பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மகாகவி சுப்பிரமணிய பாரதி | ஹரிஷ் ராகவேந்திரா | இளையராஜா | பாரதி |
Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
—BGM—
ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…
ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
—BGM—
ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…
ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…
ஆண் : போனதெல்லாம் கனவினைப்போல்…
புதைந்தழிந்தே போனதனால்…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…
ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…
—BGM—
ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…
ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…
ஆண் : காண்பதெல்லாம் மறையுமென்றால்…
மறைந்ததெல்லாம் காண்போமன்றோ…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…
ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…
ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
Notes : Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நிற்பதுவே நடப்பதுவே பாடல் வரிகள்.