பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன் & சங்கீதா சஜித் | வித்யாசாகர் | சிநேகிதியே |
Kalluri Malare Song Lyrics in Tamil
பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…
பெண் : நீ வந்து துணையாய் நின்றால்…
சோகங்கள் தீண்டுமா…
வாழ்வோடு ஒவ்வொரு நாளும்…
ஓர் பாடம் தானம்மா…
குழு : சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சிறிதம்மா…
—BGM—
பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…
—BGM—
பெண் : ஜெயித்தது நாங்களடி…
தோற்றது நீங்களடி…
பாறைகள் மேலே முட்ட நினைத்த…
முட்டைகள் தவிடுபடி…
பெண் : வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி…
ஐஸ்க்ரீம் தலையில் செரிப்பழம் இருப்பது…
அரைநொடி வாழ்க்கையடி…
குழு : முயலுக்கு ஊசிப்போட்டு தூங்க வைத்து…
தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி…
முயலுக்கு மயக்கங்கள் தெளிந்துவிட்டால்…
ஆமையின் பாடுகள் ஆபத்தடி…
பெண் : எங்களுக்கு வெற்றியுண்டு…
ஈக்களுக்கு சிறகுண்டு…
வென்றது யார் இன்று…
—BGM—
பெண் : கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…
—BGM—
பெண் : இயற்கையில் கலந்துவிடு…
இதயத்தை இழந்துவிடு…
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி…
வனங்களில் பயணப்படு…
பெண் : கணிப்பொறி நிறுத்திவிடு…
கணக்குகள் மறந்துவிடு…
சூரியன் ஒளியில் நூலொன்று எடுத்து…
பனித்துளி கோர்த்துவிடு…
குழு : முத்தமிட்டு முத்தமிட்டு கொடிகளிலே…
முத்துக்களை முத்துக்களை எடுத்துவிடு…
வாசனை இல்லாத இலைகளுக்கு…
உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு…
பெண் : வானவில்லை கொண்டு வந்து…
பூமியிலே நட்டு வைத்து…
வாழ்வில் நிறமூட்டு…
—BGM—
பெண் : கல்லூரி மலரே மலரே…
கைவீசி ஆடம்மா…
காற்றோடு சிறகு விரித்து…
கச்சேரி பாடம்மா…
பெண் : சாலை ஒரு வாசகசாலை…
வாசித்து பாரம்மா…
ஒவ்வொரு பூவும் கானம்…
யோசித்து பாரம்மா…
குழு : ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானம்மா…
—BGM—
Notes : Kalluri Malare Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. கல்லூரி மலரே பாடல் வரிகள்.