Tag Archives: Brother Sister Songs

தென்கிழக்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன்ஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Then Kizhakku Cheemayile Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

பெண் : தாய் வீட்டுப் பேரும்…
தாய் மாமன் சீரும்…
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே…

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா…
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே…

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே…
ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே…
பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

BGM

ஆண் : செங்காட்டு மண்ணும்…
நம் வீட்டுப் பொண்ணும்…
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே…

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா…
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே…

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே…
பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே…
ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய…

BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

ஆண் : உலகம் பொய்தானா…
உறவும் பொய்தானா…
ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா…

பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்…
குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா…

ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி…
பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி…
ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…


Notes : Then Kizhakku Cheemayile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்.


அண்ணனவிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாவாத்தியார் வீட்டு பிள்ளை

Annana Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…

ஆண் : சிந்தையில் வைத்த அண்ணன்தான்…
பந்தலில் நிக்க கூடாதா…
அண்ணனும் அங்கே வந்து நின்று…
அட்சதை போட கூடாதா…

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…

BGM

ஆண் : யாருக்கு என்ன தீங்கு செய்தேன்…
ஏன் இந்த சோதனை…
தங்கச்சிக்குதான் தெரியும் அண்ணனின் வேதனை…

ஆண் : சொந்தங்கள் எல்லாம் போயாச்சு…
சொப்பனம் போலே ஆயாச்சு…
பந்தங்கள் எல்லாம் என்னாச்சு…
பட்டது போதும் என்றாச்சு…

ஆண் : மங்கள வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது…
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது…
மங்கள வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது…
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது…

ஆண் : அண்ணன் இங்கே தேடுமோ…
கண்ணீரிலே ஆடுமோ…
அந்நாளிலே நான் வளர்த்த…
வண்ணக்கிளி வாடுமோ…

ஆண் : அண்ணன விட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா… ஆ…

BGM

ஆண் : நேசம் வச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி…
நீரை விட்டு அழிச்சாலும் நீங்குமா தலை விதி…

ஆண் : என் விதி இப்போ என்னோடு…
யாரிடம் சொல்ல என் பாடு…
கற்பனை செய்து கண்ணோடு…
கட்டியதெல்லாம் மண் வீடு…

ஆண் : ஊருக்கே பாடம் சொல்லும்…
வாத்தியார் வீட்டு பிள்ளை…
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்…
சரிவர படிக்கவில்லை…

ஆண் : ஊருக்கே பாடம் சொல்லும்…
வாத்தியார் வீட்டு பிள்ளை…
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்…
சரிவர படிக்கவில்லை…

ஆண் : நேரம் ஒன்று உண்டாகும்…
எல்லாம் அன்று நன்றாகும்…
ஒண்ணாகத்தான் நாம் இருக்க…
பின்னால் ஒரு நாள் வரும்…

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…

ஆண் : சிந்தையில் வைத்த அண்ணன்தான்…
பந்தலில் நிக்க கூடாதா…
அண்ணனும் அங்கே வந்து நின்று…
அட்சதை போட கூடாதா…

ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…


Notes : Annana Vittu Song Lyrics in Tamil. This Song from Vaathiyaar Veettu Pillai (1989). Song Lyrics penned by Vaali. அண்ணனவிட்டு பாடல் வரிகள்.


வெண்மேகம் விண்ணில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநான் சிகப்பு மனிதன்

Venmegam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…

ஆண் : விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால்தானே…

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…

BGM

ஆண் : ஏழேழு ஜென்மம் இந்த…
அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்…
எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்…

ஆண் : உன் கண்ணில் கண்ணீர் வந்தால்…
எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்…
உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்…

ஆண் : உன் கண்கள் இல்லாமல்…
என் கண்கள் பார்க்குமோ…
உன் கால்கள் இல்லாமல்…
என் கால்கள் போகுமோ…

ஆண் : என் வானம் விடிவதும் பகல் முடிவதும்…
உந்தன் பார்வையால்…

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…

BGM

ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம்…
உன்னை வந்து பெண் பார்க்க…
மையேந்தும் கண்ணே உந்தன்…
கண்ணோ மண் பார்க்க…

ஆண் : கண்ணோரம் வெட்கம் வந்து…
நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட…
காலாலே வண்ணக்கோலம் மண்ணில் நீ போட…

ஆண் : செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே…
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே…
சொன்னாலும் இனிக்குது…
நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே… ஏஏ…

ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…

ஆண் : விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால்தானே…

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…


Notes : Venmegam Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Pulamaipithan. வெண்மேகம் விண்ணில் பாடல் வரிகள்.


மணமாலையும் மஞ்சளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாவாத்தியார் வீட்டு பிள்ளை

Manamaalaiyum Manjalum Song Lyrics in Tamil


ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

BGM

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

ஆண் : தாழம்பூ கைகளுக்கு தங்கத்தில் செய்த காப்பு…
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு…

ஆண் : உன் அண்ணன் போட வேண்டும்…
ஊரெல்லாம் காண வேண்டும்…
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்க வேண்டும்…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே வா… ஆஅ…
செம்பவழ கொடியே வா… ஆஅ…
பிறை போல் நுதலில் அணியும் திலகம்…
நிலையாய் வாழட்டுமே…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

BGM

ஆண் : ஓராண்டு போனப் பின்பு…
உன் பிள்ளை ஓடி வந்து…
தாய் மாமன் தோளில் நின்று…
பொன்னூஞ்சல் ஆடும் அன்று…

ஆண் : ஏதேதோ காட்சி வந்து…
கண்ணுக்குள் ஆடுதம்மா…
ஆனந்த மின்னல் ஒன்று…
நெஞ்சுக்குள் ஓடுதம்மா…

ஆண் : குங்குமத்து சிமிழே வா… ஆ…
சங்கம் தந்த தமிழே வா… ஆஅ…
கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த…
மலரே நீ வாழ்கவே…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…


Notes : Manamaalaiyum Manjalum Song Lyrics in Tamil. This Song from Vaathiyaar Veettu Pillai (1989). Song Lyrics penned by Pulamaipithan. மணமாலையும் மஞ்சளும் பாடல் வரிகள்.


ஒரு தங்கரதத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன்இளையராஜாதர்மயுத்தம்

Oru Thanga Rathathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
என் தெய்வம் தந்த…
என் தெய்வம் தந்த என் தங்கை…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…

BGM

ஆண் : செம்மண்ணிலே தண்ணீரை போல்…
உண்டான சொந்தம் இது…
சிந்தாமணி ஜோதியை போல்…
ஒன்றான பந்தம் இது…

ஆண் : தங்கை அல்ல…
தங்கை அல்ல தாயானவள்…
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…

BGM

ஆண் : கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா…
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா…
என் ஆலயம் பொன் கோபுரம்…
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…

BGM

ஆண் : ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனம்மா…
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனம்மா…
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று…
பல்லாண்டு நான் பாடுவேன்…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
என் தெய்வம் தந்த…
என் தெய்வம் தந்த என் தங்கை…

ஆண் : ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு…


Notes : Oru Thanga Rathathil Song Lyrics in Tamil. This Song from Dharma Yuddham (1979). Song Lyrics penned by Kannadasan. ஒரு தங்கரதத்தில் பாடல் வரிகள்.


Malargalaipol Thangai Song Lyrics in Tamil

மலர்களைப் போல் தங்கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாசமலர்

Malargalaipol Thangai Song Lyrics in Tamil


ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…

BGM

ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…

BGM

ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

ஆண் : கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

BGM

ஆண் : மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை…
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டால்…
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை…
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டால்…

ஆண் : மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்…

BGM

ஆண் : மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்…
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

BGM

ஆண் : ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்…
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்…

BGM

ஆண் : வாழிய கண்மணி வாழிய என்றான்…
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

BGM

ஆண் : பூமணம் கொண்டவள்…
பால்மணம் கண்டாள்…
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்…

ஆண் : பூமணம் கொண்டவள்…
பால்மணம் கண்டாள்…
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்…

BGM

ஆண் : மாமனைப் பாரடி கண்மணி என்றாள்…
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்…

ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…

ஆண் : கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

ஆண் : கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…
பறந்து சென்றால்…
பறந்து சென்றால்…


Notes : Malargalaipol Thangai Song Lyrics in Tamil. This Song from Pasamalar (1961). Song Lyrics penned by Kannadasan. மலர்களைப் போல் தங்கை பாடல் வரிகள்.


ஐம்பது கிலோ தங்கம்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராம நாராயணன்கிருஷ்ணராஜ் & கே.எஸ். சித்ராதேவாகுட்டி பிசாசு

Ambadhu Kilo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…
சென்னையில என்னைப்போல பணக்காரன் யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால…

ஆண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீ துடிப்ப…
தேனாண்டாள் தெய்வம் நீயம்மா…
நான் அண்ணன் இல்ல பிள்ளைதானம்மா…

BGM

பெண் : கருப்பு நிற தங்கம்டா என் அண்ணன்தான்…
வந்து நின்னா வண்டலூரு சிங்கம்தான்…
சென்னையில என்னப்போல பணக்காரி யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால…

பெண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீத்துடிப்ப…
மதுர வீரன் சாமி நீ அய்யா…
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா…

BGM

ஆண் : கோயிலுக்குப் போனதில்ல…
பூசையுந்தான் செஞ்சதில்ல…
என் குலசாமி இங்கிருக்க…
பிற சாமி எல்லாம் அப்புறந்தான்…

ஆண் : பாசமலர் படமிருக்கு…
நல்லத்தங்கா கதையிருக்கு…
இந்தத் தங்கை கதைக்கு முன்னால்…
அந்தக் கதையெல்லாம் கற்பனைதான்…

ஆண் : நோய் வந்து நான் படுத்தால்…
துடிதுடிப்பா பதைபதைப்பா…
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா…

ஆண் : நோய் வந்து நான் படுத்தால்…
துடிதுடிப்பா பதைபதைப்பா…
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா…

ஆண் : தாயப்போல ஒஸ்த்திடா என் தங்கச்சி…
இந்தத்தொப்புள் கொடி உறவுடா என் கட்சிக்கொடி… ஓ…

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…

BGM

பெண் : ஏடெடுத்துப் படிச்சதில்ல…
எழுத்தாணி புடிச்சதில்ல…
எங்கண்ணன்போல அறிவாளி…
எந்த வெள்ளக்கார தொரையுமில்ல…

பெண் : நம்பியாரு மீசதான்…
எம்ஜிஆரு மனசுதான்…
இவன் பாசக்காரத்தெப்பன்தான்…
வாழுமிடமோ குப்பம்தான்…

பெண் : ஜொரம் வந்து நான் கிடந்தா…
பத்தியந்தான் இவன் இருப்பான்…
பைத்தியமா தவிச்சிடுவான்…

பெண் : ஜொரம் வந்து நான் கிடந்தா…
பத்தியந்தான் இவன் இருப்பான்…
பைத்தியமா தவிச்சிடுவான்…

பெண் : ஒடம்புக்குள்ள உசுரிருக்கு சொல்வாங்க…
என் உசுருமட்டும் எதிர நிக்கிது பாருங்கோ… ஹோ…

ஆண் : ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…

பெண் : சென்னையில என்னைப்போல பணக்காறி யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால…

ஆண் : நான் சிரிச்சா நீ சிரிப்ப…
நான் அழுதா நீ துடிப்ப…

பெண் : மதுர வீரன் சாமி நீ அய்யா…
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா…

BGM


Notes : Ambadhu Kilo Song Lyrics in Tamil. This Song from Kutti Pisasu (2010). Song Lyrics penned by Rama Narayanan. ஐம்பது கிலோ தங்கம்டா பாடல் வரிகள்.


அழகான சின்ன தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஷங்கர் மகாதேவன் & ஹரிணிதேவாசமுத்திரம்

Azhagana Chinna Devathai Song Lyrics in Tamil


BGM

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

ஆண் : அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…
நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…

ஆண் : இது போல சொந்தம் தந்ததால்…
இறைவா வா நன்றி சொல்கிறோம்…
உனக்கேதும் சோகம் தோன்றினால்…
இங்கே வா இன்பம் தருகிறோம்…
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்…
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

BGM

ஆண் : நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே…
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்…
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை…
நாங்கள் இங்கு அழித்திடுவோமே…

பெண் : வந்து வந்து மோதும்…
சின்ன சின்ன சோகம் எல்லாம்…
ஒன்று சேர்ந்து நாங்கள்…
ஊதும் போது ஓடிப்போகும்…

BGM

ஆண் : எங்களுக்குள் நாங்கள்…
செல்ல பேரை வைத்துக்கொண்டு…
செல்லமாக நாளும்…
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு…

பெண் : அள்ளி அள்ளி அன்பை தந்து…
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்…
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

ஆண் : ஹே ஹே ஹே… அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…
நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…

BGM

ஆண் : ஓ… கோடை வெயில் நேர இளநீரை போல…
இதமாகதானே நாங்கள் பேசுவோம்…
சுமைகளை சுகமாய் ஏற்போம்…
சுகங்களை சமமாய் பிரிப்போம்…

பெண் : விட்டு தந்து வாழ…
நம்மை போல யாரு யாரு…
வண்டிக்கட்டிக் கொண்டு…
எட்டு திக்கும் தேடு தேடு…

ஆண் : தூங்கும் போது கூட…
புன்னகைகள் மின்ன மின்ன…
தங்கை தொட்டு தந்தால்…
தண்ணீர் கூட தீர்த்தமாகும்…

பெண் : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை…
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை…
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

ஆண் : அழகான சின்ன தேவதை…
அவள்தானே எங்கள் புன்னகை…

பெண் : நாள் தோறும் இங்கு பண்டிகை…
நம் வானில் வான வேடிக்கை…

ஆண் : இது போல சொந்தம் தந்ததால்…
இறைவா வா நன்றி சொல்கிறோம்…

பெண் : உனக்கேதும் சோகம் தோன்றினால்…
இங்கே வா இன்பம் தருகிறோம்…

குழு : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்…
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…
ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…
நாம் பாடும் பாட்டை தினம்…
கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…


Notes : Azhagana Chinna Devathai Song Lyrics in Tamil. This Song from Samudhiram (2001). Song Lyrics penned by Kalaikumar. அழகான சின்ன தேவதை பாடல் வரிகள்.


ரத்தத்தின் ரத்தமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைஹரிசரண் & மதுமிதாவிஜய் ஆண்டனிவேலாயுதம்

Rathathin Rathamay Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…
சொந்தத்தின் சொந்தமே…
நான் இயங்கும் உயிர் துடிப்பே…

ஆண் : அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே…
என் வாழ்க்கை உனக்கல்லவா…
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்…
என் வாசம் உனக்கல்லவா…

ஆண் : ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…

BGM

ஆண் : அன்பென்ற ஒற்றை சொல்லை…
போல் ஒன்று வேறு இல்லை…
நீ காட்டும் பாசத்துக்கு…
தெய்வங்கள் ஈடு இல்லை…

ஆண் : என் நெஞ்சம் உன்னை மட்டும்…
கடிகார முள்ளை சுற்றும்…
நொடி நேரம் நீ பிரிந்தால்…
அம்மாடி உயிரே போகும்…

ஆண் : நீ சொன்னால் எதையோ செய்வேன்…
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்…

ஆண் : செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்…
என் வாசம் உனக்கல்லவா… ஓ ஹோ ஓ…

BGM

ஆண் : தாஜ்மஹால் உனக்கு…
தங்கத்தில் கட்ட போறேன்…
மேகத்தில் நூல் எடுத்து…
சேலைதான் நெஞ்சு தாரேன்…

பெண் : என்னோடு நீ இருந்தால்…
வோ் ஏதும் ஈடாகுமா…
கண்டாங்கி சேல போதும்…
வோ் ஏதும் நான் கேப்பேனா…

ஆண் : வானத்தில் நீலம் போலே…
பூமிக்குள் ஈரம் போலே…

பெண் : இருட்டாலும் எரியாது…
முடிந்தாலும் முடியாது…
நாம் கொண்ட உறவல்லவா…

BGM


Notes : Rathathin Rathamay Song Lyrics in Tamil. This Song from Velayudham (2011). Song Lyrics penned by Annamalai. ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள்.


என்ன தவம் செஞ்சிபுட்டோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுதினா & சுவர்ணலதாதினாதிருப்பாச்சி

Enna Thavam Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்…
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா…
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா…

BGM

ஆண் : காணும் காய்ச்சி தீ புடிக்க…
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க…
மீள நானும் கரை சேர்த்து போறேனே…
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே…

ஆண் : கண்ணே கற்பகமே…
கண்ணுக்குள்ள சொப்பணமே…
தூங்காம அண்ணன் கூட…
எப்போதும் கூட இரு…

ஆண் : என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே…
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே…
கருவீட்டில் பூத்துபுட்டோம்…
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்…

பெண் : அவதாரம் போல நீயும் அவதரித்தாயே…
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே…
செவந்த இடம் பொறந்த இடம்…
உதிர்ந்த இடம் புகுந்த இடம்…

ஆண் & பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்…

பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை…

BGM


Notes : Enna Thavam Song Lyrics in Tamil. This Song from Thirupaachi (2005). Song Lyrics penned by Perarasu. என்ன தவம் செஞ்சிபுட்டோம் பாடல் வரிகள்.