பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | நான் சிகப்பு மனிதன் |
Venmegam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண்மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…
ஆண் : விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால்தானே…
ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…
—BGM—
ஆண் : ஏழேழு ஜென்மம் இந்த…
அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்…
எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்…
ஆண் : உன் கண்ணில் கண்ணீர் வந்தால்…
எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்…
உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்…
ஆண் : உன் கண்கள் இல்லாமல்…
என் கண்கள் பார்க்குமோ…
உன் கால்கள் இல்லாமல்…
என் கால்கள் போகுமோ…
ஆண் : என் வானம் விடிவதும் பகல் முடிவதும்…
உந்தன் பார்வையால்…
ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…
—BGM—
ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம்…
உன்னை வந்து பெண் பார்க்க…
மையேந்தும் கண்ணே உந்தன்…
கண்ணோ மண் பார்க்க…
ஆண் : கண்ணோரம் வெட்கம் வந்து…
நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட…
காலாலே வண்ணக்கோலம் மண்ணில் நீ போட…
ஆண் : செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே…
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே…
சொன்னாலும் இனிக்குது…
நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே… ஏஏ…
ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…
ஆண் : விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால்தானே…
ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…
Notes : Venmegam Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Pulamaipithan. வெண்மேகம் விண்ணில் பாடல் வரிகள்.