Tag Archives: ஹரிசரண்

வேறெதுவும் நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண்நிவாஸ் கே பிரசன்னாஜீரோ

Veredhuvum Nijamae Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…
வேறெதுவும் கனவே இல்லை…
நாம் இருவர் கனவே…

ஆண் : வழியும் துளிகள் நிஜமா இல்லை…
துடைக்கும் விரலோ நிஜமே…
இதழின் முத்தம் கனவா இல்லை…
முடியும் நொடியோ கனவே…

ஆண் : உயிரே உயிரே விழியோ நிஜமே…
அழகே அழகே இமைதான் கனவே…
இரவாய்… திறவாயடி…

BGM

ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே… ஹே…

BGM

ஆண் : இருளிலே புதைகிறாய்…
ஒளியென வருகிறேன்…
ஒலியிலே தொலைகிறாய்…
அமைதியை தருகிறேன்…

ஆண் : எதனால் விழியில் மயக்கம்…
எதனால் மனதில் தயக்கம்…
உறவே உறவே சிறகோ நிஜமே…
இணையே இணையே வானோ கனவே…
பறவாயடி… பறவாயடி…

ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…

ஆண் : வழியும் துளிகள் நிஜமா இல்லை…
துடைக்கும் விரலோ நிஜமே…
இதழின் முத்தம் கனவா இல்லை…
முடியும் நொடியோ கனவே…

BGM


Notes : Veredhuvum Nijamae Illai Song Lyrics in Tamil. This Song from Zero (2016). Song Lyrics penned by Madhan Karky. வேறெதுவும் நிஜமே பாடல் வரிகள்.


கடவுள் படைப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஹரிசரண்இளையராஜாஅம்மா கணக்கு

Kadavul Padaippil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுள் படைப்பில்…
என்னென்ன அதிசயம்…
ஒவ்வொன்றும் ஒரு விதம்…
அழகான அற்புதம்…

ஆண் : எல்லா உயிருக்கும்…
இங்கு அணைத்து அள்ளி தந்தான்…
இந்த மனித குலத்துக்காக…
ஒரு தாயை படைத்தது தந்தான்…

ஆண் : உயிரில் உயர்ந்தது…
இந்த மனித பிறவிதான்…
அதிலும் உயர்ந்தது…
நம் அன்னை பிறவிதான்…

ஆண் : தாயை போலே…
இங்கு ஒன்றும் இல்லையே…
அதை உணர்ந்தால் போதும்…
அதற்க்கு ஈடு இல்லையே…

BGM


Notes : Kadavul Padaippil Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Ilaiyaraja. கடவுள் படைப்பில் பாடல் வரிகள்.


பொல்லா பையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & ஸ்வேதா மோகன்டி. இமான்றெக்க

Pollapaiyya Song Lyrics in Tamil


பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன் டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…

BGM

பெண் : யே… பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

ஆண் : ஒன்னும் புரியாம ஒரு ஆச…
அருவாள தூக்குது…
தன்ன தனி ஆளா என நாளும்…
பொலி போட பாக்குது…

பெண் : மொத்த உசுரும்…
உன்ன வந்து சேர ஏங்க…
சித்தம் கலங்கி…
நிக்குறேனே மூச்சு வாங்க…

ஆண் : பக்கத்துல பாசம் வர பல்லாக்கு…
உன்னால மல்லாந்து போறேன்…

பெண் : உள்ளத்துல நானும் கெட வம்பேதும் இல்லாம…
உன்கூட வாரேன் தாரேன்…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : உன்ன நெனச்சாலே…
பசி தூக்கம் பகையாகி போகுது…
சொல்ல நெனச்சாலும் வரும் வார்த்த…
கொட சாஞ்சு ஓடுது…

ஆண் : தொண்ட குழியில்…
முள்ள வச்சு போகும் ஆச…
உள்ள வரையில்…
முத்தம் வைக்க ஏங்கும் மீச…

பெண் : வெக்கத்துல தேகம் பட…
பொல்லாத சந்தோசம் கும்மாளம் போட…

ஆண் : ரத்தத்துல வேகம் தொட…
உன்னோட கை ரெண்டும் என்னாத்த மூட கூட…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…


Notes : Pollapaiyya Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. பொல்லா பையா பாடல் வரிகள்.


நீ வரைந்த ஓவியம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஹரிசரண்கோபி சுந்தர்தள்ளி போகாதே

Nee Varaindha Oviyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…

ஆண் : ஓர் உறவு மட்டுமே…
இதயம் ஆழத்தின் தீபமா…
அது யார் என்று கேள்வியே…
மனித பிறவியின் பயணமா…

ஆண் : என்னோடு வருவாயோ…
விண்ணோடு மறைவாயோ…

ஆண் : நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…

BGM

ஆண் : ஊஞ்சல் ஆடும்போது…
உன் கண்கள் ரெண்டும் மூடும்…
ஊடல் ஆடும்போது…
பல கண்கள் தோன்றுமே…

ஆண் : நானும் நீயும் வாழ்ந்த நாட்கள்…
போதவில்லையே…
நீயும் நீயும் வாழும் வாழ்வு…
ஞாயம் இல்லையே…

ஆண் : என்னோடு வருவாயோ…
விண்ணோடு மறைவாயோ…

BGM

ஆண் : மூன்று மௌனம் இங்கே…
ஒன்றோடு ஒன்று மோதும்…
யாரின் மௌனம் இன்று…
வெளியேற கூடுமோ…

ஆண் : காதல் எண்ண பஞ்சு போன்ற…
பூனை பாதமா…
காலம் போக போக மெல்ல…
நெஞ்சை கீருமா…

ஆண் : நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…

ஆண் : ஓர் உறவு மட்டுமே…
இதயம் ஆழத்தின் தீபமா…
அது யார் என்று கேள்வியே…
மனித பிறவியின் பயணமா…

ஆண் : என்னோடு வருவாயோ…
குழு : வருவாயோ…
ஆண் : விண்ணோடு மறைவாயோ…
குழு : மறைவாயோ…

ஆண் : என்னோடு வருவாயோ…
குழு : வருவாயோ…
ஆண் : விண்ணோடு மறைவாயோ…
குழு : மறைவாயோ…


Notes : Nee Varaindha Oviyam Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. நீ வரைந்த ஓவியம் பாடல் வரிகள்.


தொடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்மாயா, ஹரிசரண் & ராஜு கிருஷ்ணமூர்த்தியுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Thoduven Thoduven Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM

ஆண் : ஏழு வண்ணங்களின் நிறமா நீ…
விண்ணின் தாவரத்தின் விதையா நீ…
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ…
என்ன நீ என்ன நீ…

ஆண் : பூவில் பூத்திருக்கும் பனியா நீ…
மௌனக் கூச்சலிடும் இசையா நீ…
முத்தம் சேகாிக்கும் முகமா நீ…
தூண்டில் பாா்வையால் தொலைந்துவிட்டேன்…

பெண் : ஆசை அலைகள் மனசுக்குள்…
மெல்ல மெல்ல வீசுதடா…
ஆனால் இதழ்கள் வயிற்றினில்…
உண்மை சொல்ல கூசுதடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான் தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்… ஹே ஹே…

BGM

ஆண் : கண்ணால் காதலினை மெதுவாய் சொல்…
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்…
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்…
சொல்லடி சொல்லடி…

ஆண் : பாதிராத்திாியில் விழித்தேனே…
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே…
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே…
ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்…

பெண் : உன் போல் இவளின் விழிக்குள்ளே…
தூக்கம் தூக்கம் இல்லையடா…
ஏனோ இதயம் அறைக்குள்ளே…
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா…

BGM

ஆண் : தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…

ஆண் : விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

ஆண் : அன்பே நீ என் ஆயுள்தானே… ஓஹோ ஓ…
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே… ஹே ஹே ஓஹோ ஓ…

ஆண் : இருவிழி பாா்வை ஊடகம்…
இது ஒரு காதல் நாடகம்…
என் வானில் என் வானில்…
விண்மீன் எல்லாம் மழைத்துளியே…

BGM


Notes : Thoduven Thoduven Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Kabilan. தொடுவேன் பாடல் வரிகள்.


ஜல்சா பண்ணுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரஞ்சித், திப்பு, பிரேம்ஜி அமரன், ஹரிசரண் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Jalsa Pannungada Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…

ஆண் : இருக்குற வரைக்கும் அனுபவிக்க…
இளமை ஏத்துக்கடா…
வருகுற வரைக்கும் லாபமடா…
வசதிய தேடுங்கடா… கோ…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : ஞாபகம் வந்ததடா…
அந்த நாள் ஞாபகம் வந்ததடா…
நண்பனை விட ஒருத்தன்…
லைஃப்வுக்கு தேவை இல்லையடா…

ஆண் : நட்புக்கு கூட கற்புகள் உண்டு…
நல்லா தெரிஞ்சுக்கடா…
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா…
வெற்றிகள் குமியுமடா…
நம் வெற்றிகள் குமியுமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : உழைக்கும் கைய நம்பி…
நாளைக்கு உலகமே இருக்குதடா…
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா…
ஊரே வணங்குமடா…

ஆண் : நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்…
பிரிவே இல்லையடா…
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்…
நம்பிக்கை வையிங்கடா…
என் மேல நம்பிக்கை வையிங்கடா… வா…

ஆண் : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

BGM

ஆண் : காதல் வந்திச்சின்னா…
முகத்தில கலர் பல தெரியுமடா…
கண்ணாடி முன்னாடி நீ நின்னா…
கவர்ச்சியும் தோனுமடா…

ஆண் : காதலி இருந்தா கவலைகள் தீரும்…
காதல் பண்ணுங்கடா…
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி…
நல்லா இருக்குமடா…
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : டாவுல விழுந்தாக்கா…
மனசு நோவுல அழுகுமடா…
தீவுல இருப்பதுபோல்…
திசையே தெரியாம போகுமடா…

ஆண் : இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா…
இன்னமும் இருக்குதடா…
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு…
உஷாரா இருந்துக்கடா…
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

குழு : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…

BGM


Notes : Jalsa Pannungada Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஜல்சா பண்ணுங்கடா பாடல் வரிகள்.


விலகாதே எனதுயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்ஒரு குப்பைக் கதை

Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil


BGM

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

BGM

ஆண் : மானே ஏனோ உந்தன் மௌனம் புரியவில்லை…
உன்னை தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை…
ஆனால் உன் மேல் உள்ள காதலும் குறையவில்லை…

ஆண் : வழி தெரியாத ஒளி தெரியாத…
ஒரு வித காட்டில் மாட்டி கொண்டேன்…
என்னை அறியாமல் நீ செல்லும் போது காயம் கொண்டேனே…
காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

BGM

ஆண் : தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி…
பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி…
ஆஆ… ஒரு நாள் வருவாய் என்று எல்லாம் ஏங்குதடி…

ஆண் : சிறு பிள்ளை தவறை தாய் அறிவாலே…
அது போல் என்னை மன்னிப்பாயா…
இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ…
சொல்காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : ஓஹோஓ… பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே… ஹோ ஓஓ…

BGM

ஆண் : எனதுயிரே…

BGM


Notes : Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. விலகாதே எனதுயிரே பாடல் வரிகள்.


முதல் முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்ஹரிசரண், ஹரிணி & திப்புபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Mudhal Murai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…

ஆண் : நீ விளையாட்டு பிள்ளை…
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை…
எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

BGM

ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே…
வானிலையும் மாறி போகுதே…
நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே…

பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே…
என் உதடும் கூற வேண்டுமே…
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே…

ஆண் : உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்…
பெண் : உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்…

ஆண் : நான் உன் மூச்சில் வாழும்…
வரம் அது எந்நாளும் போதும்…
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

BGM

ஆண் : நீ நடந்து போகும் வேளையில்…
கால் வலிக்கும் என்று கலங்குவேன்…
தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே…

பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்…
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்…
நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே…

ஆண் : சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே…
பெண் : பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே…

ஆண் : கரு மழை மேகம் யாவும்…
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்…
இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. முதல் முறை பாடல் வரிகள்.


சரியா இது தவறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷா ஸ்ரீதர்கல்லூரி

Sariya Ithu Thavara Song Lyrics in Tamil


BGM

ஆண் : சரியா இது தவறா…
சரியா இது தவறா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

ஆண் : கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே…
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

BGM

ஆண் : ஆணும் பெண்ணும் பழகிடும் போது…
காதல் மிருகம் மெல்ல மரைந்திருக்கும்…
ஆசை என்னும் வலையினை விரித்து…
அல்லும் பகலும் அது காத்துகிடக்கும்…

ஆண் : நண்பர்கள் என்று சொன்னல் சிரிக்குமே…
நாளைக்கு பார் என்று உரைக்குமே…
நெஞ்சுக்குள் துண்டில் விட்டு இழுக்குமே…
நம் நிழல் அதன் வளி நடக்குமே…

ஆண் : தடுப்பது போல நடித்திடும் போதும்…
தத்தி தாவி கண்கள் ஓடும்…
அடுத்தது என்ன அடுத்தது என்ன…
அணையை தாண்டி உள்ளம் கேட்க்கும் இது சரியா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

BGM

ஆண் : ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்…
மெளுகினிலே அதை படைத்துவிட்டான்…
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது…
மெதுமெதுவாய் அதை உருக வைத்தான்…

ஆண் : உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்…
யாருமே உலகத்தில் இல்லையே…
வெல்லத்தின் அளவுகள் தாண்டினால்…
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே…

ஆண் : தெடு தொடு என்று தூரத்தில் நின்று…
தூதுகள் சொல்லுது மயில்கள் ரெண்டு…
தொட தொட வந்தால் தொடுவானம் போல்…
தள்ளி செல்லுது மேகம் ஒன்று இது சரியா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…

ஆண் : கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே…
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா…

ஆண் : சரியா இது தவறா…
இந்த உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல…
சரியா காதல் தவறா…

ஆண் : வரமா இது வலயா…
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல…
வரமா காதல் வலயா…


Notes : Sariya Ithu Thavara Song Lyrics in Tamil. This Song from Kalloori (2007). Song Lyrics penned by Na. Muthukumar. சரியா இது தவறா பாடல் வரிகள்.


தேன் காற்று

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thaen Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…
அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள்…
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

BGM

பெண் : உன் கனக கனக மனம் உலக உலக கணம்…
எடையிட முடியாது…
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்…
முதுகில் கோது…

ஆண் : உன் அழகு அழகு முகம் பழக பழக…
சுகம் ஒரு துளி திகட்டாது…
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்…
நிகரும் ஏது…

பெண் : இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்…
சுமப்பது நீ அல்லவா…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…

ஆண் : அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

BGM

ஆண் : நான் அலையும் அலையும் அலை…
கரையை அடைவதில்லை…
கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை…
மாபெரும் அலை முடிவே இல்லை…

பெண் : நான் பொழியும் பொழியும் மழை…
பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை…
ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை…

ஆண் : ஓஹோ… நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு…
அதன் பின் நான் கிறுக்கு…

ஆண் : ஓ… தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள் பாதி கனாவில்…
எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…


Notes : Thaen Kaatru Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Thamarai. தேன் காற்று பாடல் வரிகள்.