Tag Archives: சுஜாதா மோகன்

மார்கழி மாசத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜாதா & பி.உன்னி கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Margazhi Maasathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…
தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

குழு : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… தினாக்குதின…

BGM

குழு : சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே…

BGM

ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே…
எங்கும் நம் பேச்சு…

ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து…
தேதியும் வச்சாச்சு…

பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே…
ஆளும் போயாச்சா…

பெண் : வானவில்லை தூக்கி வந்து…
தோரணம் போட்டாச்சா…

ஆண் : கல்யாண நாளன்று ஊரில்…
விடுமுறை விடுவோமா…
கச்சேரி கேட்பதற்கே நாம்…
கிளின்டனை அழைப்போமா…

ஆண் : நேற்று உன்னை பார்த்த…
பார்வைகள் நேர்மையானது…

பெண் : இன்று என்னை பார்க்கும்…
பார்வையில் ஏதோ இருக்கிறது…

ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்…
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்…

BGM

குழு : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்…

BGM

பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
பொண்ணு வரவேணும்…

ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை…
என்றால் பாரதி வரவேணும்…

ஆண் : காலை மாலை காதல் கடலில்…
மூழ்கி பார்ப்போமா…
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே…
முத்தமும் கொடுப்போமா…

பெண் : கண்ணாலே பிறக்கிற காதல்…
கண்ணுக்கு தெரியாது…
பெண்ணாக பிறந்தவர் இதயம்…
பிறருக்கு புரியாது…

BGM

பெண் : சிங்கம் போல வந்து நின்று…
சேர்த்துக்கோ பாவா…

ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது…
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது…

பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..

BGM

பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு…
கோட்டைய புடிச்சாச்சு…

ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்…
எல்லாம் மீசைய எடுத்தாச்சு…

ஆண் : காதல் ரதமே நாளை தினமே…
ஊரில் வலம் வருமே…

பெண் : எங்கள் தவமே தந்த வரமே…
ஒன்பது சுயம்வரமே…

ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு…
அனுமதி கேட்டாச்சா…

பெண் : அரசாங்க வாசலில் காதல்…
அனுமதி கேட்பதில்லை…

ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில்…
காவல் நானிருப்பேன்…
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில்…
சிறை இருப்பேன்…

ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி…
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி… ஹே ஹேய் ஹேய்…

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…

பெண் : தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM


Notes : Margazhi Maasathu Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. மார்கழி மாசத்து பாடல் வரிகள்.


செக்க செவந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Sekka Sivanthavalea Song Lyrics in Tamil


BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : வெட்ட வெளிதனிலே…
வெட்ட வெளிதனிலே…
நான் பனியில் நனைந்தாலும்…
உன் மூச்சில் வெந்தேனே…

BGM

ஆண் : காதல் மழையினிலே…
காதல் மழையினிலே…
நான் குடையை மறந்தேனே…
என்னுயிரும் நனைந்தேனே…

பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…

ஆண் : சில ரோஜா மலர்களும்…
உன்னை கண்டதும்…
கன்னம் சிவக்கிறது…
கன்னம் சிவக்கிறது…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : காதல் நெஞ்சத்தை…
காற்றில் விட்டேனே…
அந்த காற்றே எரிந்தாலும்…
என் காதல் எரியாதே…

BGM

ஆண் : செவ்வாய் கிரகத்தில்…
நீ போய் வாழ்ந்தாலும்…
நான் உன்னை சேர்வேனே…
என் காதல் தீராதே…

பெண் : உலகம் அழகியது…
காதல் சொல்லியது…

ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்…
இன்னும் இனிக்கிறது…
இன்னும் இனிக்கிறது…

BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM


Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


சில்லென்று வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மணி சர்மாஏழுமலை

Chillendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

BGM

ஆண் : வண்டென என் மனம் வந்து…
இந்த ஊதா பூவை ஊதும்…
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்…
மேல் வந்து நின்ற மாத்திரம்…

பெண் : விட்டது தொட்டது போக…
கொஞ்சம் வைத்தால் என்ன மீதம்…
அன்புக்கு உண்டு சாத்திரம்…
ஆகாது இந்த ஆத்திரம்…

ஆண் : கண்ணே நீ ஓர் சித்திரம்…
என் கையில் என்றும் பத்திரம்…

பெண் : அன்பே நீ ஓர் மந்திரம்…
நான் ஆனேன் உன்னால் எந்திரம்…

ஆண் : ஒவ்வொரு நாளும் நீயாட…
பூ மஞ்சம் நான் போடவா…

BGM

பெண் : முக்கனி சக்கரை சே…
அது பாதாம் பாலில் ஊற…
தித்திக்கும் வேளை அல்லவா…
வெட்கத்தை போக சொல்லவா…

ஆண் : கற்பனை செய்திடும் கம்பன்…
உன்னை கண்டால் தோற்று போவான்…
சொல்லாலே வித்தை செய்கிறாய்…
உள் அர்த்தம் வைத்து சொல்கிறாய்…

பெண் : பெண்மை என்னும் ஜாதியில்…
அவள் பேசும் பேச்சும் ஜாடையில்…

ஆண் : ஜாடை செய்தால் போதுமே…
கை ஜாதி பூவை கிள்ளுமே…

பெண் : கிள்ளிடும் நேரம் கூச்சங்கள்…
தாளாமல் நான் துள்ளவா…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM


Notes : Chillendru Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Vaali. சில்லென்று வரும் பாடல் வரிகள்.


தூளு போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சுஜாதா மோகன்இளையராஜாஇவன்

Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil


BGM

குழு : தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…
தூளு போடு தூளு மிளகாய் தூளு…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

பெண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு…
உள் நாக்கு சப்புக் கொட்டும் டேஸ்ட் பண்ணி பாரு…
பாவா நீ பாவா நா பாவா ரா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…
பாவா…

பெண் : பாவா பாவா பாவா பாவா பாவா…
பாவா பாவா பாவா பாவா பாவா…

BGM

பெண் : கொக்கொக்கொக் கோங்குரா…
ஆந்தரா பொண்ணு ஏங்குறா…

ஆண் : வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து…
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்…

பெண் : மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்…
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்…

ஆண் : ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி…
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி…

பெண் : எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்…
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்…

ஆண் : டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே…
பெண் : சூஸிகா சாலு விஷயம் லேதே…
ஆண் : ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா…

BGM

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
ஆண் : தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

BGM

பெண் : ஊற வைக்க ஊற வைக்க…
டேஸ்ட்டு இன்னும் கூடும்…
காய வைக்க காய வைக்க…
காக்கா கொத்திப் போகும்…

ஆண் : மூடி வைக்க மூடி வைக்க…
மூடு இன்னும் கூடும்…
கைய வைக்க கைய வைக்க…
தையதக்கா ஆகும்…

பெண் : இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா…
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா…

ஆண் : இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா…
அதுக்கு மேலே மாவடு ஊறுகா…

பெண் : மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா…
ஆண் : போட்டுக்க லேதே நமக்கு கும்மா…
பெண் : ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா…

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூவு சால்ட் தூளு லெமென்னு சாறு…

ஆண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே…
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு…
தூளு போடு தூளு மொளகாத் தூளு…

பெண் : பாவா பாவா பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…
பாவா பாவா…
நீ பாவா நா பாவா ரா பாவா…


Notes : Thoolu Podu Thoolu Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Kabilan. தூளு போடு பாடல் வரிகள்.


மின்னலடிக்கும் வெண்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மரகதமணிகொண்டாட்டம்

Minnalidikkum Venmai Song Lyrics in Tamil


ஆண் : வேலன்டைன்ஸ் டே…

BGM

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…
மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

ஆண் : நீ நீ நீ நீ தனி தனி தனி…
க ம நி க ம நி கம நி…
மனம் இனி மனம் இனி…
மதுர கனி மதுர கனி…
மரகத மணி மரகத மணி…

ஆண் : சுடுகிற பனி நீ சுடுகிற பனி நீ…
சுதிலய சுர அணி சுதிலய சுர அணி…
சரி க ம ப த நி ச நி…

பெண் : போதுமென்று ஏதுமில்லை…
போக வேண்டும் ஆசை எல்லை…

ஆண் : காம்பில்லாத காமன் முல்லை…
வீம்புதானே தாங்கவில்லை…

பெண் : ஒரு வாங்க புயல்தான்…
பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

பெண் : ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிரி சிரி…
சிவ ஸ்ரீ உபசரி உபசரி உபசரி…
மதனபுரி எனை அனுசரி அனுசரி அனுசரி…
மதுரசலஹரி லஹரி லஹரி…
மொழி வர அருள்புரி அருள்புரி அருள்புரி…
ச நி த ப ம க ரி ச ரி…

ஆண் : பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு…
ஆனபோதும் ஏ ஒன் கிரேடு…

பெண் : மேடை இன்றி பாடும் சேதி…
ஆசை கொண்ட மாடர்ன் லேடி…

ஆண் : ஒரு காக்டெயில் பார்ட்டி…
என்னை ஏதோ தின்ன கேக்குது…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
பெண் : நான்தான்…
ஆண் : என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…


Notes : Minnalidikkum Venmai Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. மின்னலடிக்கும் வெண்மை பாடல் வரிகள்.


பாடவா பாடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்பிரவின் மணிலிட்டில் ஜான்

Paadava Paadava Song Lyrics in Tamil


BGM

பெண் : பாடவா பாடவா அலைகளை பாடவா…
பாடவா பாடவா கரைகளை பாடவா…

பெண் : பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி…
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட…
அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட…

BGM

பெண் : மழையின் துளி ஒன்று…
மயில் இறகில் விழுந்தால்…
தோகை மயில் ஆடும்…
காட்சிகளும் கண்டேன்…

பெண் : மழையின் துளி ஒன்று…
பாறைகளில் விழுந்தால்…
மௌனமே மிஞ்சும்…
காட்சிகளும் கண்டேன்…

பெண் : ரெண்டு பொருள் உண்டு…
என்ன பொருள் பாட…
பாலை வனம் எங்கும்…
பால் நிலவு பால் சிந்தி யார் பார்த்திட…

BGM

பெண் : சின்ன சின்ன கிண்ணம்…
ஊற்றி வைத்த வண்ணம்…
தூரிகையில் சேர்ந்தால்…
ஓவியங்கள் ஆகும்…

பெண் : ஓவியனின் வண்ணம்…
ஊற்றி வைத்த கிண்ணம்…
பேதை கையில் சேர்ந்தால்…
என்ன நிலையாகும்…

பெண் : ரெண்டு நிலை உண்டு…
எந்த நிலை பாட…
ரசிகனில்லை என்றால்…
தாமரை பூ பூத்து யார் பறித்திட…

BGM

பெண் : பாடவா பாடவா…
பாடவா பாடவா பாடவா…

பெண் : பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி…
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட…
அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட…

பெண் : பாடவா பாடவா… ஆஆ…
பாடவா… ஆஆ…

BGM


Notes : Paadava Paadava Song Lyrics in Tamil. This Song from Little John (2001). Song Lyrics penned by Vairamuthu. பாடவா பாடவா பாடல் வரிகள்.


தப்புத்தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்வில்லன்

Thappu Thanda Song Lyrics in Tamil


BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

ஆண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM

ஆண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவி நான் செய்யவா…
பெண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

பெண் : களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை…
என்னிடம் திருப்பிக் கொடு…
என் உடல் கொஞ்சம் சாயட்டும்…
உயிர் கொஞ்சம் தூங்கட்டும்…
ஒத்தடம் தந்து விடு…

ஆண் : ஓ… ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது…
அனுமதி தந்து விடு…
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும்…
வன்முறை முத்தம் கொடு…

பெண் : இடியோ மழையோ…
அது அறையில் இருக்கட்டுமே…
இரவோ பகலோ…
அது வெளியில் இருக்கட்டுமே…

ஆண் : நடந்து வரும் சித்திரமே…
நனைய விடும் சொப்பனமே…
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே…
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

ஆண் : தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும்…
சூரியன் புதியதடி…
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும்…
சுகவகை புதியதடி…

பெண் : இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று…
சாயுது இளையகொடி…
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று…
ஏங்குது பழையபடி…

ஆண் : ஆடை சரிந்தால்…
உன் அவசியம் பார்த்து வைப்பேன்…
ஜாடை புரிந்தால்…
உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்…

பெண் : மார்பழகு இந்திரனே…
மஞ்சள் நிற மன்னவனே…
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே…
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

பெண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
ஆண் : புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM


Notes : Thappu Thanda Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. தப்புத்தண்டா பாடல் வரிகள்.


சேரன் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிமூவேந்தர்

Cheran Enna Song Lyrics in Tamil


ஆண் : ஹே ஏரிக்கரை காத்தடிக்க…
ஏலேலோ பாட்டெடுக்க…
ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க…
யார் படிப்பா பின்பாட்டு…
அட நான் படிப்பேன் முன் பாட்டு…

ஆண் : ஹேய் யார்ரா அவன் பாடறது…
என் பேரன வாழ்த்தி பாடறா…

ஆண் : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

குழு : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

ஆண் : இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ…
கருணையிலே வள்ளலாரு…
வீரத்திலே ஐய்யனாரு…
அழகில் இவர் எம்ஜிஆருடா…

ஆண் : ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள…
இப்ப பாருங்க…

BGM

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

BGM

ஆண் : ஹே கம்பு சண்ட போடுவாரு…
இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா…
எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா…

பெண் : ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு…
இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி…
இதுவரைக்கும் நின்னதாரப்பா…

ஆண் : ஏழை வீட்டு அடுப்பெறியும் இவராலதான்…
அட எதுத்தவங்க இடுப்பொடியும் இவராலதான்…

பெண் : பாசத்தோட வாழறதும் இவராலதான்…
எங்க பாதை எங்கே போனாலும் இவரோடதான்…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…
இல்லடா இல்லேடா…

குழு : ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற
மயிலு உனக்கு மயிலு உனக்கு…
மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல…
விருந்து இருக்கு விருந்து இருக்கு…

குழு : கொழுந்து வெத்தல…
மடிச்சு கொடுத்து…
மடிக்கும் போது…
மனச பறிச்சு…
அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு…
ஜோடி சேந்துக்கம்மா…

BGM

ஆண் : தலைவரெல்லாம் வந்த பாத…
எங்க அண்ணன் இப்ப நடக்கறதும்…
அதுதான்னு பாட்டு பாடப்பா…

பெண் : ஹே ஆளான பொண்ணை எல்லாம்…
அடி மனசுக்குள்ள விரும்புறதும்…
அண்ணன் போல மாப்பிள்ளதான்பா…

ஆண் : குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது…
இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது…

பெண் : ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது…
அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…

பெண் : வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…


Notes : Cheran Enna Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சேரன் என்ன பாடல் வரிகள்.


வெண்ணிலவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்தேவாஆசையில் ஒர் கடிதம்

Vennilavai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM

ஆண் : இந்த பூமி உடைந்தாலும்…
நிலவில் இருவரும் குதிப்போம்…

பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும்…
காற்றில் கரங்களில் மிதப்போம்

ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும் காதல் தீராது…
கடலெல்லாம் காய்ந்தாலும் முத்தம் காயாது…

பெண் : காதலின் சாட்சியாய் நாம் உயிர் வாழலாம்…
காதலை வாழ்த்தலாம் அன்பே…

ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம்…
முழு மூச்சில் நாம் காணுவோம்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM

பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்…
உலகம் முழுவதும் எனக்கு…

ஆண் : இமையோடு இமை சேர்த்தால்…
இறப்பின் பயமில்லை நமக்கு…

பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா…
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா…

ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே…
மோகத்தை வாழ்த்த வா முத்தே…

பெண் : இதே இன்பம் இதே துன்பம்…
உயிர் வாழ தினம் வேண்டுமே…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM


Notes : Vennilavai Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவை பாடல் வரிகள்.