பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ஹரிஷ் ராகவேந்திரா & ஜனனி | பரத்வாஜ் | பிரியசகி |
Kangalinal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…
ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…
ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…
ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
—BGM—
ஆண் : ஒரு வாய் உணவும்…
உள் நோக்கி செல்லாமல்…
தொண்டையில் தர்ணா செய்யுதே… ஓஓ…
பெண் : சலிப்பே இல்லாத…
தலைப்பில் நான் பேச…
காதல் ஒன்று தான் உணர்ந்தேன் அறிந்தேன்…
ஆண் : உதடுகளால் வரம் கொடுப்பாய்…
ஒதுங்கி நின்றால் ஜுரம் கொடுப்பாய்…
பெண் : சருகென நான் இருக்கயிலே…
நெருப்பு வைத்தாய் விழிகளிலே…
ஆண் : உன் மாதிரி உன் மாதிரி…
பெண் இந்த உலகில் இல்லை… ஓஹோஹோஹோ…
ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
—BGM—
பெண் : இலவம் பஞ்சிலே செய்திட்ட மேலாடை…
இரும்பாய் கணக்குது அய்யோ… ஹாஹாஹோ…
ஆண் : இரவில் தனியாய் இருக்கும் போதெல்லாம்…
ஐந்தாறு தலை அணை கிழித்தேன்… ஓஓ…
பெண் : உந்தன் நகத்தால் மெல்ல கிறுக்கி…
துடிக்க வைத்தாய் செல்ல பொறுக்கி…
ஆண் : குருதி எல்லாம் குளிர வைத்தாய்…
நரம்பை எல்லாம் அதிர வைத்தாய்…
பெண் : என் தேசத்தில் சந்தோஷத்தில்…
கல் கூட பூ பூக்குதே… ஓஹோஹோ…
ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…
ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…
ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…
ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
Notes : Kangalinal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. கண்களினால் பாடல் வரிகள்.