பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | வாத்தியார் வீட்டு பிள்ளை |
Annana Vittu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
ஆண் : சிந்தையில் வைத்த அண்ணன்தான்…
பந்தலில் நிக்க கூடாதா…
அண்ணனும் அங்கே வந்து நின்று…
அட்சதை போட கூடாதா…
ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
—BGM—
ஆண் : யாருக்கு என்ன தீங்கு செய்தேன்…
ஏன் இந்த சோதனை…
தங்கச்சிக்குதான் தெரியும் அண்ணனின் வேதனை…
ஆண் : சொந்தங்கள் எல்லாம் போயாச்சு…
சொப்பனம் போலே ஆயாச்சு…
பந்தங்கள் எல்லாம் என்னாச்சு…
பட்டது போதும் என்றாச்சு…
ஆண் : மங்கள வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது…
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது…
மங்கள வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது…
இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது…
ஆண் : அண்ணன் இங்கே தேடுமோ…
கண்ணீரிலே ஆடுமோ…
அந்நாளிலே நான் வளர்த்த…
வண்ணக்கிளி வாடுமோ…
ஆண் : அண்ணன விட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா… ஆ…
—BGM—
ஆண் : நேசம் வச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி…
நீரை விட்டு அழிச்சாலும் நீங்குமா தலை விதி…
ஆண் : என் விதி இப்போ என்னோடு…
யாரிடம் சொல்ல என் பாடு…
கற்பனை செய்து கண்ணோடு…
கட்டியதெல்லாம் மண் வீடு…
ஆண் : ஊருக்கே பாடம் சொல்லும்…
வாத்தியார் வீட்டு பிள்ளை…
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்…
சரிவர படிக்கவில்லை…
ஆண் : ஊருக்கே பாடம் சொல்லும்…
வாத்தியார் வீட்டு பிள்ளை…
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்…
சரிவர படிக்கவில்லை…
ஆண் : நேரம் ஒன்று உண்டாகும்…
எல்லாம் அன்று நன்றாகும்…
ஒண்ணாகத்தான் நாம் இருக்க…
பின்னால் ஒரு நாள் வரும்…
ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
ஆண் : சிந்தையில் வைத்த அண்ணன்தான்…
பந்தலில் நிக்க கூடாதா…
அண்ணனும் அங்கே வந்து நின்று…
அட்சதை போட கூடாதா…
ஆண் : அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
Notes : Annana Vittu Song Lyrics in Tamil. This Song from Vaathiyaar Veettu Pillai (1989). Song Lyrics penned by Vaali. அண்ணனவிட்டு பாடல் வரிகள்.