பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிஷ் ராகவேந்திரா & சின்மயி | யுவன் ஷங்கர் ராஜா | ஒரு கல்லூரியின் கதை |
Kadhal Yenbathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…
பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…
ஆண் : செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா…
இங்கு விழியின் வழிகளும் வரங்கள் அல்லவா…
பெண் : வரங்கள் என்பது அலைகள் அல்லவா…
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா…
ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…
பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…
ஆண் : கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்…
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்…
ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நானே…
வெட்ட வெளியிலே திரிந்தேன்…
உன் அருகில் வந்து தான் என்…
வேடந்தாங்கலை உணர்ந்தேன்…
ஆண் : உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே…
நீ இன்றி நானே வெறும் கூடு தானே…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை…
நீயே தந்தாய்…
ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…
பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…
—BGM—
ஆண் : காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்…
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும்…
ஆண் : உந்தன் அருகில் நானும் இருந்தால்…
நிமிடம் நொடிகள் என கரையும்…
எனை விலகி நீயும் பிரிந்தால்…
நேரம் பாரமாய் கணக்கும்…
ஆண் : உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்…
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்…
{ பெண் : காதல் வருவது புரிவதில்லையே…
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே…
பூக்கள் பூப்பதே தெரிவதில்லையே…
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே… } * (2)
—BGM—
Notes : Kadhal Yenbathu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் என்பது பாடல் வரிகள்.