பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன் | மணி சர்மா | ஏழுமலை |
Chillendru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…
பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…
ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…
பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…
—BGM—
ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…
—BGM—
ஆண் : வண்டென என் மனம் வந்து…
இந்த ஊதா பூவை ஊதும்…
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்…
மேல் வந்து நின்ற மாத்திரம்…
பெண் : விட்டது தொட்டது போக…
கொஞ்சம் வைத்தால் என்ன மீதம்…
அன்புக்கு உண்டு சாத்திரம்…
ஆகாது இந்த ஆத்திரம்…
ஆண் : கண்ணே நீ ஓர் சித்திரம்…
என் கையில் என்றும் பத்திரம்…
பெண் : அன்பே நீ ஓர் மந்திரம்…
நான் ஆனேன் உன்னால் எந்திரம்…
ஆண் : ஒவ்வொரு நாளும் நீயாட…
பூ மஞ்சம் நான் போடவா…
—BGM—
பெண் : முக்கனி சக்கரை சே…
அது பாதாம் பாலில் ஊற…
தித்திக்கும் வேளை அல்லவா…
வெட்கத்தை போக சொல்லவா…
ஆண் : கற்பனை செய்திடும் கம்பன்…
உன்னை கண்டால் தோற்று போவான்…
சொல்லாலே வித்தை செய்கிறாய்…
உள் அர்த்தம் வைத்து சொல்கிறாய்…
பெண் : பெண்மை என்னும் ஜாதியில்…
அவள் பேசும் பேச்சும் ஜாடையில்…
ஆண் : ஜாடை செய்தால் போதுமே…
கை ஜாதி பூவை கிள்ளுமே…
பெண் : கிள்ளிடும் நேரம் கூச்சங்கள்…
தாளாமல் நான் துள்ளவா…
—BGM—
ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…
பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…
ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…
பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…
—BGM—
Notes : Chillendru Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Vaali. சில்லென்று வரும் பாடல் வரிகள்.