Tag Archives: Friendship Song Lyrics

Friendship Song Lyrics

நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

BGM


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


கல்லூரி தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமிக்கி ஜே மேயர்மிக்கி ஜே மேயர்இனிது இனிது

Kalloori Thayeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…

ஆண் : களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…
வெள்ளை தாளாய் வந்தோம்…
வித விதமாய் நீ கிறுக்கினாய்…
ஓஹோ ஹோஹோ ஓஹோ…

ஆண் : எழுதிய வாசகம் அறியும் முன்னயே நான்…
எங்களை கிழிக்கிறாய்…

ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…

ஆண் : களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…

BGM

ஆண் : இன்றோடு முடிகிறதா புரியவில்லை…
இனி மீண்டும் காண்போமா விடையுமில்லை…
காதல் தான் வந்ததுவா தெரியவில்லை…
கண்ணீரை மூடுகிறோம் முடியவில்லை…

குழு : கல்லூரி நீங்கும் கடைசி நாளில்…
கண்ணில் பொங்குது இரு கண்ணீர்…
வாழ்வு கொடுத்த கல்லூரிக்கு…
வணக்கம் சொல்லும் ஒரு கண்ணீர்…

ஆண் : மறந்து செய்த காயங்களுக்கு…
மன்னிப்பு கேட்கும் ஒரு கண்ணீர்…

குழு : உலகத்துக்குள் எத்தனை இதயம்…
என்பதை இங்கே பார்த்தோமே…
இதயத்துக்கும் எத்தனை உலகம்…
என்பதை இங்கே பார்த்தோமே…
உலகம் பெரியதா இதயம் பெரியதா…
விடை தெரியாமல் விடை பெறுவோமே…

BGM

ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…

ஆண் : களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…

குழு : விடை பெறுவோமே…
விடை பெறுவோமே…


Notes : Kalloori Thayeh Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. கல்லூரி தாயே பாடல் வரிகள்.


நட்புக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Natpukkullae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…

ஆண் : அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல…
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை…
வாழ்க்கை அது எங்கு சென்று முடியும்…
யாரும் அதை அறிந்ததில்லை…

ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…

BGM

ஆண் : காதல் வலி அது தெரியவில்லை…
நட்பின் வலி அது புரியவில்லை…
காதல் வலி அது தெரியவில்லை…
நட்பின் வலி அது புரியவில்லை…

BGM


Notes : Natpukkullae Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Yuvan Shankar Raja. நட்புக்குள்ளே பாடல் வரிகள்.


எங்கோ பிறந்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅருண் கோபன், ஷான்மோன், துஷர் & அனு பிரவீன்ஜெஸ்ஸி கிப்ட்பட்டாளம்

Engo Piranthom Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
குழு : உலகை உணர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

ஆண் : கனவுகள் பழகிய நாட்களை…
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே…
இனிவரும் அழகிய நாளிலும்…
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே…

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
குழு : உலகை உணர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

BGM

ஆண் : குளிர்காலம் ஒன்று திரூம்போது வெயில் காலம்…
வரும் வானம் போல வாழ வேண்டும் விருந்து…
கடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும்…
குழு : நதி ஓடும்…
ஆண் : அதைப் போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து…

ஆண் : வரும் காலம் நம்மைப் பேசும்…
வருந்தாமல் வருவதை ஏற்போம்…
இனிமேலும் தொடர்வோமே…
வைத்த அன்புக்கேதும் சேதமில்லை…
வாழும் நெஞ்சும் நெஞ்சிலே…

ஆண் : கனவுகள் பழகிய நாட்களை…
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே…
இனிவரும் அழகிய நாளிலும்…
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே…

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

BGM

ஆண் : அலைபாய்ந்த அன்பில் ஆடிப்பாடி மகிழ்ந்தோமே…
குழு : மகிழ்ந்தோமே…
ஆண் : அதை ஆசைத்தீர பேசிப் பேசி சிரித்தோம்…
குழு : சிரிப்போம்…

ஆண் : மணி ஓசை வந்து காதில் சேர குளித்தோமே…
அதை காதலோடு காலந்தோறும் நினைப்போம்…

ஆண் : நினைவோடு கலந்தோமே…
நம்மை வார்த்த வகுப்பறை வாழ்க…
இணைந்தோமே இயல்பாக…
இந்த பள்ளிக்கூடத் தோழமைக்கு…
ஈடு இணை ஒன்றுமில்லை…

BGM

குழு : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…

குழு : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

ஆண் : கனவுகள் பழகிய நாட்களை…
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே…
இனிவரும் அழகிய நாளிலும்…
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே…

குழு : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…

குழு : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…


Notes : Engo Piranthom Song Lyrics in Tamil. This Song from Pattalam (2009). Song Lyrics penned by Yugabharathi. எங்கோ பிறந்தோம் பாடல் வரிகள்.


கல்லூரி மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன் & சங்கீதா சஜித்வித்யாசாகர்சிநேகிதியே

Kalluri Malare Song Lyrics in Tamil


பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…

பெண் : நீ வந்து துணையாய் நின்றால்…
சோகங்கள் தீண்டுமா…
வாழ்வோடு ஒவ்வொரு நாளும்…
ஓர் பாடம் தானம்மா…

குழு : சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சிறிதம்மா…

BGM

பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…

BGM

பெண் : ஜெயித்தது நாங்களடி…
தோற்றது நீங்களடி…
பாறைகள் மேலே முட்ட நினைத்த…
முட்டைகள் தவிடுபடி…

பெண் : வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி…
ஐஸ்க்ரீம் தலையில் செரிப்பழம் இருப்பது…
அரைநொடி வாழ்க்கையடி…

குழு : முயலுக்கு ஊசிப்போட்டு தூங்க வைத்து…
தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி…
முயலுக்கு மயக்கங்கள் தெளிந்துவிட்டால்…
ஆமையின் பாடுகள் ஆபத்தடி…

பெண் : எங்களுக்கு வெற்றியுண்டு…
ஈக்களுக்கு சிறகுண்டு…
வென்றது யார் இன்று…

BGM

பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…

BGM

பெண் : இயற்கையில் கலந்துவிடு…
இதயத்தை இழந்துவிடு…
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி…
வனங்களில் பயணப்படு…

பெண் : கணிப்பொறி நிறுத்திவிடு…
கணக்குகள் மறந்துவிடு…
சூரியன் ஒளியில் நூலொன்று எடுத்து…
பனித்துளி கோர்த்துவிடு…

குழு : முத்தமிட்டு முத்தமிட்டு கொடிகளிலே…
முத்துக்களை முத்துக்களை எடுத்துவிடு…
வாசனை இல்லாத இலைகளுக்கு…
உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு…

பெண் : வானவில்லை கொண்டு வந்து…
பூமியிலே நட்டு வைத்து…
வாழ்வில் நிறமூட்டு…

BGM

பெண் : கல்லூரி மலரே மலரே…
கைவீசி ஆடம்மா…
காற்றோடு சிறகு விரித்து…
கச்சேரி பாடம்மா…

பெண் : சாலை ஒரு வாசகசாலை…
வாசித்து பாரம்மா…
ஒவ்வொரு பூவும் கானம்…
யோசித்து பாரம்மா…

குழு : ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானம்மா…

BGM


Notes : Kalluri Malare Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. கல்லூரி மலரே பாடல் வரிகள்.


அழகின அழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுர்ஜோ பட்டாச்சார்யா & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Azhagina Azhagi Song Lyrics in Tamil


BGM

பெண் : தக திமி தக திமி தா…
தக திமி தக திமி தா…
ஆண் : யே ஒயே…

பெண் : தக திமி தக திமி தா…
தக திமி தக திமி தா…
ஆண் : யே ஒயே…

ஆண் : திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா…
திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா…

ஆண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
பெண் : ஆஹா ஆ…

ஆண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
அழகியே… ஓ…

ஆண் : அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
பெண் : ஒரே…

ஆண் : பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : வந்தாலே அஸ்காவா…
பெண் : ஆஹா ஆ…

ஆண் : இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : இப்படியே வஸ்தாவா…

பெண் : திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா…
ஹிம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா…

பெண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…

BGM

ஆண் : தோழி என்றொரு வார்த்தையிலே…
நாங்கள் உங்களை கூப்பிடுவோம்…

பெண் : கோழை பேச்சுகள் வேண்டாமே…
காதலி என்றே கூப்பிடுங்கள்…

ஆண் : பாரதி கனவுகள் வாழ…
இதோ எங்கள் முன்னாலே…

பெண் : செந்தமிழ் சொற்கள் தீர்ந்துவிட்டால்…
பிரெஞ்சில் புகழ்ந்து கொட்டுங்களேன்…

குழு : செவ்வாய் வாசிகளே…
எங்கள் வாழ்க்கை நீங்கள்தான்…

பெண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…

பெண் : அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…

ஆண் : பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : வந்தாலே அஸ்காவா…
பெண் : ஆஹா ஆ…

ஆண் : இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ…
பெண் : ஆஹா ஆ…
ஆண் : இப்படியே வஸ்தாவா…
பெண் : ஆஹா ஆ…

BGM

பெண் : அச்சம் எங்கள் ஆடை போல்…
உடனே நீங்கள் மாறுங்கள்…

ஆண் : இன்னும் வேறெதும் வேண்டாமா…
அன்பு கட்டளை போடுங்கள்…

பெண் : பக்தி பரவசம் பார்க்க…
குழு : மனம் வற்றி போனோமே…

ஆண் : ஓ லேசாய் அருகில் உட்கார…
குழு : அனுமதி கேட்போம் தர வேண்டும்…

பெண் : காதல் வாசிகளே…
மேலே வந்து சாயுங்களேன்…

ஆண் : அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…

ஆண் : அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
பெண் : ஒரே…

பெண் : பணம் என்ன நகை என்ன…
வருவோமே அஸ்காவா…
இனம் என்ன குலம் என்ன…
இப்படியே வஸ்தாவா…

ஆண் & பெண் : திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே அஸ்காவா…
திம் திரதே தரரி ரத்தே தரரி ரத்தே வஸ்தாவா…


Notes : Azhagina Azhagi Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. அழகின அழகி பாடல் வரிகள்.


ஒரு நண்பன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு & சின்மயிஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Oru Nanban Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
ஆண் : கையோடு பூமியை சுமந்திடலாம்…

பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
ஆண் : நம் பேரில் திசைகளை எழுதலாம்…

பெண் : கடலில் நதிகள் பெயர் கலந்தது…
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது…

ஆண் : நட்பு என்பது எங்கள் முகவரி…
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி…

பெண் : இந்த உலகில் மிக பெரும் ஏணி…
நண்பன் இல்லாதவன்… ஹேய்…

ஆண் & பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…

ஆண் & பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…

BGM

ஆண் : தோள் மீது கை போட்டு கொண்டு…
தோன்றியதெல்லாம் பேசி…
ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்…

ஆண் : ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம்…
நட்பின் போர்வைக்குள்ளே…
இந்த காதல் கூட வாழ்க்கையில்…
அழகிலே தோன்றுமே…

ஆண் & பெண் : தோழன் என்ற சொந்தம் ஒன்று…
தோன்றும் நமது உயிரோடு…

பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
ஆண் : கையோடு பூமியை சுமந்திடலாம்…

பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
ஆண் : நம் பேரில் திசைகளை எழுதலாம்…

BGM

ஆண் : நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள…
எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல…
நண்பன் ஒரே சொந்தம்…

ஆண் : நமது மேஜையில் உணவு கூட்டணி…
அதில் நட்பின் ருசி…

பெண் : அட வாழ்க்கை பயணம் மாறலாம்…
நட்புதான் மாறுமா…

ஆண் : ஆயுள் காலம் தேர்ந்த நாளில்…
நண்பன் முகம் தான் மறக்காதே…

ஆண் & பெண் : ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…

ஆண் & பெண் : தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…

ஆண் & பெண் : நட்பு என்பது எங்கள் முகவரி…
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி…

ஆண் & பெண் : இந்த உலகில் மிக பெரும் ஏணி…
நண்பன் இல்லாதவன்… ஹேய்…


Notes : Oru Nanban Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. ஒரு நண்பன் பாடல் வரிகள்.


கிழக்கே பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுகேந்திரன் & ஃபோனிபரத்வாஜ்ஆட்டோகிராப்

Kizhakke Paarthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

ஆண் : தோழி உந்தன் வருகையால்…
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி…
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : வெல் மை பிரண்டு ஐ ஹேவ் சம்திங் டு சே…
ஐ வான்ட் யு டு லிஸ்ஸன் லிஸ்ஸன் டு மீ…
திஸ் இஸ் வாட் ஐ ஹேவ் டு சே…
ஹியர் இட் கோஸ்…

BGM

ஆண் : தாகம் என்று சொல்கிறேன்…
மரக் கன்று ஒன்றை தருகிறாய்…
பசிக்குது என்று சொல்கிறேன்…
நெல்மனி ஒன்றை தருகிறாய்…

ஆண் : உந்தன் கை விரல் பிடிக்கையில்…
புதிதாய் நம்பிக்கை பிறக்குது…
உந்தன் கூட நடக்கையில்…
ஒன்பதாம் திசையும் திறக்குது…

ஆண் : என் பயணத்தில் எல்லாம்…
நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய்…
என் மனதை உழுது…
நீ நல்ல விதைகளை விதைத்தாய்…

ஆண் : என்னை நானே செதுக்க…
நீ உன்னையே உளியாய் தந்தாய்…
என் பலம் என்னவென்று எனக்கு…
நீ இன்றுதான் உணர வைத்தாய்…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

BGM

ஆண் : மழையோ உந்தன் புன்னகை…
மனசெல்லாம் மெல்ல நனையுதே…
பனியோ உந்தன் பார்வைகள்…
என் கண்ணிமை மயிர்களில் தூங்குதே…

BGM

ஆண் : வேருக்குள் விழுந்த நீர் துளி…
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே…
உனக்குள் ஏற்படும் உற்சவம்…
என்னையும் குதூகலப் படுத்துதே…

ஆண் : தோழி ஒருத்தி கிடைத்தால்…
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்…
இதுவரை இந்த உண்மை…
ஏன் தெரியவில்லை எவர்க்கும்…

ஆண் : மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை…
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி…
படைத்தவன் கேட்டால் கூட…
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

ஆண் : தோழி உந்தன் வருகையால்…
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி…
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…


Notes : Kizhakke Paarthen Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. கிழக்கே பார்த்தேன் பாடல் வரிகள்.


மனசே மனசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாஏப்ரல் மாதத்தில்

Manase Manase Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

ஆண் : இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்…
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே… ஹே…
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே…
நட்பினை எதிர்பார்க்குமே… ஹே ஹே யே ஹே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

ஆண் : மனசே மனசே… யேஹே ஓஹோ ஓஓ…

BGM

ஆண் : நேற்றைக்கு கண்ட கனவுகள்…
இன்றைக்கு உண்ண உணவுகள்…
ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்…

ஆண் : வீட்டுக்குள் தோன்றும் சோகமும்…
நட்புக்குள் மறந்து போகிறோம்…
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்…

ஆண் : நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே…
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா…
பிரிவு என்ற வார்த்தைக்குள் நாமும் சென்று வாழத்தான்…
வலிமை இருக்கின்றதா… ஹே யே யே யே யே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

BGM

ஆண் : ஆறேழு ஆண்டு போனதும்…
அங்கங்கே வாழ்ந்த போதிலும்…
புகைப்படம் அதில் நண்பன் முகம் தேடுவோம்…

ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்…
என்றே தான் சொல்லும் நாள் வரும்…
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்…

ஆண் : சின்ன சின்ன சண்டைகள்…
சின்ன சின்ன லீலைகள்…
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே…

ஆண் : சொல்ல வந்த காதல்கள்…
சொல்லிவிட்ட காதல்கள்…
சுவைகளில் சுமையானதே… ஹே யே யே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…

ஆண் : இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்…
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே…
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே…
நட்பினை எதிர்பார்க்குமே… ஹேஹே யே ஹே…

ஆண் : மனசே மனசே மனசில் பாரம்…


Notes : Manase Manase Song Lyrics in Tamil. This Song from April Maadhathil (2002). Song Lyrics penned by Pa Vijay. மனசே மனசே பாடல் வரிகள்.


Vaanam Perusuthan Song Lyrics in Tamil

வானம் பெருசுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம், விஜய் யேசுதாஸ் & அருண்மொழிஇளையராஜாபிரண்ட்ஸ்

Vaanam Perusuthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

ஆண் : கடல் மேலே வலை வீசி…
குழு : மீன் பிடிக்கலாம்… ஹோ ஹோ…
ஆண் : கரைமேலே வலை வீசி…
குழு : மான் பிடிக்கலாம்… ஹே ஹே…

ஆண் : நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்…
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்…

ஆண் : அந்த வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

BGM

ஆண் : காவல் நிலையம் தேவை இல்லை மூடச்சொல்வோமா…
நட்பு நிலையம் ஊருக்கொன்று திறந்து வைப்போமா…

ஆண் : கட்சிக்கொடிகள் தேவையில்லை இறக்கி வைப்போமா…
காதல் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் சொல்வோமா…

ஆண் : அழகான பெண்ணுக்கு பூனை படையாவோம்…
அழகில்லா பெண்ணுக்கு அண்ணன் படையாவோம்…

ஆண் : துட்டு வேண்டும் செலவு செய்ய…
மெட்டு வேண்டும் பாடல் செய்ய…
கன்னி வேண்டும் காதல் செய்ய…
பூக்கள் வேண்டும் பூஜை செய்ய…
நட்பு வேண்டும் நட்பு வேண்டும் வாழ்வில் வெல்ல…

ஆண் : வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

BGM

ஆண் : காதலுக்கு சங்கம் ஒன்று ஆரம்பிப்போமா…
அதில் ஜாதி சங்க தலைவரெல்லாம் சேர வைப்போமா… ஓஓ…

ஆண் : மாமிக்கெல்லாம் ஆசி வழங்கும் சாமி ஆவோமா…
மாட்டி கொண்டால் லேடி போலிஸ் கைதி ஆவோமா…

ஆண் : இஷ்டம் போல் விளையாடு இளமை திரும்பாது…
கஷ்டங்கள் வந்தாலே நட்பு பொறுக்காது…
நம்ப நம்ப நம்ப நம்ப…

ஆண் : நட்புக்காக மாலைப்போடு…
முருகனுக்கு மொட்டைபோடு…
விட்டிடாது விலகிடாது…
ஒன்றுபட்டு நின்று இருக்க…
திருப்பதிக்கு ஏறி சென்று காசுபோடு…

ஆண் : வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…

ஆண் : கடல் மேலே வலை வீசி…
குழு : மீன் பிடிக்கலாம்… ஹோ ஹோ…
ஆண் : கரைமேலே வலை வீசி…
குழு : மான் பிடிக்கலாம்… ஹே ஹே…

ஆண் : நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்…
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்…

ஆண் : அந்த வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…

ஆண் : மலைகள் நமக்குதான் மலர்கள் நமக்குதான்…
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்…
நட்புக்கேது சொந்தம் என்று காமி…


Notes : Vaanam Perusuthan Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. வானம் பெருசுதான் பாடல் வரிகள்.