சில்லென்று வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மணி சர்மாஏழுமலை

Chillendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

BGM

ஆண் : வண்டென என் மனம் வந்து…
இந்த ஊதா பூவை ஊதும்…
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்…
மேல் வந்து நின்ற மாத்திரம்…

பெண் : விட்டது தொட்டது போக…
கொஞ்சம் வைத்தால் என்ன மீதம்…
அன்புக்கு உண்டு சாத்திரம்…
ஆகாது இந்த ஆத்திரம்…

ஆண் : கண்ணே நீ ஓர் சித்திரம்…
என் கையில் என்றும் பத்திரம்…

பெண் : அன்பே நீ ஓர் மந்திரம்…
நான் ஆனேன் உன்னால் எந்திரம்…

ஆண் : ஒவ்வொரு நாளும் நீயாட…
பூ மஞ்சம் நான் போடவா…

BGM

பெண் : முக்கனி சக்கரை சே…
அது பாதாம் பாலில் ஊற…
தித்திக்கும் வேளை அல்லவா…
வெட்கத்தை போக சொல்லவா…

ஆண் : கற்பனை செய்திடும் கம்பன்…
உன்னை கண்டால் தோற்று போவான்…
சொல்லாலே வித்தை செய்கிறாய்…
உள் அர்த்தம் வைத்து சொல்கிறாய்…

பெண் : பெண்மை என்னும் ஜாதியில்…
அவள் பேசும் பேச்சும் ஜாடையில்…

ஆண் : ஜாடை செய்தால் போதுமே…
கை ஜாதி பூவை கிள்ளுமே…

பெண் : கிள்ளிடும் நேரம் கூச்சங்கள்…
தாளாமல் நான் துள்ளவா…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM


Notes : Chillendru Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Vaali. சில்லென்று வரும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top