பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
லலிதா ஆனந்த் | விஜய் யேசுதாஸ், சைந்தவி & தன்வி ஷா | பிரேம்ஜி அமரன் | அதே நேரம் அதே இடம் |
Vennilavu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…
பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…
ஆண் : கோயில் சிலைகள் மீது காணும் நிலைகள் யாவும்…
காயம் காணும்போது அட அது ஒரு கலையென ஆகும்…
பெண் : ஆதி மனிதன் வாழ்வில் ஆடைதானே ஏது…
ஆதாம் ஏவாள் போல நாம் இருப்பது இயற்கையும் ஆகும்…
ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…
பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…
—BGM—
ஆண் : தொடங்கிட தயங்கமும் ஏனோ…
பின்பு தொடர்ந்திட ஏக்கமும் ஏனோ…
எதனாலே இந்த தாகம்…
உன்னை உயிருடன் குடித்திடத் தானோ…
பெண் : விழிகளில் மயக்கமும் ஏனோ…
இது விடிகிற வரையினில்தானோ…
பகல் நேரம் வரும்போது…
நீ மிக மிக நல்லவன்தானோ…
ஆண் : ஏ… காமம் ஒரு திமிங்கலம்தானோ…
தேகங்களும் விழுங்கிடத்தானோ…
நானும் இதில் பிழைத்திடுவேனோ… ஏனோ…
பெண் : கடிகாரம் முள்ளுக்குதானே…
கடிவாளம் இல்லவே இல்லை…
காமம் மணி பார்ப்பதே இல்லை… ஏனோ…
ஆண் : ஓஹோ… நேரம் பார்த்துக் கூறும்…
மேகம் எங்குமில்லை…
காலம் தாண்டி வாழும் தேசம்…
கட்டிலறைதானே பெண்ணே…
—BGM—
ஆண் : மெல்லிடை இளைக்கிய நூலின்…
அதை அடிகடி படிப்பவன் நானே…
சலிக்காத உணவாகும்…
அந்த உணவெது உதடுகள்தானே…
பெண் : ஹே… மரங்கொத்தி பறவையை போலே…
என் உடலினில் காயங்கள் தந்தாய்…
வலி கூட சுகம்தானே அதில் துடிப்பவள் வசிப்பவள் நானே…
ஆண் : ஏ… மலை பாதை இடையினில் பார்த்தேன்…
வேகத்தடை நெஞ்சினில் பார்த்தேன்
விபத்தாக்கும் விழிகளை பார்த்தேன் வா நீ…
பெண் : ஏஹே… நீச்சல் என்றால் பழகிட வேண்டும்…
பூப்பறிக்க பயிற்சியும் வேண்டாம்…
பெண்ணுடலும் பூச்செடியாகும் வா நீ…
ஆண் : ஓ… சேலை கசங்கிடாமல்…
நானும் கட்டி பிடிப்பேன்…
ஊரும் மறந்து பேரும் மறந்து…
பூமி விட்டு வா போகலாம்…
—BGM—
ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…
பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…
Notes : Vennilavu Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. வெண்ணிலவு பாடல் வரிகள்.