கல்லூரி மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன் & சங்கீதா சஜித்வித்யாசாகர்சிநேகிதியே

Kalluri Malare Song Lyrics in Tamil


பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…

பெண் : நீ வந்து துணையாய் நின்றால்…
சோகங்கள் தீண்டுமா…
வாழ்வோடு ஒவ்வொரு நாளும்…
ஓர் பாடம் தானம்மா…

குழு : சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சிறிதம்மா…

BGM

பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…

BGM

பெண் : ஜெயித்தது நாங்களடி…
தோற்றது நீங்களடி…
பாறைகள் மேலே முட்ட நினைத்த…
முட்டைகள் தவிடுபடி…

பெண் : வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி…
ஐஸ்க்ரீம் தலையில் செரிப்பழம் இருப்பது…
அரைநொடி வாழ்க்கையடி…

குழு : முயலுக்கு ஊசிப்போட்டு தூங்க வைத்து…
தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி…
முயலுக்கு மயக்கங்கள் தெளிந்துவிட்டால்…
ஆமையின் பாடுகள் ஆபத்தடி…

பெண் : எங்களுக்கு வெற்றியுண்டு…
ஈக்களுக்கு சிறகுண்டு…
வென்றது யார் இன்று…

BGM

பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…

BGM

பெண் : இயற்கையில் கலந்துவிடு…
இதயத்தை இழந்துவிடு…
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி…
வனங்களில் பயணப்படு…

பெண் : கணிப்பொறி நிறுத்திவிடு…
கணக்குகள் மறந்துவிடு…
சூரியன் ஒளியில் நூலொன்று எடுத்து…
பனித்துளி கோர்த்துவிடு…

குழு : முத்தமிட்டு முத்தமிட்டு கொடிகளிலே…
முத்துக்களை முத்துக்களை எடுத்துவிடு…
வாசனை இல்லாத இலைகளுக்கு…
உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு…

பெண் : வானவில்லை கொண்டு வந்து…
பூமியிலே நட்டு வைத்து…
வாழ்வில் நிறமூட்டு…

BGM

பெண் : கல்லூரி மலரே மலரே…
கைவீசி ஆடம்மா…
காற்றோடு சிறகு விரித்து…
கச்சேரி பாடம்மா…

பெண் : சாலை ஒரு வாசகசாலை…
வாசித்து பாரம்மா…
ஒவ்வொரு பூவும் கானம்…
யோசித்து பாரம்மா…

குழு : ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானம்மா…

BGM


Notes : Kalluri Malare Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. கல்லூரி மலரே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top