Tag Archives: ஸ்ரேயா கோஷல்

Maaza Maaza Song Lyrics in Tamil

மஜா மஜா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரேயா கோஷல் & எஸ்.பி.பி. சரண்ஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Maaza Maaza Song Lyrics in Tamil


BGM

பெண் : மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…

பெண் : யாரோ யாரோ யார் தடுப்பாரோ…
ஆண் & பெண் : வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ…

பெண் : கண்டால் பாவம் உண்டால் தீறுமல்லவா…
ராத்திரி ராத்திரி ராத்திரி ஏதோ…
ஏதோ ஏதேதோ…

ஆண் : ஓ… மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
ஓ… மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…

BGM

பெண் : நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா…
நானும் வச்சு நீயும் வச்சு…
அச்சு வைக்கவா…

ஆண் : ஏச்சு ஏச்சு என்ன பேச்சு…
ஏச்சு ஏச்சு என்ன பேச்சு…
காச்சு காச்சு என்ன போச்சு…

பெண் : நச்சுன்னு ஒரு இச்சு வைக்கவா… ஹ்ம்ம்…
ஆண் : மஜா மஜா மஜா மஜா…
பெண் : ஹ்ம்ம் கும்…
ஆண் : ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா…
பெண் : ஹ்ம்ம் கும்…
ஆண் : வூஹோ ஹோ ஹோ ஹோ…
பெண் : ஹ்ம்ம் கும்…

BGM

பெண் : ஜில்லுனு ஒரு ஜிஞ்ஜர் பீர்தான்…
ஆண் : ஓ… ஆசை என்னும் அஜீரணம் தீர தீரதான்…

பெண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு…
ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு…

ஆண் : மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு…
ஆச்சு ஆச்சு ஒன்னு ஆச்சு…

பெண் : ஜில்லுனு ஒரு…
ஆண் : ஜில்லுனு ஒரு கிங்கர் பீர்தான்…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
பெண் : மஜா மஜா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
பெண் : ராஜா ராஜா ராஜா ராஜா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
பெண் : மஜா மஜா மஜா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…
மஜா மஜா மஜா ஆஜா ராஜா…
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா…

ஆண் : யாரோ யாரோ யார் தடுப்பாரோ…
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ…

ஆண் : கண்டால் பாவம் உண்டால் தீறுமல்லவா…
ராத்திரி ராத்திரி ராத்திரி ஏதோ…

ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஏதேதோ…


Notes : Maaza Maaza Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. மஜா மஜா பாடல் வரிகள்.


உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனுராக் குல்கர்னி & ஸ்ரேயா கோஷல்ஜஸ்டின் பிரபாகரன்ராதே ஷியாம்

Unnaalae Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்…
உண்டென்று கண்டேனடா…
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று…
உன் காதல் கொண்டேனடா…

ஆண் : ஒலி இல்லா இசையில்…
நனைக்காத மழையில்…
உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்…

ஆண் : வழி இல்லா திசையில்…
ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன்…

ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே…
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே…

BGM

பெண் : கோள் மாறும் மீன் மாறும் வான் மாறும் ஆனால்…
என் காதல் மாறாதடா…
விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட…
என் காதல் தீராதடா…

பெண் : நம் விதியோ நாளை இல்லை என்றது…
இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது…

ஆண் : கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய…
தேகம் முழுதும் காதல் பாயுதே…

ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே…
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே…

BGM

பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்…
உண்டென்று கண்டேனடா…
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று…
உன் காதல் கொண்டேனடா…


Notes : Unnaalae Song Lyrics in Tamil. This Song from Radhe Shyam (2022). Song Lyrics penned by Madhan Karky. உன்னாலே பாடல் வரிகள்.


கண்களிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & ஜாவேத் அலிஜி. வி. பிரகாஷ் குமார்பென்சில்

Kangalilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நி ச ரி தா நி தா…
நி ச ரி தா நி தா…
நி ச ரி ரி தா நி ரி…
ரி நி ச தா நி ப…

ஆண் : நி ச ரி தா நி தா…
நி ச ரி தா நி தா…
நி ச ரி ரி தா நி ரி…
ரி நி ச தா நி ப…

BGM

ஆண் : கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

பெண் : எனக்கேதான் தெரியாமல்…
எனை சிறுக சிறுக இழந்தேன்…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நீ தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நி தா நி தா…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நீ தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நி தா நி தா…

BGM

பெண் : கல்லை குளத்தினில் எறிந்தாய்…
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்…

ஆண் : ஓ… தள்ளி நடந்திட விரும்பி…
நீ மெல்ல அருகினில் வந்தாய்…

பெண் : முதன் முதலாய்…
முகவரியாய் உனை நினைத்தேன்…
நல்ல முடிவெடுத்தேன்…

ஆண் : மேலாடை தொடுமோ…
மூச்சென்னை தொடுமோ…
கை விரல் தொடுமோ…
கால் நகம் படுமோ…

ஆண் : பட்டாடை இல்லாமல்…
பூ போட்டும் இல்லாமல்…
நீ வந்து நின்றாலும்…
உன் போலே வருமோ…

ஆண் : ஓ… கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

BGM

ஆண் : வண்ண உடைகளில் வந்தால்…
என் எண்ணம் சிதறுது பெண்ணே…

பெண் : என்னை மறைத்திட்ட போதும்…
அதை காட்டி கொடுப்பது கண்ணே…

ஆண் : ஒரு புறம் நீ…
மறு புறம் நான்…
இடையினில் யார்…

பெண் : வெட்கம் தடுப்பதை பார்…

ஆண் : எங்கே நான் சென்றாலும்…
என் பாட்டில் நின்றாலும்…
பின்னாலே நீ வந்தாய்
பேசாமல் ஏன் சென்றாய்…

ஆண் : கார் காலம் போல் இன்று…
சங்கீத சொல் ஒன்று…
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு…

ஆண் : ஹோ… கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

பெண் : ஹோ… எனக்கேதான் தெரியாமல்…
எனை சிறுக சிறுக இழந்தேன்…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நி தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நீ தா நி தா…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நி தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நீ தா நி தா…

BGM


Notes : Kangalilae Song Lyrics in Tamil. This Song from Pencil (2016). Song Lyrics penned by Thamarai. கண்களிலே பாடல் வரிகள்.


என்னை சாய்த்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Ennai Saaithaalae Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…
மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தேன்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…
விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM

ஆண் : நேற்று போலே வானம்…
அட இன்றும் கூட நீலம்…
என் நாட்கள்தான் நீளும்…

பெண் : தள்ளிப் போக எண்ணும்…
கால் பக்கம் வந்து பின்னும்…
கேட்காதே யார் சொல்லும்…

ஆண் : பறவை நான் சிறகு நீ…
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்…

பெண் : பயணம் நான் வழிகள் நீ…
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

BGM

ஆண் : மாலை வந்தால் போதும்…
ஒரு நூற்றி பற்றில் தேகம்…
செங்காந்தள் போல் காயும்…

பெண் : காற்று வந்து மோதும்…
உன் கைகள் என்றே தோன்றும்…
பின் ஏமாற்றம் தீண்டும்…

ஆண் : தவிப்பதை மறைக்கிறேன்…
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்…

பெண் : கனவிலே விழிக்கிறேன்…
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
ராரா ராரா ரா…
இனி வாழ்வேனோ இனிதாக…

பெண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…

பெண் : மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தாள்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…

பெண் : விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM


Notes : Ennai Saaithaalae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Thamarai. என்னை சாய்த்தாலே பாடல் வரிகள்.


கள்வரே கள்வரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Kalvare Song Lyrics in Tamil


BGM

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

பெண் : உம்மை எண்ணி உம்மை எண்ணி…
ஊமைக் கண்கள் தூங்காது…
தலைவா என் தலைவா…
அகம் அறிவீரோ… அருள் புரிவீரோ…

பெண் : வாரந்தோறும் அழகின் பாரம்…
கூடும் கூடும் குறையாது…
உறவே என் உறவே…
உடை களைவீரோ உடல் அணிவீரோ…

BGM

பெண் : என் ஆசை என் ஆசை…
நானா சொல்வேன்…
என் ஆசை நானா சொல்வேன்…
என் ஆசை நீயே சொன்னால்…
கண்ணாலே ஆமாம் என்பேனே…

பெண் : எங்கெங்கே உதடு போகும்…
அங்கெங்கே உயிரும் போகும்…
அன்பாலே ஆளச் சொல்வேனே…

பெண் : வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்…
தமிழுக்குத் தெரிகின்றதே…
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்…
தங்களுக்குத் தெரிகின்றதா…

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

BGM


Notes : Kalvare Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. கள்வரே கள்வரே பாடல் வரிகள்.


வெளிச்ச பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமோஹித் சவ்ஹான் & ஸ்ரேயா கோஷல்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Velicha Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் : ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் : உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : மழை மேகம் வரும் போதே…
மயில் தோகை விரியாதோ…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

BGM

ஆண் : ஜப்பானை விழித்து எப்போது நடந்தாய்…
கை கால்கள் முளைத்த ஹைகூவே…

பெண் : ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்…
ஹைகூவும் உனகோர் கை பூவே…

ஆண் : விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்…
பெண் : பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்…

ஆண் : ஈச்சம் பூவே தொடு தொடு…
கூச்சம் யாவும் விடு விடு…
ஏக்கம் தாக்கும் இளமையில்…
ஒரு இளமையில் தவிப்பது தகுமோ…

பெண் : ஓ ஹோ… மின்வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

பெண் : ஓ ஹோ… மின்வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…

ஆண் & பெண் : உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் & பெண் : மழை மேகம் வரும் போதே…
மயில் தோகை விரியாதோ…
அழைத்தேன் வா அன்பே…

ஆண் : காதல் காதல் ஒரு ஜொரம்…
காலம் யாவும் அது வரும்…
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை…
தொடர்கதை அடங்கியதில்லையே…

BGM


Notes : Velicha Poove Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by Vaali. வெளிச்ச பூவே பாடல் வரிகள்.


கானா கானா தெலுங்கானா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல் & ஆனந்த் அரவிந்தக்ஷன்டி. இமான்10 எண்றதுக்குள்ள

Gaana Gaana Song Lyrics in Tamil


ஆண் : வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்…
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்…
விக்கிரமாதித்தன் நான் அம்மா…
வண்டி ஓட்டி போகனும்டா தூரமா…
என் வயுறு இங்க பசிகுதடா கோரம…
சீக்கிரம் எதாச்சும் கொண்டா சூடா காரமா…

குழு : சூடா காரமா சூட காரமா…
ஐயோ பாவமா மாட்டிகிச்சு ஆளுமா…
வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு ராசா…
கூண்டு குள்ள காலெடுத்து வைக்கூறியே லூசா…
இப்போ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு…
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு…

ஆண் : சூடா வந்தது சூப்பர் மாமா…
காரமா கேட்டேனே காரமா காரமா…

BGM

பெண் : கானா கானா தெலுங்கானா…
அட காரம் கெளப்பும் மொளக நா…
கானா கானா தெலுங்கானா…
இங்க யாரும் மயங்கும் அழகா நா…

பெண் : கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்…
வாயோட வச்சாலே கண்ணெல்லாம் நீரூறும்…
பசங்க எல்லாருமே பீசு போன தோக்கு…
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு…
அடடா செவந்துருச்சு நாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் உங்கள அடக்கிட வந்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தானா…

BGM

ஆண் : பூட்டி மறைகிறது உங்க பொழுது போக்கு…
தொறந்து ருசிகிறது எங்களோட நாக்கு…
அடடா ஒடஞ்சிடுச்சு லாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் தீயில் உருகும் மெழுகானா…
கானா கானா தெலுங்கானா…
இவ அழுவும் போதும் அழகானா…

BGM

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

பெண் : தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குறான்…
கானா கானா தெலுங்கானா…
இவன் ஜெயிச்சிட பொறந்த சுல்தானா…

பெண் : கானா கானா தெலுங்கானா…
என்ன மயக்கிட வந்த மஸ்தானா…
ஆள தெரியாம அட்ரஸ்ச கேட்டுட்டேன்…
ஆடி முடியாம ஐய்யா நா தோத்துட்டேன்…

பெண் : தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு…
என்ன சாச்சிபுட்ட காலர நீ துக்கு…
நீதான் டவுனு குள்ள டாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
அந்த ஐகளின் ஐ அது இவன்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தனானா…

குழு : கானா கானா தெலுங்கானா…
இனி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா…
கானா கானா தெலுங்கானா…
அப்புறம் பஞ்சம் முந்தி அந்த மைனா…


Notes : Gaana Gaana Song Lyrics in Tamil. This Song from 10 Endrathukulla (2015). Song Lyrics penned by Madhan Karky. கானா கானா தெலுங்கானா பாடல் வரிகள்.


நானி கோனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்ரேயா கோஷல் & ஷேகினா ஷான் ஜசீல்ஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Naani Koni Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…

BGM

ஆண் : யேகோவா… நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…

ஆண் : மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…
நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…

ஆண் : ஓா் ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்… யேகோவா…

ஆண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்…
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்…
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்…
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…

பெண் : நானி கோனி ராணி…
எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்…
மருதாணி பூத்த கானி…
என்னை தா நீ என்று கேட்கிறாய்…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்…

பெண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்…
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்…
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேராய்…
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…

BGM

ஆண் : ஒரு காலை நேரம் நீ வந்தாலே…
பனி வீசும் காற்றுக்கு…
பணியாமல் தேகம் சூடேறும்…

ஆண் : கண் பேசும் மௌனமே ஒன்றாக…
நாம் போகும் சாலைகள்…
முடியாமல் எங்கெங்கோ நீளும்…

பெண் : நதியிலே இலை போல பயணம்…
இனிப்பான தருணம்…
மனதோடு மாய மின்சாரம்…

பெண் : உன் எதிரே நனையாமல் கரைந்தேன்…
நகராமல் உறைந்தேன்…
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்…
உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும்…

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்…

BGM

ஆண் : தொலைதூரம் போனதே என் மேகம்…
புரியாத மென்சோகம்…
முகில் மேலே ஊசி இறங்கும்…

ஆண் : ஹோ… பிரிவாலே இன்று நான் போராட…
விழியோரம் நீரோட…
அவன் கண்ணில் காதல் மயக்கம்…

ஆண் : உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில்…
எனைப்போலே சாயலில்…
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே…

ஆண் : நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்…
மெலிதான பூகம்பம்…
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்…
இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி…

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று… ஏலாஹா…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்… ஏலாஹாஹா…

ஆண் : நீராய் நீராய்…
பெண் : ம்ம்ம்… நீ மேகம் தாண்டி வாராய்…

ஆண் : தாராய் தாராய்…
பெண் : என் தாகம் தூண்டி நூறாய்…

ஆண் : பாவாய் பாவாய்…
பெண் : நான் உன்னால் ஆனேன் தீவாய்…

ஆண் & பெண் : கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…


Notes : Naani Koni Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Viveka. நானி கோனி பாடல் வரிகள்.


பார்த்த ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஸ்ரேயா கோஷல்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்கொலை

Paartha Nyabhagam Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : அந்த நீல நதி கரையோரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்…
நாம் பழகி வந்தோம் சில காலம்…

பெண் : அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…

BGM

பெண் : இந்த இரவை கேள் அது சொல்லும்…
அந்த நிலவை கேள் அது சொல்லும்…

BGM

பெண் : உந்தன் மனதை கேள் அது சொல்லும்…
நாம் வாழ்ந்த வாழ்கையைச் சொல்லும்…

பெண் : அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…

BGM


Notes : Paartha Nyabhagam Song Lyrics in Tamil. This Song from Kolai (2023). Song Lyrics penned by Kannadasan. பார்த்த ஞாபகம் பாடல் வரிகள்.


இவள்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசாகர் & ஸ்ரேயா கோஷல்தேவி ஸ்ரீ பிரசாத்வீரம்

Ival Dhaana Song Lyrics in Tamil


பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

ஆண் : அந்த வானவில்லின் பாதி…
வெண்ணிலவில் மீதி…
பெண்ணுருவில் வந்தாளே…
இவள்தானா… இவள்தானா…

பெண் : மழை மின்னல் என மோதி…
மந்திரங்கள் ஓதி…
என் கனவை வென்றனே…
இவன்தானா… இவன்தானா…

ஆண் : போட்டி போட்டு என் விழி ரெண்டும்…
உன்னை பாா்க்க முந்திச் செல்லும்…
இமைகள் கூட எதிாில் நீ வந்தால்…
சுமைகள் ஆகுதே… ஓ…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

பெண் : வினா வினா ஆயிரம்…
அதன் விடை எல்லாம் உன் விழியிலே…
விடை விடை முடிவிலே…
பல வினா வந்தால் அது காதலே…

ஆண் : தனியே நீ வீதியிலே…
நடந்தால் அது பேரழகு…
ஒரு பூ கோா்த்த நூலாக…
தெருவே அங்கு தொிகிறது…

பெண் : காய்ச்சல் வந்து நீச்சல் போட…
ஆறாய் மாறினேன்…
இவன்தானா… இவன்தானா…

BGM

ஆண் : குடை குடை ஏந்தியே…
வரும் மழை ஒன்றை இங்கு பாா்க்கிறேன்…
இவள் இல்லா வாழ்க்கையே…
ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்…

பெண் : அடடா உன் கண் அசைவும்…
அதிரா உன் புன்னகையும்…
உடனே என் உயிா் பிசையும்…
உடலில் ஒரு போ் அசையும்…

ஆண் : காற்றில் போட்ட கோலம் போல…
நேற்றை மறக்கிறேன்…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…


Notes : Ival Dhaana Song Lyrics in Tamil. This Song from Veeram (2014). Song Lyrics penned by Viveka. இவள்தானா பாடல் வரிகள்.