பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கே கே & சுஜாதா மோகன் | யுவன் ஷங்கர் ராஜா | ஒரு கல்லூரியின் கதை |
Kangal Kandadhu Song Lyrics in Tamil
—BGM—
{ ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே… } * (2)
{ ஆண் : மரத்தின் கிளைகளில் மலர்கள் கண்டேன்…
வாசம் மட்டும் காணவில்லை…
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்…
காலடி அங்கே தெரியவில்லை… } * (2)
ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…
ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே…
—BGM—
ஆண் : தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்கலாம்…
நிஜத்தின் காயங்கள் ஆறாதே…
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்…
மனதில் பெய்யும் மழை அடங்காதே…
ஆண் : அடுத்த நாட்கள் இங்கு பத்திரமாக…
நடந்த நாடகம் முடிகிறதே…
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பிதான் வாழ்ந்த…
நட்பு என் மனதில் நெகிழ்கிறதே…
ஆண் : அட தொப்புள் கொடியின் உறவைத்தான்…
என் நியாபகம் அறிந்தது இல்லை…
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே…
இந்த நட்புக்கு வானமே எல்லை…
ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…
—BGM—
ஆண் : கால சங்கிலி மீண்டும் இணையலாம்…
காதல் சங்கிலி இணையாதே…
காற்று பேசித்தான் விதைத்த வார்த்தைகள்…
கரைந்து போனது திரும்பாதே…
ஆண் : பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில்…
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே…
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்…
காதல் பல முறை கொல்கிறதே…
ஆண் : நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே…
பல இரவும் பகலும் இங்கே…
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை…
என் நெஞ்சில் துயரம் இல்லை…
ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…
{ பெண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கண்ணீர் துளியில் கரையாதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலையாதே… } * (2)
{ பெண் : மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்…
மறுபடி பூத்திட மறக்காதே…
மாலையில் சூரியன் மறைந்த பிறகும்…
மறுநாள் உதிக்கும் மறக்காதே… } * (2)
பெண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
தொடர் கதைகள் தெரிந்துகொள்வாய்…
Notes : Kangal Kandadhu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் கண்டது பாடல் வரிகள்.