பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | ஏ.ஆர்.ரகுமான் | அல்லி அர்ஜுனா |
Sollayo Solaikili Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…
பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…
—BGM—
பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே…
பச்சைக் கிளி ஒளிதல் போல…
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்…
ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல…
வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க…
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்…
பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை…
பொய்யில்லாமல் காதல் இல்லை…
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்…
ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு…
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி…
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்… ஹோஹோ ஹோஓ…
பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…
ஆண் : ஹோய்… சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…
ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…
—BGM—
பெண் : சேராத காதலர்கெல்லாம்…
சேர்த்து நாம் காதல் செய்வோம்…
காதல் கொண்டு வானை அளப்போம்…
ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து…
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்…
நிலவில் கூடி கவிதை படிப்போம்…
பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்…
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்…
சண்டை போட்டு இன்பம் வளர்போம்…
ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால்…
தேனைத்தானே சிந்திச்சிதறும்…
கையில் அள்ளி காதல் குடிப்போம்…
—BGM—
Notes : Sollayo Solaikili Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. சொல்லாயோ பாடல் வரிகள்.