பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கலை குமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | எஸ். ஏ. ராஜ்குமார் | கண்ணுபடபோகுதய்யா |
Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…
ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…
பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…
ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…
பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…
ஆண் : கண்ணோரமாய் கதை பேசு…
பெண் : காதல் அம்பை நீ வீசு…
—BGM—
ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம்…
கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்…
அன்பின் அருவியே கண்களானதோ…
—BGM—
பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும்…
எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்…
அமுதசுரபியே உள்ளமானதோ…
ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே…
உன் முகம் பார்த்தேனே…
பெண் : உயிரின் நிழலாக அன்பே…
உன்னைப் பார்த்தேனே…
ஆண் : ஒரு கோடி காலம் வாழ…
உன் மடி கேட்டேனே…
—BGM—
பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
ஆண் : காதல் அம்பை நீ வீசு…
—BGM—
ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்…
வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்…
உள்ளம் கேட்டு நான் உன்னை கெஞ்சினேன்…
—BGM—
பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்…
மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும்…
நானும் வாழவே உன்னைக் கேட்கிறேன்…
ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே…
உன்னில் பார்த்திடவா…
பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே…
உன் பெயர் கேட்டிடவா…
ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால்…
மரணம் ஜெயித்திடுவேன்…
—BGM—
பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…
ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…
பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…
ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…
பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…
—BGM—
Notes : Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Kalai Kumar. கண்ணோரமாய் கதை பேசு பாடல் வரிகள்.