பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன் & சங்கீதா சஜித் | வித்யாசாகர் | சிநேகிதியே |
Radhai Manathil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…
பெண் : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…
—BGM—
பெண் : கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்…
கோதை ராதை நடந்தால்…
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்…
மூச்சு வாங்கி உறைந்தாள்…
குழு : பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்…
பாவை மறந்து தொலைந்தாள்…
நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று…
நிலவின் ஒளியை இழுத்தாள்…
பெண் : நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால்…
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்…
கண்ணன் தேடி வந்த மகள்…
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்…
பெண் : தான் இருக்கின்ற இடத்தினில்…
இருதயம் காணவில்லை…
எங்கே எங்கே சொல் சொல்…
பெண் : கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டுபிடிக்க…
குழு : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…
—BGM—
பெண் : கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு…
காந்தம் போல இழுக்கும்…
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது…
மாய கண்ணன் வழக்கம்…
பெண் : காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட…
காதல் ராதை அலைந்தால்…
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு…
ஆசை நோயில் விழுந்தால்…
பெண் : உதடு துடிக்கும் பேச்சு இல்லை…
உயிரும் இருக்கு மூச்சு இல்லை…
வந்த பாதை நினைவு இல்லை…
போகும் பாதை புரியவில்லை…
பெண் : உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்…
பேதை ராதை ஜீவன் கொள்வாள்…
கண்ணா இங்கே வா வா…
பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க…
கண்ணா வா உயிர் கொடுக்க…
பெண் : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…
—BGM—
பெண் : கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று…
அந்த கன்னி கண்கள் விழித்தாள்…
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல…
வெறும் காற்று என்று திகைத்தாள்…
பெண் : கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி…
கைகள் நீட்டி அழைத்தாள்…
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை…
இங்கு கண்டு பிடித்தாள்…
பெண் : விழியின் சிறகை வாங்கிக்கொண்டு…
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்…
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு…
கூவி கூவி அவள் அழைத்தாள்…
பெண் : அவள் குறை உயிர் கரையும்முன்…
உடல் மண்ணில் சரியும்முன்…
கண்ணா கண்ணா நீ வா…
பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க…
கண்ணா வா உயிர் கொடுக்க…
—BGM—
Notes : Radhai Manathil Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. ராதை மனதில் பாடல் வரிகள்.