பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | வாத்தியார் வீட்டு பிள்ளை |
Manamaalaiyum Manjalum Song Lyrics in Tamil
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
—BGM—
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
ஆண் : தாழம்பூ கைகளுக்கு தங்கத்தில் செய்த காப்பு…
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு…
ஆண் : உன் அண்ணன் போட வேண்டும்…
ஊரெல்லாம் காண வேண்டும்…
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்க வேண்டும்…
ஆண் : சின்னஞ்சிறு கிளியே வா… ஆஅ…
செம்பவழ கொடியே வா… ஆஅ…
பிறை போல் நுதலில் அணியும் திலகம்…
நிலையாய் வாழட்டுமே…
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
—BGM—
ஆண் : ஓராண்டு போனப் பின்பு…
உன் பிள்ளை ஓடி வந்து…
தாய் மாமன் தோளில் நின்று…
பொன்னூஞ்சல் ஆடும் அன்று…
ஆண் : ஏதேதோ காட்சி வந்து…
கண்ணுக்குள் ஆடுதம்மா…
ஆனந்த மின்னல் ஒன்று…
நெஞ்சுக்குள் ஓடுதம்மா…
ஆண் : குங்குமத்து சிமிழே வா… ஆ…
சங்கம் தந்த தமிழே வா… ஆஅ…
கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த…
மலரே நீ வாழ்கவே…
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…
ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
Notes : Manamaalaiyum Manjalum Song Lyrics in Tamil. This Song from Vaathiyaar Veettu Pillai (1989). Song Lyrics penned by Pulamaipithan. மணமாலையும் மஞ்சளும் பாடல் வரிகள்.