

ஆண் : தொடரும் போட்ட கதையை போல…
எந்தன் மாலை முடிகிறதே…
உந்தன் கண்கள் பார்க்கத்தானே…
எனது காலை விடிகிறதே…

ஆண் : வாரம் ஏழு நாளும் உன்னாலே…
வானவில்லாய் தெரிகிறதே…
உன்னைக் காணா நாட்கள் எல்லாமே…
கருப்பு வெள்ளை ஆகிறதே…

ஆண் : மின்சாரத் தோட்டமே…
உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி…
காதல் செய்யலாம்…
முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி…

ஆண் : கம் ஆன்…
ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…

ஆண் : தரையில் போகும் மேகம் இவளா…
மயங்கி பார்த்தேனே…
உயிரும் கூச்சல் போடும் அவள்…
செய்யும் மாயம் ஓயாதே…

BGM


Notes : Oru Kan Jaadai Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Viveka. ஒரு கண் ஜாடை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top