பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிஹரன் & சாதனா சர்கம் | சபேஷ் & முரளி | கூடல்நகர் |
Tamil Selvi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
—BGM—
பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…
ஆண் : திருநீறாத் தெரியிற வானம்…
ஒரு துணையா நமக்கிது போதும்…
நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்…
பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்…
அது போல் ஒரு குடிசையே போதும்…
ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்…
ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நான் வருவேன்… நான் வருவேன்…
—BGM—
பெண் : குளுதானித் தண்ணி குளிராக நீயும்…
பக்கத்தில் நின்னா பதறாதோ…
ஆண் : ஓ… பகுமானம் ஏதும்… ஏதும்…
பண்ணாத புள்ள… புள்ள…
பஞ்சாங்கப் பேச்சில் கொல்லாத…
பெண் : சிறுவாடு போல ஏதோ…
சில கனவு நெஞ்சில் சேர்த்தேன்…
—BGM—
ஆண் : கருவண்டுக் கண்ணைத் தாடி…
ஒரு முத்தம் வச்சுத்தாரேன்…
பெண் : தாங்காமத் தள்ளிப் போனா…
உயிரோடு விடுவாயா…
ஆண் : ஏய்… தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
—BGM—
ஆண் : சித்தருவா கண்ணும் சிறு மிளகு சொல்லும்…
நெஞ்சுக்குழிக்குள்ளே நெருப்பாக…
பெண் : வெள்ளாட்டு குணமும் குணமும்…
வெள்ளந்திச் சிரிப்பும் சிரிப்பும்…
என்னோட மனசில் எறும்பாக…
ஆண் : அரசெலையா நீண்ட வகிடில்…
திருக்குங்குமம் வச்சிப் பார்ப்பேன்…
—BGM—
பெண் : கொலசாமிக் கோயில் நீதான்…
ஒன் கைய நம்பி வாழ்வேன்…
ஆண் : அடி தூரி கரும்பு போல…
உள் நெஞ்சில் சேர்ந்தாயே…
ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…
ஆண் : திருநீறாத் தெரியிற வானம்…
ஒரு துணையா நமக்கிது போதும்…
நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்…
பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்…
அது போல் ஒரு குடிசையே போதும்…
ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்…
ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
Notes : Tamil Selvi Song Lyrics in Tamil. This Song from Koodal Nagar (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தமிழ்ச்செல்வி பாடல் வரிகள்.