பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | சந்திரபோஸ் | ஊமைகுயில் |
Nadu Rathiri Samathiley Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீ விழிக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
பெண் : நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கியிலே…
ராத்திரி சாமத்திலே…
ஆண் : இது பொன்னான ராத்திரிதான்…
அடி பொல்லாத ராத்திரிதான்…
இது பொன்னான ராத்திரிதான்…
அடி பொல்லாத ராத்திரிதான்…
ஆண் : தூக்கம் இல்லாத ராத்திரிதான்…
ஏக்கம் தீராத ராத்திரிதான்…
தூக்கம் இல்லாத ராத்திரிதான்…
ஏக்கம் தீராத ராத்திரிதான்…
ஆண் : நடு ராத்திரிசாமத்திலே…
—BGM—
பெண் : விடியாத ராத்திரிதான்…
விளக்கில்லாத ராத்திரிதான்…
சுகமான ராத்திரிதான்…
தெனம் நான் தேடும் ராத்திரிதான்…
பெண் : கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும்…
ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான்…
ஆண் : என் ராசாத்தி நீதானம்மா…
நீ நான் தேடும் சுகம்தானம்மா…
உன் தேகம் பூதானம்மா…
நான் உந்தன் அடிமையம்மா…
ஆண் : தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட…
தாகம் தீர்ந்திட நீதானம்மா… ஹா…
தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட…
தாகம் தீர்ந்திட நீதானம்மா…
ஆண் : நடு ராத்திரிசாமத்திலே…
—BGM—
பெண் : ஊரெல்லாம் தூங்கையிலே…
எனக்கேனோ தூக்கமில்ல…
அக்கம் பக்கம் யாருமில்ல…
நீ அச்சப்பட தேவையில்ல…
பெண் : கட்டி அணைத்திட கன்னம் செவந்திட…
காதல் பேசிடும் ராத்திரிதான்…
கட்டி அணைத்திட கன்னம் செவந்திட…
காதல் பேசிடும் ராத்திரிதான்…
ஆண் : பசியால வாடுகிறேன்…
உன்ன பல நாளா தேடுகிறேன்…
உன் மடியை நாடுகிறேன்…
நாளும் உனக்காக வாழுகிறேன்…
ஆண் : கன்னி பருவம் மின்னும் உருவம்…
எண்ணி உருகிடும் ராத்திரிதான்…
கன்னி பருவம் மின்னும் உருவம்…
எண்ணி உருகிடும் ராத்திரிதான்…
பெண் : நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீவிழிக்கையிலே…
ஆண் : நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
ஆண் : ராத்திரி சாமத்திலே…
Notes : Nadu Rathiri Samathiley Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. நடு ராத்திரி பாடல் வரிகள்.