Tag Archives: சாதனா சர்கம்

நிஜமா நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & திப்புதேவாவிரும்புகிறேன்

Nijama Nijame Song Lyrics in Tamil


குழு : சிரிச்சா சிரிப்பு வராதடி தோழி…
அழுதா அழுக வராதடி தோழி…
காயம் பட்டாலும் வலிக்காதடி தோழி…
தீ பட்ட விரலும் தித்திக்கும் தோழி…

ஆண் : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
வயசு பொண்ணுக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இது தான் காதல் அறிகுறி என்று அறிஞ்சிக்கடி…

BGM

பெண் : நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…

பெண் : பந்த பாசம்விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே தோழா…

பெண் : நிஜமா நிஜமே நிஜமா…

BGM

பெண் : பாறாங்கல் மார்பழகா பாலாடை நிறத்தழகா…
பள்ளி கொள்ள உன் மார்பு போதும்…
கோயில் சிலை அழகா கொலை செய்யும் கண்ணழகா…
கூத்தாட உன் அழகு போதும்…

பெண் : கொஞ்சுடா கொஞ்சம் அள்ளி துள்ள வாடா…
அஞ்சு நாள் சொர்க்கம் தினம் தானம் தாடா…

ஆண் : காதல் வந்தால் வெட்கம் வெளியே போய்விடுமா…
மான்களுக்கும் புலி போல் ஆசை தோன்றிடுமா… ஹஹ

ஆண் : நிஜமா நிஜமே நிஜமா…

—BGM—

குழு : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
உனக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இதுதான் காதல் அறிகுறி…

பெண் : அரும்பாக இருந்த உள்ளம் இரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

ஆண் : இரும்பாக இருந்த உள்ளம் கரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

பெண் : கொஞ்ச நாளிலே உள்ளம் மாறி போனேன்…
கொஞ்சி காட்டவா பாதி ஆணாய் ஆனேன்…

ஆண் : காதலியே உன்னில் பாதி நானடியே…
கருவிழியே இனி இருவர் வழி ஒரு வழியே… ஹேஹே…

ஆண் : நிஜமா…
பெண் : நிஜமே…
ஆண் : சுமையா…
பெண் : சுகமே…

பெண் : நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…

ஆண் & பெண் : நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்ப வில்லை…

ஆண் & பெண் : பந்த பாசம் விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே…
பெண் : தோழா…
ஆண் : தோழி…


Notes : Nijama Nijame Song Lyrics in Tamil. This Song from Virumbugiren (2002). Song Lyrics penned by Vairamuthu. நிஜமா நிஜமே பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்பரத்வாஜ்அன்பே அன்பே

Anbe Anbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

பெண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
என்னோடு நானில்லையே…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM

ஆண் : ஓட்டுக்குள்ளே நத்தையை போல்…
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்…
பறவை போலே பறகிறதே…
பார்த்து கொள்ளு நீ கொஞ்சம்…

BGM

பெண் : மின்னல் வந்து விளக்கேற்றும்…
மேகம் வந்து தாலாட்டும்…
நினைக்கும் திசையில் பறந்திடலாம்…
காதல் உனக்கு கை கொடுக்கும்…

ஆண் : குட்டி குட்டி செடி அது…
தொட்டில் கட்டும் மலர் தினம்…
உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே…

பெண் : பெற்றவர்கள் முகம் சுற்றி…
உள்ளவர்கள் முகம் அட…
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…
ஆண் : அன்பே அன்பே…
பெண் : ல லால லல லல லால…

BGM

ஆண் : தேவதையின் கதை கேட்டு…
சின்ன வயதில் தூங்கினேன்…
தூக்கம் பறிக்கும் தேவதையை…
நேரில் இன்று பார்க்கிறேன்…

BGM

பெண் : சின்ன வயதில் பார்த்த நிலா…
தூரமாகி போகலாம்…
இந்த வயதில் நீ நினைத்தால்…
நிலவின் மடியில் வாழலாம்…

ஆண் : ஓ… காதல் ஒரு வானம்…
அதில் அலைவது சுகமே…
சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்…

பெண் : காதல் ஒரு மழை…
அதில் தேவை இல்லை குடை…
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்துடலாம்…

ஆண் : ஓநீயின்றி நான் இல்லை அது நிச்சயம்…

பெண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடா…

ஆண் : ஒரே முறை ஒரே முறை…
ஒரே முறை பாரடி…

ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே…
நீயின்றி நான் இல்லையே…

BGM


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Anbe Anbe (2023). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்பே அன்பே பாடல் வரிகள்.


காற்றில் ஓர் வார்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் & எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil


பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

BGM

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…
மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆஹா…
ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆ ஹா…

ஆண் : ஆஆஆ… ஆண் : சுற்றி என்னை துரத்தும் துயரமடி…
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி…

பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்…
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி…

ஆண் : மருந்துகள் இல்லா தேசத்தில் கூட…
மைவிழி பார்வைகள் போதும்…

பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட…
காதலன் புன்னகை போதும்…

ஆண் : உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்…
பெண் : உன் மார்பின் வெப்பம் போதும்…

குழு : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : விதைகளை கிழித்து செடி முளைக்கும்…
அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்…

பெண் : சதை கொண்ட மயக்கம் கழிந்த பின்னே…
உன் சத்தியத்தின் நிழலில் குடி இருப்பேன்…

ஆண் : காதலி உதறிய தாவணி பறந்து…
வானவில் ஆனதென்ன…

பெண் : காதலன் சிதறிய பேனா மையில்…
வானம் தோன்றியது என்ன…

ஆண் : நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும்…
பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

ஆண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
ஆண் & பெண் : அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…

பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
ஆண் : உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

{ பெண் : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்… } * (2)


Notes : Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. காற்றில் ஓர் வார்தை பாடல் வரிகள்.


ஷயோ ஷயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்டிம்மி & சாதனா சர்கம்தேவாபகவதி

Saiyo Saiyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…

BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

ஆண் : கடல் காற்றில் உந்தன் வாசம்…
உயிர் மூச்சில் உந்தன் வாசம்…

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

BGM

ஆண் : ரெண்டு ஸ்பூன் புன்னகை…
ரெண்டு ஸ்பூன் வன்முறை…
கண்ணோடு கலந்தது ஏனோ…

பெண் : ரெண்டு ஸ்பூன் முத்தங்கள்…
ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள்…
கன்னத்தில் கொடுத்தது ஏனோ…

ஆண் : உன் சிரிப்பு எல்லாம்…
அன்பே ஹைக்கூ கவிதையடி…
அதை படித்து பார்த்தேன்…
ஐயோ புரியவே இல்லையடி…

பெண் : என் வீரியத்தை நீ உரசுகையில்…
காதல் ஓடம் ஒன்று குதிக்கும்…

ஆண் : ஒரு கருப்பு வெள்ளை…
பூக்கள் உண்டாக்கிட்டேன்…
அவை உந்தன் கண்ணில் கண்டேன் டேன் டேன்…

BGM

பெண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அட உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அட உன் வாசம்…

BGM

ஆண் : அழகான இதழால் அடிக்கடி இயல்வாய்…
அன்பே நீ ஐயோ என்பாய் ரசித்தேன்…

பெண் : சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும்…
அன்பே நீ சாரி என்பாய் ரசித்தேன்…

ஆண் : உன் நியாபகத்தால் வருகின்ற…
தும்மலை ரசித்தேன்…

பெண் : என் பேரை சொல்லி…
நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்…

ஆண் : ரயில் நிலையத்திலே என்னை வழி அனுப்பி…
ஜன்னல் ஓரம் அழுதாய் ரசித்தேன்… ஏன் ஏன்…

பெண் : மழை மாதத்திலே குடை மறைத்து விட்டு…
எந்தன் குடைக்குள் வந்தாய் ரசித்தேன்…

BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

ஆண் : கடல் காற்றில் உந்தன் வாசம்…
உயிர் மூச்சில் உந்தன் வாசம்…

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…


Notes : Saiyo Saiyo Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Na. Muthukumar. ஷயோ ஷயோ பாடல் வரிகள்.


தத்தளிக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்சாதனா சர்கம், கார்த்திக் & திப்புகார்த்திக் ராஜாஆல்பம்

Thathalikuthe Song Lyrics in Tamil


ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : ஒரு வரி வார்த்தையிலே…
உசுர உசுர வாங்கியதே ஏன்…
ஒரு விழி பார்வையிலே…
மூச்சு திணற செய்தது ஏன்…

பெண் : வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…
வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…

ஆண் : மந்திர தந்திர அரக்கியடா அரக்கியடா…
உன்னை மயக்கிடும் அழகிய வில்லியடா வில்லியடா…

BGM

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : வீர பாண்டிய கட்ட பொம்மா கப்பம் கட்டு…
விடமாட்டேன் காதல் கப்பம் உடனே கட்டு…

ஆண் : இவ சொக்கு சொக்கு பொடி போடா வந்தா…
அதிரூப தேசத்தின் அழகியடா…
இவள் இருக்க இருக்க கிரங்க வைத்த…
ஒரு கள்ளியடா…

பெண் : விஷ்டியும் திரியும் வேண்டாம்…
முதலும் வட்டியும் வேண்டாம்…
முத்தம் ஒன்றே போதுமடா…
அதுவும் இதழில் வேண்டுமடா…
முத்தம் ஒன்றே போதுமடா…
அதுவும் இதழில் வேண்டுமடா…

ஆண் : மன்மத நாட்டின் திராட்சையாட…
காதல் மதுவாய் ஊற்றுதடா…
மன்மத நாட்டின் திராட்சையாட…
காதல் மதுவாய் ஊற்றுதடா…

BGM

பெண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : சிறை பிடிக்க படைகள் அனுப்ப போவதில்லை…
நீயாக சிறையில் விழுந்தாள் தண்டனை இல்லை…

ஆண் : இவள் வசியம் செய்ய வந்த வலையை வீச வந்த…
தேவலோகத்தின் அரசியடா…
இவள் சுற்றி சுற்றி வந்து சிக்க வைத்த…
ஒரு சொக்கியடா…

பெண் : காதல் செய்ய விலையை சொல்…
கடிதம் எழுத விலையை சொல்…
கட்டி பிடிக்க விலையை சொல்…
கணக்கு பார்த்து சரியா சொல்…
கட்டி பிடிக்க விலையை சொல்…
கணக்கு பார்த்து சரியா சொல்…

ஆண் : இது பக்கத்து வீட்டு கவிதையடா…
உண்மை மொத்தமாக விலை பேசுதடா…
இது பக்கத்து வீட்டு கவிதையடா…
உண்மை மொத்தமாக விலை பேசுதடா…

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

ஆண் : ஒரு வரி வார்த்தையிலே…
உசுர உசுர வாங்கியதே ஏன்…
ஒரு விழி பார்வையிலே…
மூச்சு திணற செய்தது ஏன்…

ஆண் : வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…
வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…

ஆண் : மந்திர தந்திர அரக்கியடா அரக்கியடா…
உன்னை மயக்கிடும் அழகிய வில்லியடா வில்லியடா…

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…


Notes : Thathalikuthe Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Paarthi Bhaskar. தத்தளிக்குதே பாடல் வரிகள்.


ஏ நெஞ்சே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஷ் ராகவேந்திரா & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாஏப்ரல் மாதத்தில்

Yea Nenjea Song Lyrics in Tamil


பெண் : படபட படவென அடிக்குது இதயம்…
தடதட தடவென துடிக்குது இமைகள்…
சலசல சலவென சுழருது விழிகள்…

பெண் : அடுத்தது யாரோ அடுத்தது யாரோ…
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ…
எனதா உனதா எனவே எனவே…
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது…

BGM

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஹே ஹே ஹே… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…

பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM

பெண் : என் நிலவில் மாற்றம் எதிலும் தடுமாற்றம்…
பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம்…

BGM

ஆண் : கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே…
வரைந்து அழைத்தாலும் இனி வாராது தூக்கம்…

பெண் : வெகு நேரம் பேசி பின்பு…
விடை பெற்று போகும் நேரம்…
நாள் அடிகள் நடக்கும் கால்கள்…
நடை மறந்து திரும்பும் ஏனோ…

ஆண் : பேசாத நேரம்தானே பெரிதாக தோணும் அன்பே…
காலங்கள் தோற்க்கும் இங்கே…

BGM

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM

பெண் : நேற்று வரும் கனவில் நிலவு வரவில்லை…
அடம்பிடிக்கும் நிலவை இனி நான் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : காதல் வரும்போது கனவுகளும் மாறும்…
நீ விரும்பும் நிலவை இனி தினம் தோறும் பார்ப்பாய்…

பெண் : யார் யாரோ எழுதி சென்ற…
புரியாத கவிதை எல்லாம்…
நான் கேட்டு ரசித்தேன் இன்று…

ஆண் : நான் பார்த்த மரமும் இலையும்…
புது போர்வை போர்த்தி கொண்டு…
புது பார்வை பார்த்துக்கொண்டு…
நம்மை பார்த்து சிரிக்கின்றதே…

பெண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

ஆண் : ஓ ஓ ஓ… காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்…
ம்ம் ம்ம் ம்ம்… ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்…

பெண் : மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு…
சில்லென்று மலரை தொடுதே…

ஆண் : ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…

BGM


Notes : Yea Nenjea Song Lyrics in Tamil. This Song from April Maadhathil (2002). Song Lyrics penned by Thamarai. ஏ நெஞ்சே பாடல் வரிகள்.


தமிழ்ச்செல்வி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன் & சாதனா சர்கம்சபேஷ் & முரளிகூடல்நகர்

Tamil Selvi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…

BGM

பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…

ஆண் : திருநீறாத் தெரியிற வானம்…
ஒரு துணையா நமக்கிது போதும்…
நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்…

பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்…
அது போல் ஒரு குடிசையே போதும்…
ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்…

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நான் வருவேன்… நான் வருவேன்…

BGM

பெண் : குளுதானித் தண்ணி குளிராக நீயும்…
பக்கத்தில் நின்னா பதறாதோ…

ஆண் : ஓ… பகுமானம் ஏதும்… ஏதும்…
பண்ணாத புள்ள… புள்ள…
பஞ்சாங்கப் பேச்சில் கொல்லாத…

பெண் : சிறுவாடு போல ஏதோ…
சில கனவு நெஞ்சில் சேர்த்தேன்…

BGM

ஆண் : கருவண்டுக் கண்ணைத் தாடி…
ஒரு முத்தம் வச்சுத்தாரேன்…

பெண் : தாங்காமத் தள்ளிப் போனா…
உயிரோடு விடுவாயா…

ஆண் : ஏய்… தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…

BGM

ஆண் : சித்தருவா கண்ணும் சிறு மிளகு சொல்லும்…
நெஞ்சுக்குழிக்குள்ளே நெருப்பாக…

பெண் : வெள்ளாட்டு குணமும் குணமும்…
வெள்ளந்திச் சிரிப்பும் சிரிப்பும்…
என்னோட மனசில் எறும்பாக…

ஆண் : அரசெலையா நீண்ட வகிடில்…
திருக்குங்குமம் வச்சிப் பார்ப்பேன்…

BGM

பெண் : கொலசாமிக் கோயில் நீதான்…
ஒன் கைய நம்பி வாழ்வேன்…

ஆண் : அடி தூரி கரும்பு போல…
உள் நெஞ்சில் சேர்ந்தாயே…

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…

பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…

ஆண் : திருநீறாத் தெரியிற வானம்…
ஒரு துணையா நமக்கிது போதும்…
நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்…

பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்…
அது போல் ஒரு குடிசையே போதும்…
ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்…

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…


Notes : Tamil Selvi Song Lyrics in Tamil. This Song from Koodal Nagar (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தமிழ்ச்செல்வி பாடல் வரிகள்.


ஹலோ ஹலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், அனுராதா ஸ்ரீராம், திப்பு & கிளிண்டன் செரிஜோவித்யாசாகர்வில்லன்

Hello Hello Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹலோ ஹலோ என் காதலா…
என்னைக் கொஞ்சம் கண் பாரடா…
ஹலோ ஹலோ என் காதலா…
என்னைக் கொஞ்சம் கண் பாரடா…

பெண் : உன் கைகள் இடையை இடையை…
இடையை வளைக்கட்டுமே…
என் எலும்புகள் உடைபடும் உடைபடும்…
ஓசை கேட்கட்டுமே…

BGM

பெண் : ஹலோ ஹலோ என் மன்மதா…
செல் போன் நம்பர் நீ கூறடா…

பெண் : இரவோ பகலோ மழையோ புயலோ…
உனைக் கூப்பிடுவேன்…
இடையில் தொடங்கி இதயம் வரையில்…
உனை சாப்பிடுவேன்…

BGM

பெண் : கொஞ்சம் கொஞ்சமாய் என்னைக் கொள்ளையடித்து…
முத்து முத்தத்தால் எந்தன் மூச்சை நிறுத்து…

ஆண் : உன் குறைகளை எங்ஙனம் தீர்ப்பேன்…
ஒரு கோரிக்கை மனமோடு பார்ப்பேன்…

பெண் : மயிலிறகாய் எனை மார்பில் அனைத்து…
நுனிவிரலால் ஒரு பாடம் நடத்து…

ஆண் : கண்ணாடியில் பண்ணிய சிற்பம்…
கையாளுதல் மிகமிக நுட்பம்…

பெண் : நான் கொட்டித் தந்தாலும்…
அன்பே ஏன் வெட்டிச் செல்கின்றாய்…
என்னை நீ வெட்டித் தின்பாயா… அழகே…

ஆண் : ஒரு பெண்ணின் நெஞ்சுக்குள்…
துப்பட்டா மூடும் எரிமலைகள்…
ஐயோ ஓர் இரவில் அணையாது பெண்ணழகே…

BGM

பெண் : ஹலோ ஹலோ என் காதலா…
ஹலோ ஹலோ என் மன்மதா…

BGM

பெண் : பருவம் வந்து நானும் மலர்ந்துவிட்டேன்…
பஞ்சுமெத்தையில் இன்னும் மலரவில்லை…

ஆண் : அதற்காவான ஆவன செய்வேன்…
அதில் ஆயிரம் பூமியில் கொள்வேன்…

பெண் : முல்லை அரும்பை மெல்ல கிள்ளிப்பறித்து…
முதல் முதலாய் என்னை வெட்கப்படுத்து…

ஆண் : கடல் சக்கரை ஆவது சுலபம்…
நீ வெட்கப்படுவது கடினம்…

பெண் : கட்டித்தங்கங்கள் நெஞ்சோடு கட்டிக்கிடக்கிறதே…
கையோடு வெட்டிச்செல்வாயா வருவாயா…

ஆண் : கோலார் தங்கவயல் இப்போது வற்றிப்போனதடி…
உன்தங்கம் நித்தம் வளருதடி விடுவேனா…

பெண் : ஹலோ ஹலோ என் காதலா…
செல் போன் நம்பர் நீ கூறடா…

பெண் : உன் கைகள் இடையை இடையை…
இடையை வளைக்கட்டுமே…
என் எலும்புகள் உடைபடும் உடைபடும்…
ஓசை கேட்கட்டுமே…

BGM


Notes : Hello Hello Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. ஹலோ ஹலோ பாடல் வரிகள்.


அரிமா அரிமா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்எந்திரன்

Arima Arima Song Lyrics in Tamil


BGM

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

குழு : அடி அழகே உலகழகே…
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்…

BGM

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

ஆண் : ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி…
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்…
அக்கினி அணையலையே…

ஆண் : உன் பச்சை தேனை ஊற்று…
என் இச்சை தீயை ஆற்று…
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து…
கட்டில் இலை போட்டு…

BGM

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

BGM

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

குழு : அடி அழகே உலகழகே…
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்…

BGM

ஆண் : சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்…
சட்டென்று மோகம் பொங்கிற்றே…

பெண் : ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்…
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே…
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே…

ஆண் : நான் மனிதன் அல்ல…
அஃறினையின் அரசன் நான்…
காமுற்ற கணினி நான்…
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்…
சிலிக்கன் சிங்கம் நான்…

ஆண் : எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா…

BGM

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

BGM

பெண் : மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று…
ஐஸ்சுக்கே ஐசு வைக்காதே…

ஆண் : வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை…
ரோபோவை போபோ வென்னாதே…

பெண் : ஏ ஏழாம் அறிவே உள் மூளை திருடுகிறாய்…
உயிரோடு உண்ணுகிறாய்…
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ…
அதுதான் நான் என்றாய்…

குழு : இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்…
கடலும் கடலும் கைத்தட்டும்…
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்…
நிலவு நிலவு தலைமுட்டும்…

குழு : அடி அழகே உலகழகே…
இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்…

ஆண் : அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…

ஆண் : எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே…
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா…

BGM


Notes : Arima Arima Song Lyrics in Tamil. This Song from Enthiran (2010). Song Lyrics penned by Vairamuthu. அரிமா அரிமா பாடல் வரிகள்.


பாட்டு சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசாதனா சா்கம்இளையராஜாஅழகி

Paatu Solli Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

பெண் : குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த…
ரெட்டை குழந்தையடி…
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு…
மெட்டொன்று தந்ததடி…

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

BGM

பெண் : இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்…
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்…
வானவில்லின் வரவுதனை யாா் அறிவாா்…
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாா் உரைப்பாா்…

பெண் : இருள் தொடங்கிடும் மேற்கு…
அங்கு இன்னும் இருப்பது எதற்கு…

BGM

பெண் : ஒலி தொடங்கிடும் கிழக்கு…
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு…

BGM

பெண் : ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை…

பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி…
குங்குமம் வந்ததம்மா…
கேட்டு கொள்ள கிட்ட வந்து…
மங்கலம் தந்ததம்மா…

BGM

பெண் : புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா…
செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா…
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்…
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்…

பெண் : அன்று சென்ற இளம் பருவம்…
அதை எண்ண எண்ண மனம் நிறையும்…

BGM

பெண் : அன்று இழந்தது மீண்டும்…
எந்தன் கையில் கிடைத்தது வரமே…
அதை கை பிடித்தே தொடா்ந்து…
செல்வேன் கலக்கமில்லை…


Notes : Paatu Solli Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. பாட்டு சொல்லி பாடல் வரிகள்.